குமார் குணரத்தினத்தின் குடியியல் உரிமைகளுக்கான போராட்டம் இன்று பல இடங்களில் இடம்பெற்றது. கண்டி, அநுராதபுர, பாணந்துர, காலி மற்றும் பல நகரங்களில் சத்தியாகக்கிரகம் மற்றும் துண்டுப்பிரசுர விநியோகம், வீதிமுனை கூட்டங்கள் என பல நிகழ்ந்தன. நாளை கோகாலை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ள தினத்தில் மேலும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுவதற்க்கான ஒழுங்குகள் மேற்கொள்ளபட்டுள்ளன.