Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கடந்த ஏழு மாதங்களாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.  இதில் அந்த பகுதிக்கு வெளியில் உள்ள மக்களில் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

ஊடகங்களுக்கான அறிக்கை 25.03.2012

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையினதும் யுத்த வெற்றி என்ற மமதையினதும் எதிர்விளைவேயாகும்.

புலிகளும் அவர்களின் பினாமிகளும் காலங்காலமாய் தமது அரசியல் விமர்சகர்களை துரோகிகள் என முத்திரை குத்துவது வழமை. ஆனால் தேசிய விடுதலைபோராட்டத்திதை அழித்த, அழிவுக்கு வழிகாட்டிய, உள்ளுக்குள் இருந்து கட்டிக்கொடுத்த, பிரபாகரனை பிணமாக்கி  கோவணத்துடன் படங்காடியதென  படுபயங்கரமான  உண்மையான துரோகிகளை உருவாக்கியது புலிகள் இயக்கம் தான். 

ராஜபக்சே அரசு நடத்திய இன அழிப்புப் போர் தொடர்பாக விசாரிப்பதற்கு, ராஜபக்சே அவர்களால் நியமிக்கப்பட்ட LLRC குழுவின் பரிந்துரைகளை, ராஜபக்சே அரசு விரைந்து நிறைவேற்றியிருக்கிறதா என்பதை, ஐ.நா மனித உரிமைகள் குழு கண்காணிக்க வேண்டும் என்பது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்.

இலங்கைக்கு எதிராக ஐநா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், சம நிலையைக் கொண்டுவர இந்தியா முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றதாக, இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்திற்காக கொழும்பில் இருந்து வந்திருந்த மனித உரிமை செயல்பாட்டாளர்களை இலங்கைத் தூதுக் குழுவினர் மிரட்டியதாக ஐ நா மனித உரிமை பேரவையின் செயலாளர் நாயகம் நவி பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானமானது இலங்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று வவுனியாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களின் கைகால்களை உடைப்பேன் என்று மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.

வெளிப்படையாய் அச்சுறுத்தும் வெள்ளைவான் மெர்வின்சில்வா

மகிந்த அரசின் செல்லப்பிள்ளை மெர்வின்சில்வா சிறிலங்காவில் துள்ளி விளையாடுகிறார். கோத்தபாயவின் கட்டுப்பாட்டில் வெள்ளைவான்கள் ஊடகவியலாளரை இழுத்துச்சென்று புதைக்கப்படுகிறார்கள்.

நேற்று இடம்பெற்ற பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றிய மஹிந்த, "எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

யாழிலிருந்து விசேட செய்தி:

கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட மனித உரிமை செயர்பாட்டாளர் முருகானந்தன் குகனின் வீட்டுக்குச் சென்ற படையினர், அவருடைய மனைவியிடம் சிங்களத்தில் உள்ள பத்திரம் ஒன்றில் கையொப்பம் இடும்படி கேட்டுள்ளனர்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 49

கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல்

வவுனியாவில் "தீப்பொறி" குழுவின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.

ஜெனிவா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரிக்க, தமிழக அரசியல்வாதிகள் மகிழ்ச்சிக்கடலில் திகைத்துப்போனார்கள்.

"தமிழீழம்" உருவாகும்வரை என் போராட்டமும் இருக்கும் --  கருணாநிதி
உலகத் தமிழர் சார்பாக பிரதமருக்கு நன்றி ----ஜெயலலிதா

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE