யூக்கோஸ்லாவியாவின் இனமுரண்பாடுகள் இரண்டு வருடத்துக்கு மேலாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. முதலாவது உலக யுத்தம் தொடங்க காரணமாக இருந்த யூக்கோஸ்லாவியாவில் உள்நாட்டு இனகலவரங்களுடன் இரண்டாம் உலக யுத்தகாலத்;தில் சில இனங்கள் ஜெர்மன் நாசிகளுடன் ஜக்கியப்பட்டனர். இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிகளுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் கட்சி யூக்கோஸ்லாவியாவை ஜக்கியப்படுத்தி தேசிய சுயநிர்ணய உரிமையை வழங்கி ஜக்கியப்பட்ட நாடாக மாற்றியது. 1950 களில் தனது சோசலிச கொள்கைகளை கைவிட்டு திரிபுப்பாதைக்கு சென்றபோது பெயரளவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்ட ஒரு சீரழிந்த முதலாளித்துவ ஆட்சியை நிறுவிக்கொண்டனர்.