Language Selection

பி.இரயாகரன் - சமர்

பிரபாகரன் உயிர் வாழ்ந்திருக்க முடியாதா? முடியும் என்றால்! என்னதான் செய்திருக்கவேண்டும். இது பற்றிய உங்கள் அபிப்பிராயங்கள், குறைந்தபட்சம் சில உண்மைகளைத் தன்னும்   அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதை இன்றுவரை மறுப்பவர்கள் தான், பிரபாகரனை கொன்ற உண்மையான கொலைகாரர்கள். இதுதானே உண்மை. சரி அவர்கள் யார்? நீ யாரை நம்பி, ஏன் எதற்கு என்று எந்தக் கேள்வியுமின்றி யார் பின்னால் சென்றாயோ, அவர்கள்தான்; பிரபாகரனைக் கொன்றனர். இது ஒரு உண்மையில்லையா? இதற்கு மாறாக உன்வழியில் சென்று இருந்தால், அவர்கள் உயிர்வாழ்ந்திருக்க முடியுமல்லவா? இதை நீ உணர்ந்தால், யார் அந்தக் கொலைகாரர்கள் என்பதை தெளிவாக இனம் காண்பாய்.

 

மக்களுக்கு தெரியாமல் தான், புலிகள் முன்கூட்டியே தாங்கள் தப்பிச்செல்லும் சதிக்குள் சரணடைந்திருந்தனர். இந்தச் சதி அவர்களின் இறுதி முடிவானவுடன், "வேறு தெரிவு எங்களுக்கு இல்லை" என்று கூறி, இந்தச் சரணடைவை வெளிக்கொண்டுவந்தனர். இதை புலிகளின் அன்றைய சர்வதேச பொறுப்பாளராக இருந்த கேபி என்னும் பத்மநாதன் அறிவித்தார். அன்று சரணடைந்தவர்கள், இதை உலகறிய சொல்லிவிட்டு செய்திருந்தால்,

Soosai.jpg

 

 அவர்கள் இன்று உயிர் வாழ்ந்திருப்பார்கள். இதை மீறிக் கொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்தது என்ற தெளிவு, மக்களுக்கு இருந்திருக்கும். இதன் பின் இருந்த துரோகிகள் யார் என்ற விபரம் தெரிந்திருக்கும். இப்படியிருக்க அன்று இதை உலகறிய ஏன் சொல்லவில்லை? செய்யவில்லை?

மே 16 மாலை எல்லாம் முடிந்து விட்டது. மே 17 அதிகாலைக்கு முன்னமே சரணடைந்த புலிகளில் ஒருபகுதி கொல்லப்பட்டு விட்டனர். இதை கேபி என்ற பத்மநாதன் தெரிந்து கொண்டவுடன், யுத்தம் தொடர்வதாக புலத்து தமிழ்மக்களின் காதுகளில் 18ம் திகதி வரை பூ வைத்தனர். 16ம் திகதி சரணடையும் துரோக ஏற்பாட்டைச் செய்து சரணடைய வைத்தவர்கள், அன்று அவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும், தொடர்பு கொள்ளவுமில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொண்டனர். அத்துடன் 17ம் திகதி காலையே நடேசனின் உடலை அரசு தன் செய்திகளில் வெளியிட்டு இருந்தது.

தமிழ்மக்கள் பலி அரசியலில் இருந்து, பலி எடுத்தவர்களிடமிருந்து தப்பிய நாளை, எப்படி தமிழ் மக்களின் துக்கதினமாக அறிவிக்க முடியும். அன்று யாருக்குத் துக்கம்? மக்களுக்கா, புலிக்கா? தங்கள் வலதுசாரி புலித் தோழர்களுக்காக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களின் பெயரால் மூக்கால் சிந்துகின்றது. மே 17, இல் என்ன நடந்தது? தமிழ்மக்களை தம் பங்குக்கு கொன்று வந்து புலிகள் சரணடைந்து இருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்ட நாள். தமிழ்மக்கள் சுதந்திரமாக வெளியேறிய நாள். இது தமிழ்மக்களின் துக்க நாளல்ல, புலியின் துக்க நாள்.

இனப் பிரச்சனையைத் தீர்த்தால் என்ன நடக்கும்? வடக்கு கிழக்கில் இராணுவ முகாம் அவசியமற்றதாகிவிடும். நாடுகடந்த தமிழீழம் என்ற புல்லுருவிக் கூட்டமும் உருவாகாது. பேரினவாதம் இனப்பிரச்சனையை தீர்க்க மறுப்பதுதான், இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக தொடருகின்றது. இவ் இரண்டுமே மக்களுக்கு எதிரானது. 

தன் தலைவரையே காட்டிக் கொடுத்த எட்டப்பர் கூட்டம் இது. சர்வதேச தலையீட்டைக் காட்டி, அவரையே சரணடைய வைத்த கூட்டம். இறுதியில் அவரைப் போட்டுத்தள்ளிய கூட்டம். இன்று வரை இதற்கு எந்த சுயவிளக்கமும் கூட கிடையாது. ஆனால் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறி, ஓட்டுமொத்த சமூகத்தையும் முட்டாளாக்குகின்ற மாபியாக் கூட்டம்.

இந்து மதத்தை வைத்துக்கொண்டு, சாதியத்தை மட்டும் ஒழித்துவிட முடியும் என்று சிலர் கருதுவது போல், சுரண்டல் அமைப்பை வைத்துக்கொண்டு பார்ப்பனியத்தை (இந்துவத்தை)  ஒழித்துவிட முடியும் என்று பலர் கருதுகின்றனர். இதனால் சமூகம் பார்ப்பனிய மயமாக்கலுக்குள் தொடர்ந்தும் வாழ்கின்றது.

2006ம் புலிகள் யுத்தத்தைத் மணலாறில் வலிந்து தொடங்கி அதில் தோற்ற போது, இது தான் அவர்களின் கடைசி யுத்தம் என்று சொன்னவர்கள் நாங்கள். தொடர்ச்சியாக இதை சொன்னதுடன், அதை விளக்கியும் வந்தோம். இதை எப்படி எம்மால் இவ்வளவு தெளிவாக துல்லியமாக சொல்ல முடிந்தது! ஏன் உங்களால் அதை பார்க்கவும், இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் போனது! இந்த கேள்விகளுக்கு இவை பதிலளிக்கும்.

யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப் பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக இது சிதைக்கப்பட்டது. அதற்கு முன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க கட்சி என்பது மறுக்கப்பட்டது.

தமிழினத்தின் பொது வெட்முகம் இது. இலங்கை மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 5 லட்சம் ஆண்கள் காணமல் போய்யுள்ளார்கள். கிழக்கிலோ 49 ஆயிரம் விதவைகள். இதில் அரைவாசி பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 12 ஆயிரம் பேர் 3 குழந்தைகளின் தாய்.

முதலாளிகளால் வாழ்வை இழந்த கிரேக்க மக்கள், வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். எங்கள் உழைப்பு எங்கே? அது யாரால்? எப்படி? திருடப்பட்டது என்ற கேள்விகளுடன், கிரேக்க மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். திருட்டுச் சொத்தை பறிமுதல் செய்யக் கோருகின்றனர். தங்கள் சொத்தைத் திருடியவர்களையும், திருட உதவியர்களையும் சட்டத்தின் மூலம் தண்டிக்கக் கோருகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE