இலங்கையில் கல்வியை தனியார் மயமாக்கும் முதல் நடவடிக்கையாக மாலபேயில் உருவாக்கப்பட்டுள்ள மருவத்துவ கல்வி கூடம் அமைந்துள்ளது. இங்கு கல்வி கற்பவர்களிற்கு அரச மருத்துவமனைகளில் பயிற்சி அளிப்பதற்கு உயர் கல்வி அமைச்சின் செயலாளர் முடிவு செய்துள்ளார். நேற்றைய தினம் இது குறித்த அறிவித்தல் வெளிவந்துள்ளது.
நீதி அமைச்சர் ராஜிதவின் மகள், உறவினர்கள் உட்பட இந்த அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகள்; பணம் படைத்தவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் இந்த திருட்டு மருத்துவ கடையில் மாணவர்களாக இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட விரோத திருட்டு மாலபே மருத்துவ கடையை மூடும்படி கோரி இன்று தென்பகுதி பல்கலைக்கழகங்களில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த போராட்ட படங்களை இங்கு காணலாம்.