இன்னுமொரு சர்வதேச தொழிலாளர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாங்கள் உங்களை நாடி வந்திருப்பது பெரிய செய்தியொன்றின் ஆரம்பத்திற்காகத்தான்.
எமது நாட்டில் அநேகமானோர் சர்வதேச தொழிலாளர் தினத்தை மே தினம் என்றே அழைக்கின்றனர். தலைநகர் கொழும்பு வீதிகளை அதிரச் செய்யும் விதத்தில் மே முதலாம் திகதி நடக்கும் ஊர்வலங்கள் பிற்பகலில் நடக்கும் அரசியல்வாதிகளின் ஆவேசப் பேச்சுக்களினாலும், அவற்றில் சில இசை நிகழ்ச்சிகளுடனும் நிறைவு பெறும். வாராந்திரப் பத்திரிகைகள், தினசரிப் பத்திரிகைகள் போன்ற அனைத்து பத்திரிகைகளும் மே தினத்திற்காக பல பக்கங்களை ஒதுக்குகின்றன. பெரும்பாலும் புறக்கோட்டையில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் தோழர்களின் துன்ப ரேகைகள் படர்ந்திருக்கம் முகங்களுடனான புகைப்படங்கள் அவற்றை அலங்கரிக்கின்றன. ஆனால் அந்த மே தின ஊர்வலங்களில் எப்போதாவது அந்த தோழர்களை நீங்கள் கண்டதுண்டா?