போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்த்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஷ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
சட்டத்தின் ஆட்சி மோசமடைந்துள்ளதாக புலம்பும் நீதி மந்திரி!-79
தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய அசாத் சாலி அவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணக்கு உட்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமாகியிருப்பதாக அரசாங்கத்தில் நீதியமைச்சராகிய ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.
மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01
"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயற்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!" என்றார் கார்ல் மார்க்ஸ். அவர் அப்படி வாழ்ந்தார் என்பதால், உலகமே அவரிடம் இருந்து கற்கின்றது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாகவும், ஆளும் வர்க்கத்தின் எதிரியாகவும் இருக்க முடிகின்றது. அவர் மரணித்து 130 வருடம் கடந்த நிலையில், இதுதான் எதார்த்தம். எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் அவர் எடுத்துக் காட்டிய உண்மைகளை மறுத்துவிடவோ மாற்றிவிடவோ முடியவில்லை.
இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02
மார்க்சியத்தை தெரிந்து கொள்ளாமல், உலகை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. மார்க்சியம் மனித சமூகத்தின் நிலவும் சமூக அறியாமையையும், கற்பனைகளையும் மட்டும் போதித்த தத்துவமல்ல. மனித துன்பங்களும் துயரங்களுக்கும் காரணமான சமூக காரணங்களை மட்டும் விளக்குவதுடன் நிற்கவில்லை, அதற்கான தீர்வுகளையும் கூட விஞ்ஞானபூர்வமாக முன்வைக்கின்றது.
'அசாத் சாலி கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை'-79
இலங்கை காவல்துறையினரால் நேற்று முன்தினம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்- முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி கொழும்பு மருத்துவமனையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காசி ஆனந்தன் அண்ணே, நீங்க பாவியா, அப்பாவியா?-79
மட்டக்களப்பு தொகுதி ஒரு தமிழர், ஒரு முஸ்லீம் என இரட்டை அங்கத்துவர் தொகுதியாக கட்சிகளால் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதி. எழுபத்தேழு தேர்தலில் கூட்டணி சார்பில் ராசதுரையும் மற்றொரு முஸ்லீம் வேட்பாளரும் போட்டியிடுவது என்ற முடிவை எதிர்த்து முஸ்லீம் வேட்பாளரின் இடத்தில் நான் தான் போட்டியிடுவேன் என்று அடம் பிடித்து போட்டியிட்டு தேர்தலில் தோற்றவர். அதன் மூலம் மட்டக்களப்பு முஸ்லீம் மக்களின் வாக்குகள் பேரினவாதக்கட்சிகளிற்கு போக காரணமாக இருந்தவர். இன்று சென்னையில் இருந்து கொண்டு “நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேறு எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?” என்று இந்திய அரசிற்கு அடிமை உணர்ச்சி பொங்க வாழ்த்துப்பா பாடுகிறார்.
யாழ்.ஆனைக்கோட்டையில் இராணுவத்திற்காக காணி சுவீகரிப்பு!அறிவித்தல் வெளியீடு (காணொளி இணைப்பு)-79
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைப் பகுதியில் ஐந்து குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கப்படுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி புறக்கணிப்பினை எதிர்த்து சிங்கள இளைஞனால் வழக்கு தாக்கல்!-79
தமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18வயதான சிங்கள இளைஞர் ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9
பசியும் பசியைப் போக்க நாம் கையாண்ட தந்திரமும்
மீண்டும் எமது சாப்பாட்டு நிலைமைகள் (பிரிந்த பிறகு) நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தது. நாம் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் பிரிவான ஈ.பி.ஐ.சி தகவல் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒரு தடவையாவது சென்று எமது தொடர்புகளை அவர்களுடன் வைத்திருந்தோம். ஈ.பி.ஐ.சிக்கு செல்லும்போது மத்தியான சாப்பாட்டு நேரம் பார்த்து செல்லத் தொடங்கினோம். அவர்கள் எம்மைக் கண்டவுடன் சாப்பிடச் சொல்லுவார்கள். அவர்களின் சாப்பாடு எமது நிலைமையை விட வசதியானது. மற்றும் அவர்களும் எமது நிலைமையை அறிந்து உதவி செய்தார்கள்.
இளைய தலைமுறை தலைமையில் ஹட்டனில் புதிய ஜனநாயக மாக்சிய லெனிய கட்சியின் மேதினம்-79
இளைய தலைமுறை தலைமையில் ஹட்டனில் புதிய ஜனநாயக மாக்சிய லெனிய கட்சியின் மேதினம், கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் வே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கீழே உள்ள கோசங்களை முன்வைத்து இந்த மேதினக் கூட்டம் இடம்பெற்றது. இதில் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
1) மலையக மக்களை தேசிய இனமாக அங்கரித்து, சுயநிர்ணய இன சமத்துவ அடிப்படையில் தீர்வு
2) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் வாழ்க்கை செலவுப்படி வருடாந்த சம்பள உயர்வு என்பனவற்றை உள்ளடக்கிய சம்பளத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
3) தொழிலாளர்களுக்கு வீட்டுரிமை காணியுரிமை வழங்க வேண்டும்.
ஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக-79
முஸ்லிம் சமூகத்தின் குரலாக மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக பேசிவரும் ஆசாத் சாலியின் கைதானது, கருத்துச் சுதந்திரத்தின் மீதும், ஜனநாயக வரையறைகள் மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள பாரிய அத்துமீறலாக அமைந்துள்ளது.
இன்று காலை முன்னாள் கொழும்பு மாநகர பிரதி மேயரும் முஸ்லிம் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான ஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை அரசானது முஸ்லிம் மக்களை ஒடுக்குகின்ற நடவடிக்கையை தீவிரப்படுத்தி, முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அம்மக்களுக்கு குரல் எழுப்புகின்ற சமூக அரசியல் குரல்களை அச்சுறுத்தி நசுக்குவதற்கும் தயார் நிலையில் உள்ளதை அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது. ஒடுக்கப்படுகின்ற மக்கள் சார்பில் குரல் கொடுப்பவர்களின் குரல்களை நசுக்குகின்ற இத்தகைய நடவடிக்கையினை இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
யாழில் நிகழ்ந்த பு.ஜ.மா.லெ. கட்சியின் புரட்சிகர மேதினக் கூட்டமும் சைக்கிள் பேரணியும் (படங்கள்)-79
கொட்டும் மழையில் சுன்னாகம் சந்தை வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு சைக்கிள் பேரணியுடன் ஆரம்பித்து யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்புகள் வளாகத்தில் பிற்பகல் 4 மணிக்கு கூட்டமும் இடம்பெற்றது.
மே தினம் தொழிலாளருக்காகவா? கட்சி ஆதரவாளர்களுக்காகவா?
மே தினம் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் சென்ற தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் தினமாகும். சர்வதேச தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் தினமாகும்.1886 மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகர ஹேமார்ட சதுக்கத்தில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் தமக்கு 8 மணிநேர வேலை நேரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கோஷமெழுப்பினார்கள்.
இந்த கோஷத்தைக் கண்டு கொதித்தெழுந்த முதலாளிகள் தமது ஏவல் நாய்களை அவிழ்த்துவிட்டனர் துப்பாக்கியைக் கையிலேந்திய அந்த ஏவல் நாய்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். அவ்விடத்திலேயெ சுருண்டு விழுந்த பல தொழிலாளர்களின் இரத்தத்தால் அந்தச் கதுக்கமே இரத்தக்காடாகியது. அன்றைய தினம் உயிர் நீத்த தொழிலாளர்களை உலகம் பூராகவுமுள்ள தொழிலாளர்கள் ஒன்று சேரும் தினமாகும்.
பாரிஸில் நடைபெற்ற இலங்கை அமைப்புக்களின் மேதின ஊர்வலம்! (படத்தொகுப்பு)-79
பாரிஸில் நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கமும், இலங்கையர் ஒருமைப்பாட்டு மையமும், முன்னிலை சோசலிசக் கட்சியும் இணைந்து பங்குபற்றியதுடன் மேதின கோசங்களை முழங்கிச் சென்றனர்.
லண்டன் மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்பு! - (புகைப்படத்தொகுப்பு!)
லணடனில் நிகழ்ந்த மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்றுக் கொண்டது. இந்த நிகழ்வு பிரித்தானிய இடதுசாரிய கட்சிகளினாலும், புலம்பெயர்ந்து வாழும் பல்லின நாட்டு கம்யூனிஸ்டுக்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. சமவுரிமை இயக்கத்தினருடன் முன்னிலை சோசலிசக் கட்சியும் ஒன்றிணைந்து இந்த ஊர்வலத்தில் பங்கு கொணடது. "புதிய திசைகள்" அமைப்பின் உறுப்பினர்களும் சமவுரிமை இயக்கத்தின் அழைப்பினை ஏற்று, சமவுரிமை இயக்கத்துடன் சேர்ந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.