Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“கிழக்கு மாகாண முதலமைச்சர்   சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி  இனப்பிரச்சினைக்கு  தீர்வாக ஏனைய  தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டு வரும் வடக்கு-கிழக்கு

மாகாணங்களின்  இணைப்பை  முற்றாக  நிராகரிப்பதாகவும், இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு  சவால்  விடுகின்ற  அனைத்து  விதமான முயற்சிகளையும் எதிர்ப்பதாகவும் ” என பசில் ராஜபக்ஸவுடன் கூடியிருந்து அறிவித்த கட்சித்தீர்மான மகாநாட்டு அறிவிப்பானது; ஜெனிவா பிடியில் மகிந்த அரசு திணறிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடேயாகும்.   

மகிந்த அரசின் திட்டமிடலானது கருணா, பிள்ளையான், டக்ளஸ், கேபி, விமல்வீரவன்ச என நீண்ட பட்டியலை மிகவும் தூரநோக்கோடு பிடித்து பிரம்பின் நுனியில் செருவிய விசம் ஏற்றப்பட்டே வளர்த்து விட்டுள்ளது. அரசு நெருக்கடிக்குள்ளாகும் போதெல்லாம் வித்தை காண்பிக்க இந்த எடுபிடிகள் இறக்கப்படுவது ஒன்றும் புதியதல்ல. மக்கள் அறியாததுமல்ல.

-முரளி 19./03/2012