Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2009 மே 19 வரையான அவலக்குரல்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் மெல்ல மெல்ல எஞ்சிய உயிர்களை சாகடித்த வண்ணமேயுள்ளது. வறுமையின் கொடூரத்தை அனைத்து மக்களிடமிருந்தும் திசை திருப்புவதற்காய்---

மகிந்த குடும்பத்து மனிதாபிமான நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டிற்கான வெற்றி விழாவுக்கான ஒத்திகைகள் ஆரம்பித்து விட்ட. பாரிய அளவிலான படைகளின் அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டதற்கான அறிவிப்புகள் பெருமெடுப்பில் பிரச்சாரப்படுத்தப்படுகிறது.ஆனால் போரின் போது கைகோர்த்து நின்றவர்கள் தற்போது தீர்வை ப்பற்றிய ஆயுதங்களை கூட்டமைப்பிடம் கொடுத்து மகிந்த அரசு மசியுமா எனப்பார்க்கிறார்கள்.

 

மனித உரிமை மீறல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காய் அமெரிக்கக்காலடியில் மகிந்த அரசு வீழுமாயின், மானிடப்பேரழிவின் வெற்றி விழாவுக்கு அமெரிக்க, இந்திய விமானங்கள் மலர்களைத் தூவுமென்பதையும் மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர்.

 

"முள்ளிவாய்க்கால் பேரவலம் ஒட்டு மொத்த இலங்கை மக்களிற்குமாய் ஏற்படாமல் இருப்பது, உழைக்கும் மக்களிற்கான ஜக்கியத்தினால் மட்டுமே முடியுமென்பதே மீட்சிக்கான பாதை”


-முரளி 14/05/2012