சம உரிமை இயக்கத்தினால்15-01-2012 அன்று யாழ் நகரில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியும் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து போராட்டம் இராணுவ போலிஸ் மற்றும் ஒட்டு குழுக்களின் அராஜகத்துக்கும் மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்றது. சிவில் உடைகளில் நின்ற அரச படைகளை சேர்ந்த கட்டாகாலிகளின் கழிவு எண்ணை வீச்சு மற்றும் அச்சுறுத்தலிற்கு மத்தியிலும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கையெழுத்திட்டமை இராணுவ ஆட்சியின் மீதான மக்கள் எதிர்ப்பை தெளிவாக வெளிக்காட்டியது.