உடலை பொறுப்பெடுக்க யாருமே இல்லையாம்!
எனக்கு தெரிந்த வகையில் மரணமடைந்துள்ள வவுனியா கைதியின் உடலை பொறுப்பேற்க யாரும் இல்லை என்பதுடன் கைதியின் பிரேத பரிசோதனைகள் இன்னும் முழுமையடையவில்லை. அதனால் மரணம் தொடர்பில் சரியான காரணத்தை தற்போது வெளியிட முடியாது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
வவுனியா சிறைச்சாலையில் மரணமடைந்த தமிழ் கைதி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான சம்பந்தன் விடுத்த விசேட கூற்றுக்கே அமைச்சின் சார்பில் பதிலளிக்கும் போதே இந்த மந்(தி)ரி இப்படிச் சொல்லுது.