Language Selection

பி.இரயாகரன் - சமர்

அமெரிக்கா தனது கொள்ளைகளையும், அடக்கு முறைகளையும், அடாவடித் தனங்களையும் நியாயப்படுத்த ஆசியாவுக்கென்றே உருவாக்கி வரும் “வொய்ஸ் ஒவ் அமெரிக்கா” என்ற ஒலிபரப்பு நிலையத்தை, சிலாபம் - இரணவலையில் அமைத்து விஸ்தரித்தும் வருவது உலகறிந்த விடயமே.

அண்மையில் 8ஆவது தமிழாராய்ச்சி மாநாடு என்று அறிவித்து, தமிழ் மொழியின் பெயரால் கோடி கோடியாக கூத்தாடிகள் ஆடி மகிந்தனர். தமிழைப் பரப்புகின்றோம் என்று சில சீரழிவு எழுத்தாளர்களும், சினிமா கவர்ச்சி நடிகர்களும், சூதாடிகளும் கூடித்திரண்டு கூத்தாடி தமிழை இழிவு செய்ததுடன், தமிழ் மொழியின் வளர்ச்சிப் பாதையின் குரல்வளையை கடித்துக் குதறியும் வருகின்றனர்.

உலகின் ஜனநாயகக் காவலர்களாக வேடமிட்டு அலைந்து திரியும் ஏகாதிபத்தியங்கள் பயங்கரவாம் பற்றிய நிறையவே கூச்சல்போட்டு வருகின்றது. உண்மையில் இவ் வன்முறைகளின் ஊற்று மூலம் இவ் ஏகாதிபத்தியங்களின் இருப்பின் மீதே உள்ளதை மறைத்து, அதை ஊக்கப்படுத்துவதில் மிகவும் தீரமாக உள்ளனர்.

லெனினின் பிறந்த நாள்

லெனின் 126ஆவது பிறந்;த நாளை நாம் நினைவு  கூர்கின்றோமெனின், ஏன்? 1917ஆம் உலகில் பட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக உயர்த்திக் காட்டியவர் லெனின் என்பதனாலேயே அவரின் பிறந்த தினத்தை ஒரு புரட்சிகர நாளாக நினைவு கூர்கின்றோம். சோவியத்தில் லெனின் தலைமையைத் தொடர்ந்து ஸ்டாலின் பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தொடர்ந்ததுடன், அதைப் பாதுகாப்பதிலும் உறுதிபட்டு நின்றார். அதைத் தொடர்ந்த குரு சேவ்-பிரசேனேவ் கும்பல் அனைத்து போலி மார்க்சிய அலங்காரங்களிலும் இருந்து தன்னை முற்றாக அவிழ்த்துக் கொண்டு வெளிப்படையாகவே ஏகாதிபத்தியத்தின் ஒரு நவ காலனியாக சோவியத்தை மாற்றுவதில் வீறுநடை போடுகின்றார்கள்.

இனவெறி அரசின் கோர முகங்களுக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள், எந்தவித அற்ப சலுகைகளைக் கூட கேட்டுப் பெறமுடியாது என்பதை நாம் கடந்த சமர் இதழ்களில் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டினோம். இனவெறி அரசு பலாத்கார வழிகளின் மூலம் தமிழ் மக்களை கொன்று தேசிய இன அடையாளத்தை இல்லாது ஒழிக்க முனையும் வரை, அதைத் தமிழ்த் தேசிய இனம் தவிர்க்கமுடியாது ஆயுதம் ஏந்துவதன் மூலம் போராட நிற்பந்தித்து வருவதும் கண்கூடு, இவ்வாறான நிலைமைகளில் கடந்துபோன பேச்சு வார்த்தைகளை ஒட்டி நாம் இவ்வாறான பேச்சுக்கள் சாத்தியமில்லை, தமிழ் மக்களை ஏமாற்றும் மோசடி நிகழ்ச்சி - இது என்பதையும் சுட்டி காட்டினோம். தம்மை முற்போக்கு என அழைத்த பலரும் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பேச்சு வார்த்தையின் போலித்தனத்தை அம்பலப்படுத்தத் தவறி, சமாதானம் பற்றிய சிறிலங்கா அரசின் இனவெறியின் பொய் முகங்களின் பின் தம்மை மறந்து இழுப்பட்டுச்சென்றவாறே இருந்தனர்.

அண்மைக் காலமாக புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் முறிந்து, தொங்கிக் கொண்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைக் காலங்களில் புலிகள் செய்வதாகக் கூறிய இரண்டு முக்கிய விடயங்களான முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்துவது, மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்றவற்றை இதுவரை செய்யாது, காலத்தை இழுத்தடித்தும் வருகின்றது புலிகள்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதான நல்லுறவு முன்முயற்சியின் 10ஆவது முன்னெடுப்பும், 83 இனக்கலவரத்தின் பின்னாலான சுமார் 12 வருடகால யுத்தத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 7ஆவது முன்முயற்சியுமான பிரபாகரன் - சந்திரிக்கா பேச்சுவார்த்தையானது இன்று முறுகல் நிலையை எட்டியுள்ளது. இனச்சிக்கல்களுக்கு இம்முறை எப்படியும் தீர்வைக் கொண்டுவந்து விடுவோமென சூழுரைத்த அரசியல் தீர்வாளர்களதும், சமாதானவாதிகளினதும் முகங்கள் சுண்டிக் கறுத்துவிட்டன.

மேற்கத்தைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று காய் நகர்தல் தான், தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டம் என்கின்றனர். இப்படி வலது இடது அரசியல் பொறுக்கிகள், ஒரு புள்ளியில் சந்திக்கத் தொடங்கியுள்ளனர். இனவாதம் பேசும் வலதுசாரி தமிழ்நெற்றில், இடதுசாரிய சண்முகரத்தினம் கூறுவதைப் பார்ப்போம்.

"When sections of articulating Tamils fail at such a time as this in justifying the need for Tamil independence and in independently demanding the powers to recognize Tamil liberation, some world leftist circles currently misinterpret it as pro-imperialist tendency inherent to the Tamil struggle. Colombo is now capitalizing on it for justifying its genocide as its struggle against an imperialist plot and thus painting a sympathetic picture to the naive third world that it is a state standing up to the powers. The Tamil struggle is doubly penalized by the internal failure of its elite, Tamil circles pointed out, adding that some of the best Tamil minds should come forward in arguing for the due status of the struggle in the international arena, leading to Eezham Tamil independence."

தமிழ்மக்களும், அதன் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்றாக பயணிக்கவில்லை. பிளவுபட்ட தளத்தில், மக்களின் எதிரிகளுடன் தான் அரசியல் பிரதிநிதிகள் கூடிநிற்கின்றனர்.    ஏகாதிபத்தியங்களும், அன்னிய சக்திகளும் நடத்துகின்ற தங்கள் நலன் சார்ந்த தலையீடுகளினூடு தான், அரசியல் பிரதிநிதிகள் கூடி மக்களை காட்டிக்கொடுக்கின்றனர். அன்று இந்தியா வழங்கிய பயிற்சி முதல் இன்று சர்வதேச நாடுகள் மனிதவுரிமை பற்றி வடிக்கும் முதலைக் கண்ணீர் வரை, இவை அனைத்தும் அவர்களின் சொந்த நலன் சார்ந்ததுதான். மக்கள் நலன் சார்ந்ததல்ல. தமிழ் அரசியல் பிரிதிநிதிகள் இதன் மூலம் தமிழ் மக்களின் விடிவைக் காட்டுவதன் பின்னணியில், தங்கள் சொந்த நலனை அடைய முனைகின்றனர்.

(சமர் 1 இல் ‘தேச விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை விவாதத்திற்கு முன் வைத்திருந்தோம். இது தொடர்பாக ஆரோக்கியமான கருத்து விவாதங்கள் எதுவும் நேரடியாக எமக்கு முன்வைக்கப்படவில்லை! ஆனால் ‘தூண்டில்’ ‘மனிதம்’ ஆகியவற்றில் வௌ;வேறு நோக்கு நிலைகளிலிருந்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. சமரன் வெளியீடான கட்டுரை ஒன்றை அடுத்த காலடி என்ற பெயரில் லண்டனிலிருந்து வெளியிட்டிருந்தனர். இவற்றைத் தொட்டு நாம் எமது கருத்துக்களை முன் வைக்கிறோம்)

எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.


ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE