பல்கலைக்கழகங்களை அரசு ராணுவ மயமாக்குகின்றது. இதை என்னவிலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்த தயாராகவுள்ளோம் என தேசிய மாணவர் ஒன்றியச் செயலாளர் அசங்கபுளேகொட தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவம் அத்துமீறி நுழைந்ததையும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது!.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நேற்றுக்காலை யாழ். பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது வன்முறை தாக்குதலை நடாத்திய இராணுவத்தையும் அதனை பின்னால் இருந்து செயற்ப்பட்ட அரசினையும் கண்டித்தும் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி தேசிய மாணவர் ஒன்றிய மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர்!