Language Selection

பி.இரயாகரன் - சமர்

இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலியபிட்டிய பிரதேசத்தில் உள்ள சூரியகந்த எனும் இடத்தில் புதைகுழி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதைகுழி பற்றி வரைபடத்துடன் பத்திரிகைக்கும், சுதந்திரகட்சிக்கும் கிடைத்ததை தொடர்ந்து அவ்விடம் தோண்டப்பட்டது. இவ் எலும்புக்கூடுகள் 1988,1989,1990 களில் ஜே.வி.பியின் தீவிர வளர்ச்சிக் காலத்தில் கொல்லப்பட்டவர்களினதாகும்.

1930 களில் அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய பொருளாதார வல்லரசாக வளர்ந்து விட்டது. அது பிற காலனிய ஏகாதிபத்தியங்களிடமிருந்து உலகச் சந்தையை பகிர்ந்து கொள்ள விரும்பியது. அதற்காக உலக மேம்பாட்டிற்கும் சமாதானத்துக்கும் சுதந்திரமான உலகச் சந்தை அவசியம் என்ற கருத்தை முன் வைத்தது. அவ்வடிப்படையில் 1948 இல் 23 ஏகாதிபத்திய தொழில்வளமிக்க நாடுகளிடையே சிக்கலற்ற சீரான உலக வணிகத்திற்காக ஒரு பொதுஒப்பந்தம் ஹவானாவில் ஏற்பட்டது. உலக நாடுகளிடையே ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் மற்றும் சுங்கத்தீர்வை ஆகிய பிரச்சனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் ஏற்பட்ட இந்த பொது ஒப்பந்த அமைப்பு தான் காட்.

அராஜகத்துக்கு மூளையே இல்லை என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலங்களில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அரசியல் வன்முறையின் தீவிரம் பரவிவருவதை கண்டுவருகிறோம். பாரிஸ் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீவைப்பு,  திரு சபாலிங்கம் படுகொலை, தேடகம் நூல் நிலையம் எரிப்பு என சம்பவங்கள் தொடர்கின்றன.

சிங்கள இனவாதத்தை கக்கிவந்த ஜாதிக சிந்தனை இயக்கத்தினை சில இராணுவ அதிகாரிகள் கூட்டாக அம்பலப்படுத்தியுள்ளனர்.  பல் வைத்தியரான குணதாச அமரசேகரவின் இனவாத பேச்சுக்களையும் அதனால் தொடரும் யுத்தத்தையும் எதிர்கொள்ளும் இராணுவ அதிகாரிகள் சினம் கொண்டு ஒரு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அண்மையில் பிரித்தானியாவில் வெளிவந்த சில தகவல்கள் 2 ம் உலகயுத்தத்தில் பிரித்தானிய பிரதமர் யூத மக்களை கொல்ல துணைபோனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1942 இல் ஒஸ்விச் நகரில் 8354 யூத மக்கள் ஒரே மாதத்தில் கொல்லப்பட்ட தகவல் பிரிட்டிஸ் பிரதமருக்கு தெரிந்திருந்தும் அதை அம்பலப்படுத்தாதது மட்டுமின்றி அதற்கு எதிராக சர்வதேசரீதியாக எதையும் செய்யாது யூதமக்கள் கொல்லப்படுவதற்க்கு பச்சைக் கொடி காட்டினார்.  பிரிட்டனும், அமெரிக்காவும் 2ம் உலகயுத்தக் காலத்தில் ஜேர்மனி சோவியத்தை தாக்கி அழிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.  அந்தவகையில் ஜேர்மனிக்கு எதிராக சோவியத் ஜக்கிய முன்னணியைக் கோரியபோது பிரான்ஸ், அமெரிக்கா என்பன நிராகரித்து ஜேர்மனிக்கு பக்கபலமாக செயற்பட்டனர். யூத இனவாதத்தை கொண்டு இவ்வரசுகள் கூட யூதமக்கள் கொல்லப்பட்டபோது கண்மூடியபடி பால் குடித்தனர். 

எமது போராட்டம் பாசிசத்தால் மூழ்கடிக்கப்பட்ட இன்றைய நிலையில் அதை எதிர் கொள்ள பலதரப்பினரும் குரல் கொடுக்க முனைந்தனர். இந்த வகையில் சஞ்சிகைகள், பத்திரிகைகள் என பல தோன்றி வருகின்றன. சில நின்றும் போய்விடுகின்றன.  எம் போராட்டத்தில் எழுந்த சஞ்சிகைள் பத்திரிகைள் வளர்ச்சிப்போக்கில் தத்தம் நோக்கங்களைக் கூட இனறு மாற்றி வருகின்றன. சில பத்திரிகைகள் தமது சுயதிருப்திக்காக என்ற நிலைக்கு பரிணாமம் அடைந்துள்ளது. சில பத்திரிகைகள் பிழைப்புவாத பிரமுகர்களை காப்பாற்றும் நோக்கில் சீரிழிந்துள்ளது.

 ஒரு கோடிக் கவிதைகளால்

உலகம் போற்றும் கவிஞன் நானே

என நாமம் பெற்றாய்

ஒரு சொட்டு இரத்தத்தை உரிமைப் போரில்

தருபவனின் புகழ் முன்னே

தூசு தூசு!

 

---------சுபத்திரன்------------

நடைபெற்ற தென்மாகாண சபை தேர்தலில் ஜ.தே.கட்சி தோற்கடிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிகாரத்தினை கைப்பற்றியது மக்களுக்கு கிடைத்த வெற்றியா? அண்மைக்காலங்களில் வடக்கு கிழக்கு யுத்தத்தில் அரசிற்கு கிடைத்த பின்னடைவுகளும் வடபகுதி மேலான பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க இருக்கும் நேரத்தில் தென்மாகாண மக்கள் ஆளும் கட்சியை நிராகரித்தது  விசனத்துக்குரிய விடயமுமாகும். அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதியும் பிரதமரும் இனப்பிரச்சனை பற்றி சிங்கள மக்களை வெறியூட்டக்கூடிய கருத்துக்களை வெளியிட்டும் தேர்தலில் தோல்வி அடைந்தனர். ஜ.தே.கட்சி அம்பலப்படுத்தப்பட்டதை இது வெளிப்படுத்துகிறது.

அண்மையில் லெனின் கிராட்டில் (தற்போது பீட்டர்ஸ்பாக் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.) மாநகர சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 50 பிரிவிகளைக் கொண்ட அவையில் இரண்டில் மூன்று பங்குகள் 25 வீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடந்தால் மட்டுமே தேர்தல் செல்லுபடியாகும். 

350வருட பல வீரம் செறிந்த கறுப்பின மக்களின் போராட்டத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். வெள்ளை நிறவெறியர்களின் அடக்குமுறைக்கு உள்ளான தென்னாபிரிக்க மக்கள் நீண்ட பல வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர். நிறப்பாகுபாட்டுக்கு ஊடாக தமது சொந்த மண்ணை இழந்த கறுப்பின மக்கள் இன்று பெயரளவில் ஒரு  சுதந்திரத்தை கறுப்பு தலைவர் ஊடாக பெற்று உள்ளனர். இலங்கை, இந்தியாவில் 1948இல் வெள்ளை ஆட்சியாளருக்கு பதில் கறுப்பு ஆட்சியாளர்கள் நிரப்பப்பட்டனர். ஆனால் வெள்ளையன் இருந்தபோதும், கறுப்பன் இருந்தபோதும் மக்கள் பெற்றது என்னவோ ஒன்று தான். அதே பொலிஸ் அதே அடக்குமுறை அதே சுரண்டல் எல்லாம் அப்படியே இருந்தது. ஒன்று மட்டும் மாறியிருந்தது.

வியட்நாம் படைகளை வெளியேற்றவும் அமைதியைக் கொண்டு வரவும் என உறுதி கூறி ஜக்கிய நாட்டுப்படை கம்பூச்சியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவ கால் ஊன்றிக் கொண்டனர். அங்கு வியட்நாமுக்கு எதிராக போராடி வந்த முக்கிய மூன்று குழுக்கள் இருந்தன. அதில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி. ஜக்கிய நாட்டுப் படையோ கம்யூனிஸ்ட் படையை அழிக்க தன்னால் இயன்றளவும் முயன்று மற்றவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். ஜக்கிய நாட்டுப் படையில் முக்கியமாக ஜப்பான் உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் வெளிநாட்டுக்குப் படையை அனுப்பியது இதுதான் முதல் தடவை. கம்பூச்சிய சுய பூர்த்தியை கொண்ட ஒரு நாடாகும். இங்கு உள்ள சுயபூர்த்தியான விவசாயத்தை அழிக்க ஜப்பான் பெரும் அளவில் தனது சந்தைக்கு தேவையான உற்பத்தியை முடுக்கி விட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE