மக்கள் விரோத மைத்திரி - ரணில் அரசின் கொள்ளைக்கார வரவு செலவுத் திட்டத்துக்கு எதிரான பொதுக்கூட்டம் இன்று 17-12-2015 மகரகமவில் இடம்பெற்றது. இந்த எதிர்ப்பு கூட்டத்தை இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு ஆகியவை கூட்டாக நடாத்தின.
கருவாட்டிற்கும் பருப்பிற்கும் விலையை குறைத்து விட்டு நவதாராளவாத பொருளாதார கொள்கையினை இந்த வரவு செலவு திட்டத்தில் நாசுக்காக முன்தள்ளப்படுவதனை கூட்டத்தில் உரையாற்றியோர் அங்கு வருகை தந்திருந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்களிற்கு விளக்கினர். மக்களை கொள்ளையிடும் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிரான பல போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கப் போவதனையும் அங்கு தெரிவித்தனர்.