Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி




இதை நாம் தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது அவசியம். இதை ஏதோ நெருக்கடி, போராட்டம் என்று மட்டும் புரிந்துகொள்வது அறிவல்ல. என்னைப்போல், உன்னைப்போல் உள்ள மக்கள், அங்கு எதற்காக போராடுகின்றனர்? நாளை இதேபோல், உனக்காக நீ போராடும் சூழல் கூட ஏற்படலாம். இந்த உலகில் என்னதான் நடக்கின்றது? போராடும் மக்கள் வெற்றி பெறுகின்றனரா? வெற்றி பெற முடியவில்லை என்றால், என்னதான் காரணம்? சக மனிதனுக்கு நடப்பதை தெரிந்துகொண்டு, அவனுக்காக நாம் எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.



துன்ப-துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு'!:கருணாநிதி!


பூமிக்கு தன்னைத்தானே சுற்ற 24-மணி நேரம் தேவைப்படுகின்றது. ஆனால் கருணாநதியின் அரசியல் (சுத்துமாத்து) சுழற்சிக்கு ஒருமணி நேரம் போதுமானது. இதற்குள் பல சுழற்சிகள் கொண்டு  ஏகப்பட்ட முடிவுடனான பல அரசியல் கொப்புகளுக்கு தாவிவிடுவார்.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தில்ரூக்ஷன் என்ற இளைஞர் நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.!


பிறந்த ஊர், சுற்றியுள்ள மனிதர்களை நேசிப்பதில் இருந்து பெருகும் மனிதநேயம், அன்பு, தோழமை என்பனவே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் சர்வதேசியம் சார்ந்த சிந்தனைகளாக விரிவடைகின்றன. அந்த மண்ணையும், மனிதர்களையும் விட்டு வெகுதூரம், நீண்டகாலம் பிரிந்து வந்தாலும் பன்னிரண்டு வருசத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவைப் போல அல்லாமல் தினமும் மலரும் மல்லிகையைப் போல் மனதின் ஒவ்வொரு மூலையிலும் அந்த நாட்களின் இன்பங்களும், துன்பங்களும் வாசமாய் வீசுகின்றன.

என் மீதான சித்திரவதை தொடர்ச்சியாக புலிகளால் நிகழ்ந்தபோது, வெளியில் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1.என்.எல்.எப்.ரி.யில் இருந்து பிரிந்து சென்ற பில்.எல்.எப்.ரி. அமைப்பில் இருந்த ஒருவர் புலிகளிடம் தானாகவே சென்று, அமைப்பினை முழுமையும் தெரியப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

யாழ்ப்பாணம் தமிழ்மக்களின் கலாச்சார குவிமையமாம் (வடமராட்சி யாழின் மூளை என்பதுபோல்) எப்படியும் வாழலாம்;;, ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள் யாழ் மக்கள், அதிலும் பெண்கள்! இப்பேர்ப்பட்ட எம் மண் இன்று கலாச்சாரச் சீரழிவின். உச்சகட்டத்தில் உள்ளது என யாழின் ஊடகம் ஒன்று பெரும் கவலையாக செய்தி வெளியிட்டிருந்தது. இதை என்னே என்பது? உதை உயர் இந்து வேளாளத்தின் இறுகிய ஆணாதிக்க கருத்தியல் கொண்ட அலம்பல்களாக கொள்ளலாம்தானே!

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 66


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் - சமாதானத்துக்கான யுத்தம் - என்ற பெயரில் இலங்கை அரச படைகளினால் நிராயுதபாணிகளான மக்கள் கொன்றொழிக்கப்படுவதும், ஈழ விடுதலைப் போராட்டம் - தேசிய விடுதலைப் போராட்டம் - என்ற பெயரில் நிராயுதபாணிகளான முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் கோரத்தனமாகக் கொன்றொழிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தவேளை "தீப்பொறி"க் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைக்கரங்களிலிருந்து தம்மைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தென்னிலங்கையை வந்தடைந்து கொண்டிருந்தனர்.

பேரினவாதிகளும் கூட்டணியும் தமக்குள் கூடிக் கூத்தாடும் அரசியல் பித்தலாட்டம் அனைத்தும், போலி யானவை, புரட்டுத்தனமானவை. இவை அனைத்தும் அடிக்கடி பிசுபிசுத்தபடி அம்பலமாகின்றது. மக்களை அணிதிரட்டாத, தங்கள் நியாயமான கோரிக்கைகளை சிங்கள மக்களிடம் எடுத்துச்செல்லாத எந்தப் போராட்டமும், பேச்சுவார்த்தையும் தொடர்ந்து தோல்வி பெறும். இதுதான் எம் சொந்த வரலாறு.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 65

தென்னிலங்கையில் JVP இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்றொழித்து நிலைமைகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்த பிரேமதாச தலைமயிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு வடக்குக்-கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் முழு இராணுவப் பலத்தையும் பிரயோகிக்கத் தொடங்கியிருந்தது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆரம்பித்து விட்டிருந்த போர், நாமறிந்த அனைத்துப் போர்களையும் போலவே நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை காவு கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது.

கடந்தவிரு நாட்கள்
அப்பாவின் முகநூலில்
அரசியல் செய்திகள் எதனையும் காணவில்லை!

ஆம்!
"அடக்கி-ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காய்
தன் வாழ்நாளையே அர்ப்பணித்த
விடியல் சிவா எங்களிடம் இருந்து
இறுதி விடை பெற்ற" பெரும்துயரால்…

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 64

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை வந்தடைந்திருந்த வேளையில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கெதிராக வடக்குக்-கிழக்கில் போராடிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விடுதலை இயக்கங்களின் திசைவிலகல்களால் விடுதலை இயக்கங்களிருந்து ஒதுங்கியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சியும் கொழும்பை வந்தடைந்திருப்பதைக் காண முடிந்தது.

சென்ற திங்கட்கிழமை இந் நேரம் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய்; அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

விடியல் சிவா (சிவஞானம்) என அழைக்கப்பட்ட, விடியல் வெளியீடுகள் மூலம் அறியப்பட்ட சிவாவின் மரணம் ஈடு இணையற்றது. வியாபாரத்தை மையமாக வைத்து நூலைகளை வெளியிடும் இன்றைய நூலக  அமைப்பில், சமூக நோக்கத்தை மையமாக வைத்து நூல் வெளியீடுகளை கொண்டு வந்த ஒரு தோழனின் மரணம், நிரப்பப்பட முடியாத இழப்பாகும்.

துடிப்பும் மிடுக்குமாய்
புழுதிபறக்க
சிறுமியாய் ஓடிவிளையாடித்திரிந்தவள்
அண்ணாவெனத்தோளில்
தாவியேறி கூடவந்தவள்
திரண்டெளும் அலைகளிலும்
கையைப்பிடித்தவாறு எதிர்த்து நின்றவள்

ஈழத் தமிழருக்கு சம உரிமை கிடைக்காவிட்டால் புதிய வடிவில் இன மோதல் வெடிக்கும்: எரிக் சோல்ஹெய்ம் தெரிவிப்பு

 

"இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்சனையே காரணமாக இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளை ராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால், இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்குமாம்"!

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 34வது ஆண்டு விழாக் கூட்டம் 28.07.2012ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இதில் ‘சமகால அரசியல் போக்குகளும் அவற்றின் எதிர்கால வளர்ச்சியும்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்குக் கூட்டம் பு.ஜ.மா.லெ.கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர். வெ. மகேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் தோழர். பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல், தோழர்கள் க.தணிகாசலம், ச.பன்னீர்செல்வம், கா. செல்வம் கதிர்காமநாதன், த. பிரகாஸ், ஆர். நெல்சன் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். கூட்டத்தின் முடிவில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE