Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

உடலை பொறுப்பெடுக்க யாருமே இல்லையாம்!

எனக்கு தெரிந்த வகையில் மரணமடைந்துள்ள வவுனியா கைதியின் உடலை பொறுப்பேற்க யாரும் இல்லை என்பதுடன் கைதியின் பிரேத பரிசோதனைகள் இன்னும் முழுமையடையவில்லை. அதனால் மரணம் தொடர்பில் சரியான காரணத்தை தற்போது வெளியிட முடியாது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலையில் மரணமடைந்த தமிழ் கைதி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான சம்பந்தன் விடுத்த விசேட கூற்றுக்கே அமைச்சின் சார்பில் பதிலளிக்கும் போதே  இந்த மந்(தி)ரி இப்படிச் சொல்லுது.

வாடிய பயிரை கண்ட போது மனம் வாடினேன்- வள்ளலார் ராமலிங்கனார்.
வடிவான பிகரை கண்டபோதெல்லாம் வழிஞ்சு போய் நின்றேன்- ஆசாமி நித்தியானந்தா

கெளதமகுல சித்தார்த்தனின் கண் முன்னே அவனது குலக்குழு சமுதாயவாழ்க்கை முறை அழிந்து கொண்டிருந்தது. கங்கைச்சமவெளி எங்கும் பெருமன்னர்களின் சர்வாதிகார ஆட்சிமுறை பரவிக்கொண்டிருந்தது. குலங்களிற்கு தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சர்வ அதிகாரமும் கொண்ட மன்னர்கள் அல்ல. தங்கள் குலத்தவர்களிற்கு மறுமொழி சொல்ல வேண்டிய நிலையில் தான் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். தமிழ்நிலத்தில் பறம்புமலை பாரி அப்படியான குலமொன்றின் தலைவன்.

கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

யுத்தத்தில் சரணடைந்த புலிகளை கொன்றிருந்தால் இந்தநிலை வந்திருக்குமா? கோத்தபாய ராஜபக்ச சீற்றம்! கோத்தபாயவிற்கு கொலை வெறிப்பசி இன்னும் அடங்கவில்லை!

இலங்கை அரசின் கொலை வெறிப்பசி இன்னும் அடங்கவில்லை. இதை சிறையில் உள்ள அப்பாவிச் சிறைக்கைதிகளுக்கு ஊடாக அரங்கேற்றியுள்ளது. இலங்கையின் வடக்கே வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது தற்போது தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேர் மகர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெடியளின் மந்தைகளாக வாழப் பழகியவர்கள் நாங்கள். இதற்குள் தான் எமது அறிவும், அறியாமையும் கூட. நாம் முன்னணி இதழை விற்பனைக்காக கொண்டு சென்றபோது, 'பெடியள் விடமாட்டாங்கள்' என்ற அரசியல் சூனியத்தை சந்திக்கின்றோம்.

பெடியள், ஐ.நா, மேற்குநாடுகள், இந்தியா, தமிழகம் தொடங்கி பிரபாகரன் ஜெயலலிதா ... என்ற எதிர்பார்ப்புடன் கூடிய அரசியல் நம்பிக்கை, விடுதலையை இலவசமாக எதிர்பார்த்தது, எதிர்பார்க்கின்றது. இதேபோல் எமது முன்னணி இதழையும் அப்படித்தான் கோருகின்றது. முன்னணியை விற்பனைக்கு கொண்டு சென்ற எமது தோழர்களும் இந்த அரசியலுக்குள் தான் பயணித்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டாம் என நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் வர்த்தகம், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என அமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாரச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

"டிவெறென்சான டிமொக்கிறஸி"

தேர்தல் என்ன? எங்கும் எதிலும் வித்தியாசமான "ஜனநாயகப் படைப்புக்களைப்" பரிமாறும் பாங்கு மகிந்த சிந்தனைக்கு உண்டு. அதன் பிரதிபலிப்பை வட-கிழக்கின் மாகாணசபை அறிவிப்புக்களில் காணலாம்.

முள்ளிவாய்க்காலின் பின்னான தமிழர் தாயகத்தின் நிலை, திறந்தவெளிச் சிறைச்சாலையிலான ராணுவக் காட்டாச்சியின் கோலோச்சலே! ஏழு மாகாணங்களிற்கான சிவில் நிர்வாக நிர்வாகஸ்தர்கள் சாதாரண அதிகாரிகள். ஆனால் வட-கிழக்கில் மட்டும் ராணுவக் கட்டளைத் தளபதிகள்! கேட்டால் இவர்கள் "மக்கள் காவலர்களாம், மக்கள் ராணுவமாம்".

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 63

வடக்குக் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறுவப்பட்டு முற்போக்கு ஜனநாயக கருத்துக்களைக் கொண்டிருந்த அனைவர் மீதும் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்த போதிலும் என்னுடன் பேசுவதற்கு செல்வி எனது வீட்டுக்கு வந்திருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் என்னை வழிமறித்து பேச அழைத்தபோது நான் பேசுவதை எதற்காகத் தவிர்த்துக் கொண்டேன் என்பதை செல்விக்குத் தெளிவுபடுத்தியதுடன் செல்வி தனது பேச்சை ஆரம்பித்தார். நான் எதிர் பார்த்தது போலவே செல்வியினுடைய பேச்சு நீண்டு சென்று கொண்டிருந்தது. புளொட்டில் இணைந்து நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் செயற்பட்ட காலங்கள், புளொட்டின் தலைமையின் அராஜகப் போக்கால் ஆயிரக்கணக்கான இளைஞர்களினதும் யுவதிகளினதும் உழைப்பு, தியாகம் என்பன விரயமாய்ப் போனமை, ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்த பல நூற்றுக்கணக்கான போராளிகளையும் புத்திஜீவிகளையும் அப்பாவித் தமிழ், சிங்கள மக்களையும் பலி கொண்டுவிட்டிருந்ததையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.முற்போக்கு சக்திகள் எனப்படுபவர்களின் பலவீனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமாக மாறி விட்டது என ஆதங்கப்பட்டார்.

 

அயல் வீட்டுப் பூனை

குருவிக் குஞ்சொன்றை

வாயில் கவ்விக்கொண்டு

என் பக்கமாக வந்து

திடீரென மறுபக்கம் பாய்கின்றது.

இந்த நூற்றாண்டின்,உலக உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித் தலைமையின் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னடைவை சந்தித்துள்ளது.அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு விட்டது.செம்படையை நேபாள ராணுவத்தைக் கொண்டு பிரசந்தா,பாபுராம் கும்பலின் உத்தரவின் பேரில் நேபாள ராணுவத்தின் மூலம் நயவஞ்சகமாக சுற்றி வளைத்து களைக்கப்பட்டுவிட்டது.

கலையரசனின் பிரமுகர்த்தன "மார்க்சியத்தின்" கண்டுபிடிப்பு தான் இது. "தவறை நியாயப்படுத்தி ஏதாவது காரணம் சொல்லத் தானே வேண்டும்" என்று, யோ.கர்ணனின் நூல் மேலான எமது விமர்சனத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார் கலையரசன். பிரமுகர் என்ற வகையில் மற்றொரு பிரமுகரை உருவாக்கவும், அவரை பாதுகாக்கவும் குறுக்குவழியில் முனைகின்றார் கலையரசன்.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனவும் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட வகையில் வடக்கு கிழக்கில் நடாத்தப்பட்டு வரும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் நிலப் பறிப்பையும் நில ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்தவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாது. அதே போன்று நீண்டகாலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும். மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை எவ்வகையிலும் விட்டுக் கொடுக்க முடியாது.


மனிக் பாம் இடைத் தங்கல் முகாமில் இருந்து மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு முறிகண்டி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்கள் உடனடியாக அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள காணிகளுக்குச் செல்ல வேண்டும் என்று படையினரும் அதிகாரிகளும் அச்சுறுத்தும் வகையில் வற்புறுத்தியுள்ளனர்!.

விடுதலை புலிகளின் மகளிரணி தலைவியாய் இருந்த தமிழினிக்கு புனர்வாழ்வு அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இச் செய்தியை வைத்து, நமது நீதித்துறை முன்னேறிவிட்டதென்று நாம் நினைத்தால் அது மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் நமது நீதித்துறை பல ஆண்டுகளுக்கு முன்னரே அதன் சுயாதீனத்தை இழந்துவிட்டதொடு, தமிழர்கள் சார்ந்த அல்லது தேசிய இனப்பிரச்சனை சார்ந்த விடயங்களில் அரசின் கருத்தையே நீதிமன்றங்கள் பிரதிபலித்து வந்துள்ளன என்பது வரலாறு.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 26.06.2012 அன்று திருமுருகண்டியில் மக்களது மீளக்குடியமர்வை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் நிலப் பறிப்பு நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரியும் சிறைகளில் இருந்து வரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வற்புறுத்தியும், காணாமல் போனோர் பற்றிய விபரங்களை வெளியிடுமாறும் கோரி நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி தனது பூரண ஆதரவைத் தெரிவிப்பதுடன் மேற்படி போராட்டத்தில் கலந்தும் கொள்கிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE