புலிகள் கொண்டிருந்த "தன்னியல்புவாதம்" தான், படுகொலை அரசியலே ஒழிய. அவர்களின் சுரண்டும் வர்க்க அரசியல்ல என்கின்றனர். தேசியத்தை வர்க்கம் மூலம் அணுகுவதே தவறானது, அதன் தோல்வியை "தன்னியல்புவாதம்" மூலமே அணுக வேண்டும் என்கின்றனர். இதைத்தான் இன்று "மே18" காரர் திட்டமிட்டு "வியூகம்" போட்டுச் சொல்லுகின்றனர். புலி மண்ணைக் கவ்விய நாளை, தங்கள் இயக்கத்தின் பெயராக கொண்டு, தாங்கள் "தன்னியல்புவாதம்" அல்லாத வர்க்கமற்ற வகையில் தொடர்ந்து தேசியத்தை முன்னெடுப்பதன் மூலம், வெற்றிகரமாக தமிழ் தேசியத்தை வழிநடத்த முடியும் என்கின்றனர்.