அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், இன்று (19.12.2015) சுவிற்சர்லாந்து சமவுரிமை இயக்கத்தினால், Zurich நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் இடதுசாரிய கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இப் போரட்டத்தையொட்டி கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் இல் நூற்றுக் கணக்கானோர் கையெழுத்து இட்டனர். இம் மகஜர் இலங்கையின் தூதுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.