தேசாபிமானத்தால் மரத்துப்போன தெற்கிற்கு யாழ்ப்பாணம் என்பது அன்று போல் இன்றும் புலிகளின் முகாம் தான். அங்கிருக்கும் இராணுவம் மிருகத்தனமாக செயல்பட்டதும், செயல்படுவதும் 'தமிழர்"களுக்கு எதிரானது என்பதால் அது நியாயமானதாகும்." என்ற கருத்தியல் மாயையில் சிக்கியிருக்கும் தெற்கு மக்களை கொஞ்சம் தடடிக் கேட்போம்.
கடந்த 25ம் திகதி யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் பேயாட்டம் ஆடியது உங்களுக்குத் தெரியும். இவ்வாறான சம்பவங்கள் தெற்கிலிருந்து வெளிவரும் 'தேசாபிமான பத்திரிகை"களுககு செய்தியாகத் தெரிவதில்லை....