![](/images/Jan2014/MED2.jpg)
அன்புக்குரிய தாய்மாரே, தந்தையரே, சகோதரர்களே, சகோதரிகளே!
நாடு முழுவதும் உள்ள வெளிநோயாளர் பிரிவில் வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் தமது முறை வரும்வரை காத்து நிற்பதை நாம் அன்றாடம் காண்கிறோம். அதிகாலையில் இருந்தே மருந்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் படுகின்ற துயரம் கொஞ்சநஞ்சமல்ல.
'தனியார் வைத்தியசாலைகள், சனல் நிலையங்கள் போதியளவு இருக்கும் போது நீங்கள் ஏன் அரச வைத்தியசாலையை நாடுகிறீர்கள்?"
பதில் தெளிவானது, பணம் இல்லாமையால் தானே? அதேபோல் உங்களுக்கு வைத்தியசாலையில் தரப்படும் மருந்து சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளில் சில அத்தியாவசிய மருந்துவகைகள் சிலவற்றை 'பார்மஸியில்" வாங்கும்படி அவர்கள் கூறுவது ஏன்? அவை வைத்தியசாலையில் இல்லாதது ஏன்?
இந்தப்பிரச்சினைக்கு நாம் அனைவரும் பதிலை தேடியாக வேண்டும். சுதந்திர வைத்திய சேவை நீடிக்கப்போவதில்லை. தற்போது எம்முன் இருப்பது அதனை வென்றெடுக்கும் போராட்டம்.