முள்ளிவாய்க்காலில் ஆயிரமாயிரம் மக்களும், போராளிகளும் கொல்லப்பட்டனர். அந்த வேளையில் உலக நாடுகளின் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினர்களும் தமிழர்கள் பக்கமாக தாம் இருப்பதாக பாங்கு செய்தனர். மக்களும் தமக்கு ஆதரவாக இந்த மேற்குலக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் எல்லோரும் குரல் கொடுக்கின்றார்கள், யுத்த நிறுத்தம் வரும், ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்பியிருந்தனர். ஆனால் கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவிக்க விட்டு விட்டு, வெறும் அறிக்கைகளையும் பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளையும் கொடுத்து, தாம் தமிழ் மக்கள் பக்கம் நிற்பதாக பாசாங்கு பண்ணிய படி, இந்த அரசியல்வாதிகள் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர்.