யாழ்ப்பாணத்தில் திமுது ஆடிகல மீதான தாக்குதலைக் கண்டித்தும் வடக்கில் அரசியல் செய்யும் உரிமையை தடுக்க வேண்டாம் எனவும் ஜனநாயகத்தில் கைவைக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்தை வற்புறுத்தும் பதாதைகளை கையில் ஏந்திய படி இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் கலகம் அடக்கும் பொலிஸாரும், புலனாய்வுப்பிரிவினரும் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.