Language Selection

பி.இரயாகரன் - சமர்

புலிகள் என்னை உரிமை கோராது 28.04.1987 அன்று படுகொலை செய்யவென கடத்திச் சென்றனர். என்னை அழித்து விட, இரகசியமாக நடுவீதி ஒன்றில் வைத்து கடத்தியவர்கள், என்னிடமுள்ள தகவல்களைப் பெற தொடர்ச்சியாக சித்திரவதைகளைச் செய்தனர். தங்கள் சொந்த இரகசிய வதைமுகாமில் வைத்து, தொடர்ச்சியாக சித்திரவதைகளை என் மீது ஏவினர். இதன் மூலம் அவர்கள் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையும், போராட்ட வெற்றிகள் அனைத்தையும் காட்டிக் கொடுக்கக் கோரினர். இதற்காக யார் யார் எல்லாம் போராடுகின்றனர் என்ற விபரத்தைக் கக்கக்கோரினர்.

இன்றைய பொதுப்புத்தி இப்படித்தான் கருதுகின்றது. மூலதனத்தின் மந்தைக் கூட்டமாக, மனிதன் இருக்கும் வரை, ரசனை மட்டகரமானதாக மாறிவிடுகின்றது. மனிதனை மூலதனத்தின் அடிமையாக இருக்க, மட்டகரமான ரசனை உற்பத்தி செய்யப்படுகின்றது.

ருசியா ஆய்வு மையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றிய ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன் போது, 65 சதவீதமான மக்கள் லெனினின் அடிப்படை நோக்கத்தை அங்கீகரித்ததுடன், அவை சரியானவை என்று ஏற்றுக் கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது. 5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்ராலினை ஏற்று ஆதரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ளவர்களில் 36 சதவீதம் பேர் ஸ்ராலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கீகரித்து ஆதரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் துயரம், முதலில் அவர்கள் தங்களை அறியாது இருத்தல் தான். சுய ஆற்றல் அற்றவராக இருத்தல் தான். சுய முனைப்புடன் எதையும், தெரிந்து கொள்ளாது இருத்தல் தான். தம்மை புரிந்து கொள்ள முடியாத இருட்டில் வாழ்தல் தான், அவர்களின் சமூக அறிவு அழிவாகிவிட்டது. அனைத்தையும் மற்றவன் சொல்ல நம்புவதும், கேட்பதும் தான் வாழ்வாகிவிட்டது. தனக்கு நடந்ததையும், தன்னைச் சுற்றி நடந்ததையும் கூட, சுயவிசாரணை செய்வது கிடையாது. இன்று அதை செய்ய எந்த வரலாற்று ஆவணமும் கிடையாது.

அரசு காட்டியது பிரபாகரனையல்ல. அது போலியான சிங்களப் பிரபாகரன். முகமூடி போட்ட பிரபாகரன். பிரபாகரனோ நலமாக உள்ளார் உயிருடன் உள்ளார் என்று கூறி கட்டமைக்கும் பொய்கள், புனைவுகள், பித்தலாட்டங்கள் மூலம், தமிழினத்தை காயடிக்கின்றனர். எம்மைச் சுற்றி மானசீகமான நம்பிக்கையாக, பிரமையாக இது மாறி, மனநோயாகிவிடுகின்றது.

வர்க்கப் போராட்டம் என்பது நிகழ்ச்சி நிரலாக இருக்க, அதுவல்லாத ஒன்றை முன்வைத்து பித்தலாட்டம் செய்கின்றனர். "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு : புதிய ஜனநாயகக்கட்சி நிலைப்பாடு" என்ற அறிக்கை விடும் அளவுக்கு, தங்கள் அரசியல் மோசடிகளை நியாயப்படுத்துகின்றனர். வேடிக்கை என்னவென்றால் "சுயநிர்ணயம் - பேரினவாதஅரசு" பற்றி புலிக்கும் ஒரு தெளிவான நிலைப்பாடு இருந்தது என்பது தான். அவர்கள் அதை எப்படி தவறாக கையாண்டார்கள் என்பது எம்கண் முன் இருக்கின்றது. புதிய ஜனநாயகக்கட்சி இதை தேர்தல் வழிமுறைக்குள் வைத்து, மக்களுக்கு மொம்மலாட்டம் காட்டுகின்றனர்.

 

பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு, சினிமாவில் நிகழும் மாற்றங்களாகின்றது. நுகர்வு எப்படி மாறுகின்றதோ, அதையே சினிமா வக்கிரமாக்கி பிரதிபலிக்கின்றது. இந்த வகையில் பெண்ணைக் கூட இந்த நுகர்வு எல்லையில் வக்கிரமாக காட்டியே, அதை நுகரக் கோருகின்றது. பெண் பற்றிய பார்வையைக் கூட மிகத் தீவிரமாக மாற்றுகின்றது. பெண் இந்த உலகில் எதற்காக ஏன் எப்படி வாழ்தல் என்பதை, சினிமா மிக வேகமாக அடிக்கடி மாற்றிவிடுகின்றது. அதாவது உலகமயமாதல் நுகர்வுச் சந்தைக்கு ஏற்ப அதை மாற்றிவிடுகின்றது.

தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்று விடுவதில்லை

வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ள மறுப்பது, அதைத் திரிப்பதும், மார்க்;சியத்தை மறுப்பதில் போய் முடிகின்றது. மனிதகுலம் அடிமைப்படுத்தப்பட்டு, தன் விடுதலைக்கான குரல்களையே இழந்து நிற்கின்றது. இதைத்தான் இன்று ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை அடிமைப்படுத்துவதையும், அவர்கள் அடிமையாக இருத்தலும் தான், மனிதன் ஜனநாயக உரிமையாக காட்டப்படுகிறது.

பெண்ணின் ஊடாக பெண்ணின் சதையைக்காட்டி, மனித உழைப்பை திருடுவது தான் உலகமயமாதல் என்னும் சந்தைக் கலாச்சாரம். இங்கு பெண்ணின் உடுப்பு, அதற்கேற்ப வடிவமைக்கப்படுகின்றது. 

 

1987ம் ஆண்டு 28.04.1987 திகதி இரகசியமாக என்னைக் கடத்திச் சென்றனர். அந்தக் கதை. முதல் நடவடிக்கையாக முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டேன். 17.07.1987 நான் அங்கிருந்து தப்பும் வரையான அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. பின் தலைமறைவாக 21.08.1987 வாழ்ந்த காலத்தை உள்ளடக்கியது. நான் தப்பிய அடுத்த நாளே, நான் சொல்ல விமலேஸ்வரன் (இவன் பின் புலிகளால்  கொல்லப்பட்டான்) எழுதிய 269 குறிப்புகளைக் கொண்டு, 2001ம் ஆண்டு வரையாக தொகுக்கப்பட்டது.  பிரசுரிக்கின்ற இன்றைய நிலையில் முழுமையாக செழுமைப்படுத்தி வெளிவருகின்றது.  

மனிதன் தனக்குள் கொண்டுள்ள சமூக உறவுகளின் சிதைவுகள் தான், உலகமயமாதலின் ஊக்க மருந்துகளாகும். மறுபக்கத்திலோ சமூகமாக வாழத் துடிக்கின்ற இயற்கை சார்ந்த பரிணாமச் சூழல்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE