Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாவங்கள்!, யானை பார்த்த குருடர்கள் போல்…..

இந்தியா பல துண்டுகளாக உடையுமாம்!

ஜெனீவாவில் அமெரிக்கத் தீர்மானம் பற்றிய, இந்தியப் பிரதமரின் பாராளுமன்றப் பேச்சில், எல்லோரும் குழம்பித்தான் உள்ளார்கள். பிரதமரின் ஆங்கிலப் பேச்சை, விளங்கிக் கொண்டதில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் பெரும் சண்டை...,

 

இந்தியா ஆதரிக்கும், சிலவேளை ஆதரிக்காது…எனும் ஆய்வில், இலங்கை--இந்தியத் தமிழ்த்தேசியர்களுக்கும், உணர்வாளர்களுக்கும் புரிதல்லற்ற "உணர்ச்சிச்" சண்டை.

எட இதுதான் வழமையான சினிமாஸ்கோப் என்றால், நம்நாட்டிலும் குழப்பம்! இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமானால், 23-ந் திகதியோடு அதன் தலைவிதி மாறும்! இந்தியா பல துண்டுகளாக உடையும். இப்படிச் சாபமிடுபவர், குணதாச அமரசேகர எனும் சிங்கள இனவாதச் சாமியார்!


என்செய்வது நிதானமற்ற இனவாத உணர்வுகளால் குழம்பிப் போன பாவப்பட்டதுகளை!..


மன்மோகன் சிங் என்னதான் சொன்னாங்க? நாங்கள் எதிர்பார்ப்பது அமெரிக்க அறிக்கைக்குள் இருந்தால்… "சம்ஸ்ரைம்" ஆதரிக்கக்கூடும்! அவரும் சிலேடையாக சொல்ல…இதுகளும் சீரியஸாக……

- அகிலன் 21/03/2012