10.12.2015 வியாழக்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக மாத்தளை, எல்கடுவ, செம்புவத்தை தோட்டத் தொழிலாளர்கள் ஜந்து டிவிசன் தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு தோட்ட வீதியை மறித்து ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10ம் திகதி வழங்கப்பட வேண்டிய சம்பளப் பணம் வழங்கப்படாமையை கண்டித்தும் 1000ம் ரூபா நாள் சம்பளம் வழங்கக்கோரியும் இன்னும் பல கோரிக்கைகளை வழியுறுத்தியும், உள்நாட்டு-வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் செம்புவத்தை பாதையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இப்போராட்டத்திற்கு சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.