Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தனது மகன் நிமலரூபனின் பிரேதத்தை பெறும் வரைக்கும் அறுபத்து மூன்று வயதான இராஜேஸ்வரி ஒரு நாளும் மனம் தளர்ந்ததில்லை.  நம்பிக்கைதான் அவளுக்கு வாழ்க்கை.

யுத்த கோரங்களினால் 1990 களில் காரைநகரில் இருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே வவுனியாவுக்கு வந்து சேர்ந்தனர் இராஜேஸ்வரி குடும்பத்தினர். நெளுக்குளம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. தன்னுடைய ஒரே ஒரு மகனான நிமலரூபனை எப்படியெண்டாலும் வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதே இராஜேஸ்வரியின் கனவாகும்.


நாட்டில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும்,கடத்தப்பட்டு காணாமல் போன அனைவரையும் விடுவிக்குமாறு கோரி கையெழுத்து பெறும் போராட்டம் ஒன்றை மக்கள் கண்காணிப்பு குழு  நாளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியச் சிறைச்சாலையில் மிருக்கத்தனமாகத் தாக்கப்பட்ட உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும், அரசியல் கைதிகள் சிறைகளில் சித்திரவதை செய்வதை நிறுத்தக் கோரியும், விசாரணை இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வற்புறுத்தியும், வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பு – அபகரிப்பை நிறுத்தக் கோரியும் கடந்த 18ம் திகதி வடமராட்சி நெல்லியடி மத்தியில் அமைந்த பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டம் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிசி-லெனினிசக் கட்சியும் ஏனைய அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கலந்து கொண்டன. கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல், வட பிராந்தியச் செயலாளர் கா. செல்வம் கதிர்காமநாதன், தொழிற்சங்கப் பிரதிநிதி கா. பஞ்சலிங்கம், அரசியல் குழு உறுப்பினர் கா. தணிகாசலம், வடபிராந்திய வவுனியா உறுப்பினர் ந. பிரதீபன் உட்பட கட்சியின் இளைஞர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.


இன்று வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் பேரினவாத ராணுவ ஒடுக்கு முறையின் கிழேயே சுதந்திரமற்ற ஜனநாயகமற்ற மனித உரிமை மறுக்கப்பட வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே வவுனியாச் சிறைச்சாலையிலும் பின் மகரச் சிறைச் சாலைசாலையில் வைத்துத் தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாகக் தாக்கப்பட்டுள்ளனர். அத்தாக்குதலிலேயே நிமலரூபன் என்ற இளம் அரசியல் கைதி கொல்லப்பட்டுள்ளார். இப் பேரினவாத கொலை வெறியை நாம் மிக வன்மையாக கண்டிக்கிறோம். பேரினவாத ஆளும் வர்க்கத்தினர் இதுபோன்ற சிறைச்சாலை படுகொலைகளுக்கு இலங்கையில் பெயர் பெற்றவர்கள் என்பது உலகறிந்த உண்மையாகும். அது மட்டுமன்றி நீண்ட காலமாக அரசியல் கைதிகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டு வருவதன் விளைவே வவுனியாச் சம்பவமாகும்.


தமிழ்க் கூட்டமைப்பு மீண்டும் பேச்சுக்கு வர வழி ஏற்படுத்தி தருவதாகபசில் ஜனாதிபதிக்கு உறுதி!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மேசைக்குகொண்டுவந்து அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்றைக் காண வழி ஏற்படுத்தித்தருவதாக பசில் ராஜபக்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு உறுதிவழங்கியுள்ளார். இதற்கமைய அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலையீட்டின் கீழ் பிரபல தமிழ் வர்த்தகர் சிலருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பிரதிநிதிகளுக்கும் இடையே சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.


முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயார்!


கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. அவ்வாறு கூட்டு அரசு அமைந்தால் அது தமிழ்  முஸ்லிம் சமூகங்களுக்கு பெரும் விமோசனத்தையும் நன்மையையும் ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமானசுரேஸ்பிரேமச்சந்திரன்  தெரிவித்தார். எனினும் கூட்டமைப்பின் இந்த அழைப்புக் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இப்போது எந்த முடிவுக்கும் வரமுடியாது எனவும் தேர்தலுக்குப் பின்னர் அது குறித்துத் தீர்மானிக்கப்படும் எனவும் அதன் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நிமலரூபனின் படுகொலை மற்றும் வடக்கில் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லியடியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனயீர்ப்புப் போராட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று 11 மணியளவில் நடைபெற்றது.



இக்கோமாளியை நம்பும் ஏமாளிகளும் உண்டு! தனி ஈழ கோரிக்கை இப்போதைக்கு இல்லை; தனி ஈழத்துக்காகப் போராட்டமோ கிளர்ச்சிகளோ நடத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லையென தனிப்பெரும் தமிழர் தலைவர் சபதம் எடுத்துள்ளார்.


கையை பிளேட்டால் வெட்டி, கூட்டணிக்காரரிற்கு பொட்டு வைத்து விட்டு தமிழீழம் கிடைக்கும் வரை கலியாணம் கட்ட மாட்டேன் என்று அறுவைதாசன் சபதம் எதுவும் செய்யவில்லை  அவனின்ரை தாய் தான் பரம்பரையின்ரை பேர் உன்னோடை முடியிறதோ எண்டு அழுது குழறி பொம்பிளை பார்த்துக்கொண்டு இருந்தாள் . சலரோகம். ரத்தக்கொதிப்பு தான் உங்கடை பரம்பரைச்சொத்து இதுவெல்லாம் ஒரு பரம்பரை என்று அறுவை தாயிடம் எரிந்து விழுந்தாலும் யாழினியின் படத்தைக் கண்டதும் அப்பிடியே கவிண்டு போய் விட்டான்.

பிராந்திய மற்றும் உலக மேலாதிக்க நாடுகளின் நலன் சார்ந்தே, இலங்கையின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் மோதல்களும் வெளிப்படுகின்றது. அதாவது பிராந்திய மற்றும் உலக மேலாதிக்கம் சார்ந்த சர்வதேச முரண்பாடுகள், இலங்கைக்குள் பிரதிபலிக்கின்றது. இதில் இருந்துதான் நாம் இன்று எம்மைச் சுற்றிய அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.


வன்னி யுத்தத்தின் போது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் கிராமங்களுக்கு இராணுவத்தினர் கொச்சைத்தமிழில் பெயர் சூட்டியுள்ளனர். விடத்தல் தீவு என்பதற்குப் பதிலாக'வெடிதலதிவு' எனவும், அடம்பன் என்பதற்கு பதிலாக 'அடம்பன' எனவும், ஆண்டாங்குளம் அன்பதற்கு பதிலாக 'ஆண்டாங்குளமய' எனவும், உயிலங்குளம் என்பதற்கு பதிலாக 'உயிழங்குளம' எனவும் தமிழ்க் கொலையுடன் பெயர் சூட்டப்பட்டுப் பெயர்ப் பலகைகளும் இடப்பட்டுள்ளன. தமிழர் தாயகத்தில் கொல்லப்படுவது தமிழ் மக்கள் மட்டுமல்ல, தமிழ் மொழியும்தான். அத்துடன் இனச் சுத்திகரிப்பு நோக்கிலான நிலக்கொள்ளையும்தான்! இதில் சங்கமித்திரைக்காகவும் நிலக்கொள்ளையடிப்பு!
சங்கமித்திரைக்கான நிலக் கொள்ளையடிப்பு!



இலங்கையில் எந்தவொரு நபரையும் பொலிஸார் கைதுசெய்வதில்லை! தலைசிறந்த மக்கள் ராணுவம்தான்! வெள்ளை வான் கடத்தல்  இலங்கையில் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம்.!


'அவசர நிலைமைகளின் போது இராணுவத்தினரே  மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். யாழ்ப்பாண மக்கள் இராணுவத்தினரை வெளியேறுமாறு கோருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.. ஏனைய சிவில் அமைப்புக்களை விடவும் இராணுவத்தினர் அபிவிருத்தித் திட்டங்களை காத்திரமான முறையில் மேற்கொள்கின்றனர்' என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய புளகாங்கிதப் பெருமை கொள்கின்றார்.

ஈரோவால் கூட்டிக்கட்ட நினைத்த ஐரோப்பிய ஒன்றியத்தில், ஜேர்மனைப் பலவீனமடைய வைக்கும் பிரான்சின் கனவும் இதில் ஒன்றாக இருந்தது. ஆனால் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளைவிட ஜேர்மன் ஈரோவால் இலாபமே அடைந்தது. 1990 க்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஜேர்மனின் ஏற்றுமதி 348 பில்லியன் ஈரோவில் இருந்து 984 பில்லியன் ஈரோவாக வளர்ந்தது. இது ஏறத்தாழ 3 மடங்கு வளர்ச்சியாக இருந்தது. ஜேர்மனியின் இறக்குமதியும் 293 பில்லியன் ஈரோவில் இருந்து 806 பில்லியன் ஈரோவாக வளர்ந்தது. ஜேர்மனின் இந்த ஏறுநிலை வளர்ச்சியுடன் பிரான்சால் போட்டிபோட கனவிலும் முடியவில்லை. மேலும் ஜேர்மனியின் வெளிநாட்டு வர்த்தக உபரி 2000ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்து வருடத்தில் (2005)  22 சதவீதம் அதிகரித்திருந்தது.



நிமலருபன் மரணத்திற்கு நியாயம் வேண்டும் - வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 2.30மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 'அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான அமைப்பு' அழைப்பு விடுத்திருந்தது.

நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிமலரூபனின் படுகொலை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலர் கட்சி, மத பேதம் பாராது கலந்து கொண்டதுடன், அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பலைகளையும் வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அமைப்பாளருமான மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டார்,

ஆட்டம்-3

புத்தகப்பூச்சிகளின் புரட்சி (புதிய துவக்கம்)

ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா அடுத்தபடியாக ஈரானையும், லிபியாவையும் ஆக்கிரமிக்கத் துடித்தது. அணுவாயுதச் சாக்குப் போக்குகளைச் சொல்லி, முன்போல தன்பாட்டுக்கு உடனே ஆக்கிரமிக்கும் சூழல் அமெரிக்காவுக்கு இப்பொழுது அவ்வளவாக வாய்த்திருக்கவில்லை. வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா மற்றும் மத்திய ஆசியாவுக்குள் அமைந்திருக்கும் அரபு நாடுகளுக்குள், முஸ்லிம் அடிப்படைவாதத்தையும் மேவி அதன் சமூக அடிப்படை முரண்பாடுகள் கொதிநிலையாக மேலெழுந்திருந்தன. வெளியே மேற்குநாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளின் தடித்த மௌனச்சுவர்கள் இப்பொழுது  வெளியே தெரியும்படியாயும் இருந்தது. ஐ.நா சபை முன்னைய ஆண்டுகளையும் விட முக்கிய ஆண்டாக 2008ஐ அறிவித்தும் இருந்தது. சர்வதேச சுகாதார தூய்மை ஆண்டாகவும், சர்வதேசமொழிகளின் ஆண்டாகவும், சர்வதேச புவி ஆண்டாகவும், சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாகவும் பிரகடனங்களை அடிக்கிக்கொண்டே போனது. இந்த ஆண்டில் உலகில் வாழும் 260 கோடி மக்களுக்கு தமது மனிதக்கழிவுகளை அகற்றும் கழிவிட வசதிகள் கிடைத்திருக்கவில்லை. இது உலக மொத்த சனத்தொகையில் 41 சதவீதமாக இருந்தது. இதனால் உலகில் 20 கோடி தொன் மனிதக்கழிவுகள் திறந்தவெளிகளிலும், கடற்கரைகளிலும் உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.

மிகக்குறுகிய நிலப்பரப்பு,ஆறுகள் இல்லை,பெரியு குளங்கள் இல்லை. தொண்டைமான் ஆறு என்ற உப்புக்கடல் வாய்க்காலும்,வழுக்கியாறு என்கிற மழைக்கால வெள்ளவாய்க்காலும் மட்டுமே ஆறுகள் என்ற பெயரோடு இருப்பவை. உச்சிமரத்திற்கு ஏறி கள்ளும்,தெங்காயும் இறக்க பயப்படாதவன் கடன்காரனிற்கு பயந்து ஒழிக்க வேண்டிய வாழ்நிலை. துணி வெளுப்பவரும்,முடி திருத்துபவரும்,தச்சரும்,கொல்லரும்,குயவரும் சின்னஞ்சிறு ஊர்களின் குறுகிய பொருளாதார வளையங்களிற்குள் காவல் கிடந்து வேலை பெற வேண்டிய நிலை; உரத்து அடிக்கும் வாடைகாற்றிலும் உறுதியோடு வள்ளத்தில் கால் பதித்து நிற்கும் கடல்தொழிலாளர்கள் ஊரிலே பசியோடு காத்திருக்கும் மனைவி,பிள்ளைகளை நினைத்தால் ஊசலாடுவார்கள்.

கடந்த மாதம் 29ம் திகதி வவுனியாச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள மீது படையினர் மோசமான தாக்குதலை மேற்கொண்டனர். படுகாயங்கள் அடைந்த அவர்களை மகர சிறைச்சாலைக்கு மாற்றிய பின்பு அங்கும் வைத்துத் தாக்கப்பட்டனர். மேற்படி தாக்குதல்களில் மோசமான படுகாயங்களுக்கு உள்ளானவர்களில் ஒருவரான கணேசன் நிமலரூபன் என்ற இளைஞன் இம் மாதம் 4ம் திகதி உயிரிழந்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் மீதான மேற்படி கொடூரத் தாக்குதலும் படுகொலையும் மிலேச்சத்தனமானதும் பேரினவாத பாசிசத்தனம் கொண்ட தாக்குதலுமாகும். அது மட்டுமன்றி இறந்த இளைஞனின் வெற்றுடலைக் கூட பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து வரும் அக்கிரமத்தை மகிந்த சிந்தனை ஆட்சி செய்து நிற்கிறது. இதனை எமது கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. நீண்டகாலமாக விசாரணை இன்றி அரசியல் கைதிகளைத் தடுத்து வைத்திருந்து வருவதன் விளைவே மேற்படி கண்டனத்திற்கும் துயரத்திற்குமுரிய சம்பவமாகும் என எமது கட்சி சுட்டி காட்டுகிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE