Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் பல்லாயிரம் மக்களை பதைபதைக்க கொன்ற போது, ஆசியப்பிராந்தியத்தில் வல்லரசுகளின் நுழைவதற்கான திறவுகோலாக மனிதப்படுகொலை பாவிக்கப்படுவதற்காகவே தான் திட்டமிடப்பட்டுள்ளது.

உனக்கும், எனக்கும் மட்டுமல்ல எம்மைச் சுற்றி நடந்ததை மூடிமறைப்பதே எங்கும் அரங்கேறுகின்றது. ஒருபுறம் அரசு என்றால், மறுபுறம் புலிகளும் இதில் போட்டி போடுகின்றனர். இந்த எல்லைக்குள் தான் எதிர்க்கட்சிகள் முதல் சர்வதேச நாடுகள் வரை கைகோர்க்கின்றனர்

(சிங்கள) இனவாதத்துக்கு எதிரான (தமிழ்) இனவாதிகளின் யுத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதாவது புலிகள் நடத்திய போராட்டம் தோற்கடிப்பட்டுள்ளது. புலிகளின் வழிமுறை, பேரினவாதிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்காது என்பது தெளிவாக்கியுள்ளது. புலிகளால் தொடர்ந்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது என்பது, கடந்தகால வரலாறாக எம்முன் அம்மணமாகிக் கிடக்கின்றது. இப்படியிருக்க தொடர்ந்து மக்களை ஏய்த்துப் பிழைக்க,  தொடர்ந்து தாம்தான் போராட முடியும் என்பதைச் சொல்ல, நடந்ததை திரிப்பதும் புரட்டுவதும் தொடருகின்றது.

 

லண்டனைச் சேர்ந்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திடம் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.


பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அது தொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை)ஒளிபரப்பப் போவதாக சனல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.
 

நடுநிலை வகித்த அமைப்பு ஒன்றினை நம்பி மே 16ம் திகதி பிரபாகரனும் பல புலித்தளபதிகளும் சரணந்தனர் என்பதனையும், பின்னர் நடுநிலை வகித்தவர்கள் நயவஞ்சகமாக இவர்களை இலங்கை அரசிடம் கையளித்திருந்தனர் என்பதனையும், அதன் பின்னர் இருநாட்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிரபாகரனும் ஏனையோரும் கொடுரமான சித்திரவதைகளின் பின்னர் கொலை செய்யப்பட்டனர் என்பதனையும் விளக்கி, தோழர் இரயாகரன் 2009 மே 24ம் திகதி எழுதிய கட்டுரையினை இன்றைய காலத்தில் அதன் முக்கியத்துவம் கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம்.



புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

புலித் தலைமை சரணடைந்ததும், அவர்கள் கொல்லப்பட்டதும் உண்மை. புலித்தலைமை தன்னை பாதுகாத்துக்கொள்ள, இறுதியாக அது தேர்ந்தெடுத்தது சரணடைவை. அதற்கு அமையவே, இதில் மூன்றாம் தரப்பும் சம்பந்தப்பட்டது உண்மை. இந்தப் பின்னணியில் தான், இந்தப் படுகொலை அரங்கேறியது.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு மேற்கத்தைய நாடுகளோ அல்லது ஐநாவோ செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளன என்று அந்தப் போர் குறித்த விவரணப்படத்தை தயாரித்த பிரிட்டிஷ் தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தப் போரில் மேற்கொண்டதாகக் கூறப்படும் பல குற்றச்சாட்டுக்களை கசிந்த ஐநா ஆவணங்கள் மூலமும், அமெரிக்கத் தகவல் பரிமாற்ற கேபிள்களின் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மூலமும், ஐநாவின் முன்னாள் மூத்த அதிகாரிகளின் செவ்விகளின் மூலமுமே தாம் உறுதி செய்ததாக '' இலங்கை போர்க்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்'' என்ற அந்த விவரணப்படத்தின் தயாரிப்பாளரான கலும் மக்ரே கூறியுள்ளார்.

 

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் வகைதொகையின்றி துப்பாக்கித் தாக்குதல் நடத்திய ஒரு அமெரிக்க சிப்பாய் வீடுவீடாகச் சென்று சுட்டதில் குறைந்தபட்சம் 15 பேரைக் கொன்றிருக்கிறார். அவர்களில் 9 பேர் குழந்தைகளாவர்.

ஞாயிறன்று காலையில் இந்தத் சம்பவம் நடந்திருக்கிறது.

அந்தச் சிப்பாய் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் கொலைகளுக்கு முன்னதாக அவர் மனோ ரீதியாக உடைந்து போயிருந்ததாகக் கூறப்படுகின்றது.

சனல் 4 என்னும் பிரித்தானிய தொலைக்காட்சி எதிர்வரும் புதன் இரவு இலங்கை கொலைக்களம் என்னும் ஆவண தொகுப்பு ஒன்றினை ஒளிபரப்பவுள்ளது. பிரபாகரன் கொடுரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ள வீடியோவும் சனல் 4 இற்கு கிடைத்துள்ளதாக பிரித்தானிய டெயிலி மெயில் இன்று செய்தியினை வெளியிட்டுள்ளது.

நடுநிலை வகித்த அமைப்பு ஒன்றினை நம்பி மே 16ம் திகதி பிரபாகரனும் பல புலித்தளபதிகளும் சரணந்தனர் என்பதனையும், பின்னர் நடுநிலை வகித்தவர்கள் நயவஞ்சகமாக இவர்களை இலங்கை அரசிடம் கையளித்திருந்தனர் என்பதனையும், அதன் பின்னர் இருநாட்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிரபாகரனும் ஏனையோரும் கொடுரமான சித்திரவதைகளின் பின்னர் கொலை செய்யப்பட்டனர் என்பதனையும்; தோழர் இரயாகரன் 2009 மே 20ம் திகதி எழுதிய கட்டுரையினை இன்றைய காலத்தில் அதன் முக்கியத்துவம் கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம்.


அமெரிக்கா, ஜரோப்பா, இந்தியா, ஜப்பான், சீனா, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகள் தமது பொருளாதார, ராணுவ நலன்களின் நோக்கிலிருந்து 2009ம் ஆண்டு புலிகளை அழிப்பதற்க்காக இலங்கையரசிற்கு அனைத்து உதவிகளையும் செய்து; புலியழிப்புடன் தமிழின அழிப்பினையும் நடத்தி முடித்தனர். யுத்தத்தின் பின்னர் குறிப்பாக அமெரிக்காவினதும் ஜரோப்பிய நாடுகளினதும் சொந்த நலன்களை அடைய முடியாதவாறு சீனாவும் அதன் நட்பு நாடுகளும் தடையாக இருப்பதுடன், இலங்கையில் பொருளாதார, ராணுவ ரீதியில் கிடைக்கக் கூடிய அனைத்தினையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து மேற்க்கினை ஓரம் கட்டியள்ளனர். இன்று இலங்கை தமிழர்கள் மற்றும் யுத்த படுகொலைகள், குற்றங்கள் குறித்த அமெரிக்காவினதும் மேற்கினதும் கரிசனையினை என்பது அவர்களின் சொந்த பொருளாதார, ராணுவ நலன்களில் இருந்து இலங்கை அரசினை அடிபணிய வைக்கும் நோக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தமது தேவைக்கு ஏற்ற அளவில் செய்தி ஊடகங்களினூடாகவும், தொலைக்காட்சிகளின் ஊடாகவும் கசியவிடுகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தான், முள்ளிவாய்க்காலின் இறுதி முடிவினை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர் என்பதே உண்மை.

நாட்டிற்கு நன்மை வேண்டி ஆலயங்களில் ஆலயமணி!...  இது அரசின் கட்டளை!

நாட்டுக்கு ஆசீர்வாதம் வேண்டி சகல ஆலயங்களிலும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மணி ஒலிக்க விடுமாறு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஊடாக பிரதேச செயலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இலங்கையிலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

"விட்டு விடுதலையாகி நிற்பாய்'' என்ற பாரதியின் வரிகளை நெற்றியில் பொறித்துக் கொண்ட இவர்கள் சிட்டுக் குருவிகள் அல்ல; தாம் உண்டு, உறிஞ்சி, வாழும் சமூகத்தை விட்டு விலகி நிற்கும் ஒட்டுண்ணிகள்.


அவர்களும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். பூவுலகின் மனப்பெருவெளியில் மிதந்தவண்ணம் தங்களின் உள்ளொளியைக் காப்பாற்றப் போராடுகிறார்கள் அந்த வீரர்கள். "இதோ இலக்கியம் செய்வதற்கு இங்கொருவன் இருக்கிறேன்' என்பதாக சிலிர்த்துக் கொண்டெழும் அந்த வலிய அவலக் குரலே அவர்களின் வாழ்க்கைப் பணியாகி விடுகிறது. எனில் அது அவர்களின் தொழிலல்ல. தொழிலின்மையை நோக்கிய, தாம் இன்னார் என்று காட்ட வேண்டிய கடுமையான ஒரு இலக்கியப் பயணம். கடுமை என்பது பழைய மொந்தை போக்கி புதிய மொந்தை புனைவதையும் பட்டியலில் இடம் பெறும் வாழ்வா சாவா போரினையும், பொதுவில் இலக்கியச் சந்தையின் போட்டியையும் சுட்டும்.

"அமெரிக்காவின் முயற்சி தமிழர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. படுகொலைகள் உச்சமாக நடைபெற்ற காலத்தில், அப்போது நாம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தோம். அந்த அமைப்பின் வெளிவிவகார குழு உறுப்பினர்களாகவும் இருந்தோம்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 47

கிட்டுவைக் கொலை செய்வதற்கான எமது திட்டம் தனிநபர் பயங்கரவாதமே

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) போராளிகளை கொன்றொழித்து தமிழீழ விடுதலை இயக்கத்தை (TELO) அழித்தொழிப்பதில் "வெற்றி" பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தமது ஜனநாயக மறுப்பையும் பாசிசத்தன்மை கொண்ட போக்கையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை அத்தகைய செயற்பாடுகளை சமூகத்தின் அனைத்துப் பகுதியினர் மீதும் தொடர்வதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஈழவிடுதலைப் பேராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்களும் ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின்(LTTE) ஜனநாயக மறுப்புக்கும் பாசிசப் போக்குக்கும் எதிராகப் போராட முன்வந்தனர். தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பைக் கண்டித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) யாழ்ப்பாணத்தில் கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE)ஜனநாயக விரோத, மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்தும், ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் "யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் குழு"வினர் தமது துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தனர்.

---இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒருமுறை பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.---வசனம் கலைஞர்

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை காணாத கொடிய சிங்களகாடையர்கள் இறுதிப்போரில் சரணடைந்தவர்களை. காயமடைந்தவர்களை கொடிய சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது.

ஸ்டாலினுக்கு எதிரான அந்த மேலைநாட்டு அவதூறுகளை அப்படியே இறக்குமதி செய்து இங்கே பரப்புவதற்கென்று, ஒரு பெருங்கூட்டம் அல்லும் பகலும் அலைகிறது. தமது சித்தாந்தச் சாய்வுகள் காரணமாக எதிரெதிர் முகாம்களில் நின்று கடுமையாக மோதிக் கொள்பவர்களைப் போலத் தோன்றும் இந்தக் கூட்டத்தினர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிச எதிர்ப்பில் மட்டும் ஒரு வானவில் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளனர். "உன்னதமான கலைஇலக்கியம்சினிமா அரசியல்'', "மனித நேயமிகு தரமான படைப்புகள்'' என்கிற பெயரில் இவர்கள் பதிப்பிக்கும் எல்லா நூல்களிலும் இழையோடுவது ஸ்டாலின் எதிர்ப்புதான்!

மனிதனுடைய சிந்தனையும் செயற்பாடும் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் பெற்ற வண்ணமுள்ளது. எதிலுமே இது தான் நிலையானது என்ற முடிவினை யாராலும் எடுக்க முடியாது. எந்த விடயத்தினை எடுத்தாலும் மனிதனுடைய ஒவ்வொரு நடைமுறையும் நாளுக்கு நாள் புதியதொரு மாற்றத்தினை அடைந்து கொண்டுதானிருக்கிறது. இதனை நாகரீக மாற்றம் என்று சொல்வதா அல்லது மனிதனுடைய அறிவு சார்ந்த சிந்தனையின் மாறுதல் என்று சொல்வாதா..? என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு மனிதனுடைய அறிவு சார்ந்த சிந்தனையின் மாற்றம் என்று தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மனிதன் பிறந்து வளரும் சூழல், அவன் குடும்பத்தில் வளர்க்கப்படும் முறை, அவனுடைய சமூகம் அத்துடன் ஆட்சி செலுத்தும் அதிகார வர்க்கத்தின் அரசியல் என்பன அவனுடைய வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது. ஆனால் ஒரு மனிதனுடைய அறிவு பூர்வமான சிந்தனை வளர்ச்சியில் முதலில் முக்கிய பங்கு வகிப்பது அவனது குடும்பம். ஒரு குழந்தை முதலில் தனக்குள்ளே உள்வாங்கிக் கொள்வது தாய் தந்தையினை, அதற்குப் பின்னர் தான் வெளிச் சூழலினை பார்க்க ஆரம்பிக்கிறது. ஒரு குழந்தை வளர்ந்து வரும் போது குழந்தைப் பருவத்திலே அது தன்னுள் வாங்கிக் கொள்ளும் ஒவ்வொரு விடயங்களும் அதன் சிந்தனையினையும், செயற்பாட்டினையும் ஆக்கிரமித்து கொள்கிறது. இந்த சூழ்நிலையில் புறச் சூழலில் இருந்து உள்வாங்கி கொள்ளும் ஒவ்வொரு விடயத்தினையும் தெரிந்து சரி பிழை, அவசியம் அவசியமற்றது.., என்பதை பிள்ளைக்கு இனங் காட்ட வேண்டிய பெரிய பொறுப்பு தாய் தந்தை இருவரிலேயே தங்கியுள்ளது. இங்கு பெற்றோர்களின் சிந்தனையில் தவறான கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதுவே பிள்ளைகளுக்கான வழிகாட்டலாக அமைந்துவிடுகிறது.

யுத்தத்தின் போது இராணுவக்காடையர்களிடம் சிக்கியவர்களிற்கும் சரணடைந்தவர்கட்கும் நடந்த அதே கொடூரம் எம் கண்முன்னேயே இன்று நடக்கிறது.


--இந்த வருடத்தில் இதுநாள் வரையிலும் சிறுமிகள் மீதான 24 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்திருக்கின்றார்.


இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்று கடந்த 3 ஆம் திகதி நெடுந்தீவில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் மிக மோசமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்".

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE