சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உதயம்!
ஓடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலில், சாதியத்திற்கு எதிரான நிகழ்வுகளில் வாலிபர் காங்கிரஸின் போராட்டங்கள், அம்மக்களை விழிப்புற வைத்தது. இவ்விழிப்புணர்வானது, அம்மக்கள் மத்தியில் தன்னியல்பான பல ஸ்தாபன அமைப்புக்களை உருவாக வழி வகுத்தது. இவை வடபகுதி எங்கும் தொழிலாளர் சங்கங்கள், முதல் மக்கள் நலவுரிமைச் சங்கம், சமூக ஒற்றுமைக்கான அமைப்பு, அரிசனர் வாலிபர் அமைப்பு, போன்றவைகளுடன் சனசமூக நிலையங்கள், சமூக முன்னேற்றச் சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் உருவாக்கப்பட்டன.