ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸாரைக் கண்டித்து சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் "தமிழர் முன்னேற்றப் படையினர்" நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் உடன் பிறப்புகளுக்கோ, இரத்தத்தின் இரத்தங்களுக்கோ உயிராபத்தோ, சிறுகாயமோ ஏற்படவில்லை.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
ராஜீவ் செய்த கொலைகளிற்கு என்ன தண்டனை!!!-135
உன்னையும்
ஒரு சவப்பெட்டியுள் தான் ஒடுக்கினார்கள், மகனே!
நீட்டி நிமிர்ந்து நீ நெடுமாலாய்க் கிடக்கையிலே
நிழல் போலக்
கறுத்து
விறைத்த உன் முகம் மீது
வீழ்ந்து புலம்பல் அல்லால்
வேறென்ன முடியும் உறவுக்கு?
1971, மகத்தான தோல்வி சமூகத்திற்கு விட்டுச் சென்ற கற்பிதங்கள்
1971 ஏப்ரல்மாதம் 4ம் திகதி. பிற்பகல் 2.00 மணியிலிருந்து இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒரு அறிவித்தல அடிக்கடி வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறியது. இந்நாட்டு மக்கள் என்றுமே எதிர்பார்த்திராத செய்தி அது. என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. "நாட்டில் சட்டபூர்வமான அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பொலிஸ் நிலையங்களை தாக்கி அந்த பிரதேசங்களில் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக போரடி வருகிறது. அவர்களை முறியடிக்க அரசாங்கம் தன்னாலான அனைத்தையும் செய்ய தயாரக உள்ளதாக" அந்த செய்தி மேலும் கூறியது.
வடகிழக்கில் 600 ஏக்கர் நிலத்தில் பாரிய ராணுவ முகாம்!-79
அரசாங்கம் 600 ஏக்கர் நிலத்தில் ராணுவ முகாம் ஒன்றினை அமைப்பதற்க்காக வடக்கு கிழக்கில் தகுந்த இடம் ஒன்றினை தெரிவு செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.
“2009 இல் பிரிவினைவாதிகளின் யுத்தத்தினை வெற்றி கொண்டு நாட்டில் பாலும் தேனும் ஓட விட்டுள்ளதுடன், வடக்கு கிழக்கில் வசந்தத்தை உருவாக்கியுள்ளதாக” கூறும் மகிந்த அரசு ஏன் தொடர்ந்தும் வடக்கு கிழக்கை ராணுவ மயப்படுத்துவதுடன், தெற்கில் மக்களின் போராட்டங்களை ராணுவம் கொண்டு அடக்குகின்றது?
சீன மீனவர்களின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கிறது: வட இலங்கை மீனவர்கள்-79
இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில், சீன தேசத்து மீனவர்களும் தமது கடற் பரப்பில் வந்து தொழில் செய்வதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நவ தாராளமய கொள்ளைக்கு பலியாகும் சமூகமும் சூழலும்
2011 நவம்பர் 16ம் திகதி கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் செயல் திட்டமொன்று வெளியிடப்பட்டது. 2000மாம் ஆண்டு இலக்கம் 49 நகர மற்றும் கிராம நிர்மாணம்( திருத்தம்) சட்டமூலத்தின் 3(1) உறுப்புரைக்கு ஏற்ப ஜனாதிபதியால் 2011 ஜனவரி 13ம் திகதி நியமிக்கப்பட்ட தேசிய இயற்பியல் நிர்மாண சபையின் மூலம் 2011 மற்றும் 2030க்கிடையிலான 20 வருடகாலத்துக்குமாக தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம் 'தேசிய இயற்பியல் வரைவு" (National Physical Plan) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வரைவு தொடர்பான அரசாங்கத்தின் விளக்கத்திற்கு ஏற்ப, இலங்கையின் பூகோள அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அதனை பஞ்ச மகா சக்திகளின் கேந்திரஸ்தானமாக்குவதேயாகும்.
பேயறஞ்ச பரந்தாமன்!
புளியமரம் நிழலுடன் நின்றது
நிழல் தேடும் எனக்கு
அது தேவையாகப்பட்டது.
நடந்தோடிப் போய்
அதன் கீழே அமர்ந்தேன்.
ஏன் இது திட்டமிட்ட கொலை இல்லையா?-79
செஸ்சிங்டன் சரேயை சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரித்தானிய பிரஜை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மகஸின் சிறை மலசலகூடத்திலிருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்படடார்.
புலிகளுக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் 2007 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறைத்தண்டனையை அனுபவிக்கும் போதே இம்மர்மக்கொலை நடைபெற்றுள்ளது. 2011ம் ஆண்டு வெலிக் கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த கோபிராஜ் அதன் பின்னர் மகஸின் சிறைச் சாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.
பால்மா தடை: உண்மை மீதான பொய்கள்
பொன்டாராஎன்ற பன்னாட்டு நிறுவணத்தின் உற்பத்தியான அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாவில் டி.சி.டி. (டைசை யான்டியாமைட்) என்ற இரசாயனப் பொருள் கலந்துள்ளதாக கூறி தடை செய்த அரசு, மக்கள் நலனில் இருந்து இதைச் செய்யவில்லை. மக்கள் நலன் சார்ந்த அக்கறையிலான முடிவுவல்ல, வேறு சொந்த நலன்கள் சார்ந்த முடிவாகும். இலங்கை அரசு மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்ட ஒரு அரசு அல்ல. வெலிவேரியாவில் சுத்தமான நீரை கேட்ட மக்களையே, சுட்டுக் கொன்ற அரசு அல்லவா இது.
இரசாயனம் அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாவில் மட்டுமல்ல, எல்லா உணவு சங்கிலித் தொடரிலும் காணப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் அதிகரித்த சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு காரணம் விவசாய உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயான உரவகைகளும், கிருமிநாசினிகளும் காரணமாக இருக்கின்றது. இந்த வகையில் ஆசனிக், கட்மியம், ஈயம் என்பன நிலத்திலும், நிலத்தடி நீரிலும், உற்பத்தி பொருட்களிலும் காணப்படுவதுடன் பலவித நோய்கள் உருவாகின்றது. இதை உணவாகக் கொள்ளும் கால்நடை உணவுகள் ஊடாகவும், மனித உடலில் புகுகின்றது.
காலாகாலமாக ஏமாற்றப்படும் மலையக தோட்டத் தொழிலாளர்கள்
மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்;பந்தமான கூட்டு உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் சம்பள உயர்வு சம்பந்தமான கூட்டு உடன்படிக்கையில் கையொப்பமிடும் தொழிற்;சங்க கூட்டுக்கமிட்டிக்குமிடையில் நடைபெற்று தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதன்படி சம்பள உயர்வு வழங்கப்படும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேலாயுதம், ஏனைய தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு வருகின்றனர்
மூவின மக்களும் கலந்து கொண்ட சம உரிமை இயக்கத்தின் லண்டன் கலந்துரையாடல்
நேற்றைய தினம் லண்டனில் சம உரிமை இயக்கத்தின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் இலங்கையின் மூவினங்களை சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இப்படியான சகல இன மக்களும் ஓரிடத்தில் கூடி அரசியல் குறித்து கலந்துரைடிய நிகழ்வு முன்னர் எப்போதும் சாத்தியமானதாக இருந்ததில்லை. சம உரிமை இயக்கத்தின் ஜரோப்பிய முன்னணி செயற்பாட்டாளர்களான தோழர்கள் நியூட்டன், நுவான் இருவரும் மூவின மக்களும் இணைந்து சகல இனம், மதம் சார்ந்த ஒடுக்கு முறைகளிற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம் குறித்தும், இனவாதம் மதவாதத்திற்கு எதிரான பரந்து பட்ட மக்கள் இயக்கம் ஒன்றின் தேவை குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்.
சம உரிமை இயக்கத்தின் செய்தி
தேர்தலுக்காக இனவாதத்தினை முன்னெடுத்தல்
இவ்வருடம் மார்ச் கடைசி வாரத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில், இலங்கையின் நடைபெற்ற யுத்தகால மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணையை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கூறுகின்றன. போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஊடாக மார்ச் மாதக் கடைசியில் நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண சபைகளை வெற்றி கொள்வதே இதன் நோக்கமாக இருக்கிறது.
இந்திய சட்டத்தை தூக்கில் ஏற்ற வேண்டும்-79
"இது இந்த தேசம் தொடர்புடைய விவகாரம். இது என் தந்தை தொடர்புடைய விவகாரம் அல்ல. ஒரு முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளிகளே விடுதலையானால் பொது மக்களின் நிலைமை என்ன ஆவது'"என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது பெரும் தவறன செயல் என்பதில் யாருக்கும் எந்தவிதமான எதிர்க்கருத்தும் கிடையாது. அதனை செய்ய தூண்டியவர்கள் யார்? அவர்கள் நோக்கம் என்ன என்பது பல அரசியல் காரணங்களிற்க்காக இன்றும் மறைக்கப்பட்டே உள்ளது.
"தெய்வத்தாய்" கருணை புரிந்தாரா?
"ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவர் சார்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் 11 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு 2011-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலால் நிராகரிக்கப்பட்டன.
நிராகரிக்கபட்ட மனுவையொட்டி கடந்த ஓராண்டாக இந்திய ஆளும் வர்க்க ஜனநாயக மரபுகளின்படி பெரும் பெரும் சட்டவாக்க வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. இதன் பெறுபேறாக கருணை மனுவை பரிசீலித்து முடிவு எடுப்பதில் தாமதம் செய்யப்பட்டதால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும்” என்னும் வாதாட்டப் புடுங்குப்பாடுகளுக்கு ஊடாக 2012-ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.!
மலையகத்தில் பதிலீட்டு அரசியலும், மாற்று அரசியலும்
2013 பொதுவில் இலங்கையில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களும் அரசியல், பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு உட்பட்ட ஆண்டாகும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், சுத்தமான நீர் வழங்க கோரிய போராட்டங்கள், ஆட்கடத்தல்கள் படுகொலைகளையும் நிறுத்தவும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான என்ற கோரிக்கையுடனான போராட்டங்கள் ஆகியன மக்களின் எதிர்ப்பை அரசியல் அதிகார மையத்துக்கு வெளிப்படுத்தி நின்றன. எனினும் மக்களின் இந்த போராட்டங்கள் எவ்விதத்திலும் வெளிப்படாத, பிரதிபளிக்காத பிரதேசமாக மலையகம் காணப்பட்டது.
வல்லானின் குப்பைகள் வறியவனின் தோட்டத்தில்!
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருந்தன. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லோரும் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். கடைவீதிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. எந்தவகையிலாவது உழைத்த பணத்தைக் கொண்டு துணிமணிகள் வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அதேநேரம் கொலன்னாவ பகுதியில் சம்பவமொன்று நடந்து கொண்டிருந்தது. கொலன்னாவையையும், அதனை அண்டிய பகுதிகளையும் நாறடித்துக் கொண்டிருந்த குப்பைமேட்டுக்கு போகும் வழியை மறித்து அப்பிரதேச மக்கள், அங்கே குப்பை கொட்டுவதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.