இனியொரு அசோக் தனிப்பட்ட சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். அரசியல் ரீதியாக எனக்கு பதிலளிக்க முடியாத நிலையில், தனிப்புட்ட சில குற்றச்சாட்டுகளை வைப்பதைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை. இதுவே அவர்களின் அரசியலாகிப் போன நிலையில், இந்த தனிநபர் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது அவசியமாகி விடுகின்றது. இதை சொல்லித்தான், அவர்கள் இன்று எமக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.