Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று இரவு கிடைத்த தகவல்களின் படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  கோதாபய ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும்  போது "முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம், நாட்டில் உள்ள  பொலீஸ் நிலையம் ஒன்றில்   சரணடைந்துள்ளளார்" கூறியுள்ளார். அதேவேளை இந்த தகவலை சுயாதீன அடிப்படையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

<

இது இவாரிருக்க, கடத்திச் செல்லப்பட்டுள்ள முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் வேறு பெயரில் இலங்கைக்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய தூதரகம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

நொவேல் முதலிகே என்ற பெயரில் செய்யப்பட்டிருந்த கடவூச்சீட்டில் அவர் இலங்கை சென்றிருந்ததாக அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் குணரட்னம் சம்பா சோமரத்ன என்ற தனது மனைவியை வேறு பெயரிலேயே மணமுடித்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது.