குறிப்பு:
தற்போது வடக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலைக்காக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொது இடங்களிலும் பல போரட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுப் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவைகளில் ஒன்றாகக் கருதப்படுவது, சிங்கள மற்றும் தென்னிலங்கை மாணவர்களின் ஆதரவுப்போராட்டங்கள். இந்த போராட்டங்களை தமது குறுந்தேசிய புலிப்போராட்டங்களாக சித்தரிக்க முயலுபவர்கள், தேர்தல் அரசியலை முன்னெடுக்க இந்த போராட்டங்களை உபயோகிப்போர் எனப் பல தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயநலனில் நின்று இயங்குகின்றனர். அவர்களில் ஒருவர், திரு.மனோ கணேஷன். அவர் மார்க்ஸ்சிசத்தின் மீதான அவதூறை மட்டுமல்ல, தென்னிலங்கையில் போராட்டங்களை முன்னெடுக்கும் சக்திகள் மீதும் அரசியல் சேறடிப்பை நிகழ்த்துகிறார். கீழ்வரும் குறிப்பு தோழர். ரிச்சார்ட் அவர்களால் முகபுத்தகத்தில் எழுதப்பட்டது.