Language Selection

பி.இரயாகரன் - சமர்

ஒருவரும் அப்படி செய்யவில்லை என்பதே, அரசும் அதன் கூலிக்குழுக்களும் சொல்லும் செய்தி. அவை பிடிபடுகின்ற போது, அவர்கள் தங்கள் உறுப்பினரல்ல என்று, அரச கூலிக் குழுத் தலைவர்களின் அன்றாட செய்தி அறிக்கையாகி விடுகின்றது. தம் மீதான எதிரணியின் அவதூறு என்கின்றனர். புலிகள் இருந்தவரை, புலியின் இது போன்ற நடத்தைகளின் பின் தங்கள் இந்தச் செயல்களை பதுக்கி வைத்துக் கொண்டனர்.

எமது மண் கறைபடிந்த ஒரு வரலாறூடாகவே, நாம் புதையுண்ட படி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. நாளாந்த படுகொலைகள் எமது விடியலை அதிரவைத்திக்கின்றது. அரசியல் அதிகாரம், அரசியல் படுகொலைகளால் தான் தன்னைத்தான் அலங்கரித்தது.

 

இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் பணி, தொழிலாளர்களின் வர்க்கக் கட்சியைக் கட்ட போராடுதல் தான். இதுவே இன்றைய உடனடியான அரசியல் பணி. இதுவின்றி இலங்கை தொழிலாளர் வர்க்கம் என்றும் விடுதலை பெற முடியாது. இலங்கையில் ஓடுக்கப்பட்ட மக்கள், தங்கள் தொழிலாளர் வர்க்கத் தலைமை பெறாமல், தங்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது. ஏன் பேரினவாதத்தைக் கூட, அது எதிர்கொள்ள முடியாது. ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியம் கூட, தன் விடுதலையைப் பெறமுடியாது.

 

பொறுக்கிகளையும், புறம்போக்குகளையும், முடிச்சுமாறிகளையும் அடிப்படையாகக் கொண்டது, இந்தக் கூட்டம். தமிழ்மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதையே, தொடர்ந்து தன் இலட்சியமாக கொண்டது. இதற்கு தமிழீழம் என்ற கோசம் உதவும் என்பதால் தான், இந்த மாபியாக்கள் "நாடுகடந்த தமிழீழம்" என்கின்றனர். இ;ந்த மாபியாக்கள் தங்கள் மோசடிக்கு, மக்கள் தாங்களாகவே உடன்படுகின்றனர் என்று காட்ட, மக்களை மந்தைகளாக மேய்த்து வந்து வோட்டுப்போட வைக்கின்றனர்.

இவர்கள் வேறு யாருமல்ல. புலித்தலைமையை சரணடைய வைத்துக் கொன்றவர்கள். சரணடைவதற்கு ஏற்ப யுத்தத்தை வழிகாட்டி நடத்தியவர்கள். வேறு யுத்தமுனைகளை  உருவாக்குவதை தடுத்து, தங்கள் தலைமை தப்பி செல்வதைத் தடுத்து, இறுதியில் அவர்களை சரணடைய வைத்துக் கொன்றவர்கள். தலைமையின் சொந்த முட்டாள்தனத்தை, இவர்கள் பயன்படுத்திய விதமோ மிக நுட்பமானது.

 

கூலி கேட்டதற்காக நான் அடிக்கவில்லை. கசெற்றை பெறத்தான், தொலைபேசி எண்ணைப் பெறத்தான் அடித்தேன். இங்கு எந்த கூலிப் பிரச்சனையும் கிடையாது. இப்படி சோபாசக்தி விளக்கம் கொடுக்கின்றார். சரி, நீ சொல்வது தான் உண்மை என்று எடுத்து, இது தான் உண்மையா நியாயமா என்று பார்ப்போம். 

 

இந்தப் பெண்ணியம் எந்த வர்க்கம் சார்ந்தது? எந்த அரசியல் உள்ளடக்கத்தில்  ஆணாதிக்கத்தை மறுத்துப் போராட, மக்களை அது வழிகாட்டுகின்றது. இதற்கு பதில் அளிக்க, யாரும் முன்வருவதில்லை. ஏன் இப்படி பார்ப்பதும் கூட இன்று மறுக்கப்படுகின்றது. லும்பன்தனமான அடையாள அரசியல் மூலம் தான், அனைத்தையும் அளக்க முனைகின்றனர்.

இந்த ரேஞ்சிலே இன்று கட்டுடைப்பு அரசியல் செய்கின்றனர். பெண்ணியம், தலித்தியம், தமிழ்தேசியம்… என்று, பலர் தங்கள் அடையாளத்தை முன்னிறுத்தி அடையாள அரசியல் செய்கின்றனர். சிலர் பன்முக வாசிப்பு மூலம் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இதன் மூலம் ஓட்டு மொத்த பிரச்சனையையும் உள்ளடக்கிய, வர்க்க அரசியலை மறுக்கின்றனர்.  இதற்கு பதில் அடையாள அரசியலை முன்வைக்கின்றனர். சோபாசக்தி தான் கம்ய+னிஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு இது புளுத்து கிடக்கின்றது.

எது காவாலித்தனம்? லீனாவின் பேச்சாளராக திடீரென மாறிவிட்டார் சோபாசக்தி. புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் மாதிரி உளறுகின்றார். உன்னை மிஞ்சிய காவாலித்தனமா, ம.க.இ.க.வின் அணுகுமுறை. அன்று பாரிசில் நீ ஒட்டிய துண்டுப்பிரசுரத்தை தன் கடையில் இருந்து அகற்றியதுடன், அருகில் இருந்தவற்றையும் அகற்றிய போது, நீ செய்த காவாலித்தனத்தைப் போல் ம.க.இ.க. செய்யவில்லை. அன்று துண்டுப்பிரசுரத்தை ஓட்ட இருந்த உன் உரிமையைப் போல், அதைக் கிழிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்தது. உன் ஜனநாயகம் போல். இந்தளவுக்கும் அவர்கள், உனக்கு நன்கு தெரிந்தவர்கள். அது நடந்த சில நாட்களின் பின், நீ என்ன செய்தாய்? ஏன் கிழித்தாய் என்று, நியாயம் கேட்கச் சென்றாய், அவர்கள் தங்கள் பக்க நியாயத்தைச் சொன்னார்கள். சில மணிநேரம் கழித்து, அந்தக் கடையின் கண்ணாடியை அடித்து உடைத்தாயே, இதுதான் காவாலித்தனம்;. அதன் பின் அதை தவறு என்று, இன்றுவரை சொன்னது கிடையாது. அந்த கண்ணாடிக்கான பணத்தையோ, அதை மாற்றிய கூலியையே நீ கொடுத்;தது கிடையாது. அவர்கள் நண்பனாக பழகிய நீ, இப்படி செய்துவிட்டாயே என்று சொல்லி பொலிசுக்கும் கூட செல்லவில்லை.

சோபாசக்தி லீனா கூட்டத்தின் தொழிலாளர் விரோதம் எப்படி வன்முறையாக, அதை  எப்படி நியாயப்படுத்தினர் என்பதை பார்க்க இருந்தேன். இருந்த போதும் தியாகு என்பர் அவர்களின் ஏகப் பிரதிநிதியாக மாறி, தர்க்கிக்கும் தர்க்கத்தையும் அதன் அரசியலையும் முதலில் பார்க்க வேண்டியுள்ளது. இவர்கள் அரங்கேற்றிய தொழிலாளர் விரோத வன்முறையையும், அதை எப்படி இன்றுவரை நியாயப்படுத்தி நின்கின்றனர் என்பதையும் பின்னால் பார்ப்போம்.

தொழிலாளர் விரோத உணர்வுகள் தான் சோபாசக்தி, லீனா, அ.மார்க்ஸ் முதல் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் வரை ஒன்றிணைகின்றது. தொழிலாளர் விரோத உணர்வுள்ள பலரும், இங்கு கூடி கும்மியடிக்கின்றனர். கூலி கேட்டவனுக்கு கூலியை கொடுக்க மறுத்து அவர்கள் மேல் லீனா-சோபாசக்தி கும்பல் நடத்திய வன்முறையும், அந்தத் தொழிலாளர்களுக்காக போராடிய மார்க்சிய தலைவர்களையும் தன்சொந்த பாலியல் அனுபவத்தில் புணர்ந்து எள்ளி நகையாடியதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் தத்துவமான மார்க்சியத்தை கேவலப்படுத்தியது இந்த கூட்டம்.   தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த வகையில்தான் வினவு (www.vinavu.com) தோழர்களின் எதிர்ப்பு எழுந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE