Language Selection

பி.இரயாகரன் - சமர்

இதைவிட இனம், மதம், சாதி என பலவாக மக்களை மோத விட்டு வேடிக்கையாக தங்கள் கொள்ளை போகத்தை பாதுகாக்க முனைகின்றனர். இன்று இந்தியாவில் பல பாகங்களில் எழிச்சி பெற்று வரும் புரட்சியாளர்களில் பீகார் புரட்சிகர மார்க்சிச அமைப்பினர் வெற்றிகரமாக சாதி, மத எல்லைகதை; தகர்த்தெறிந்த முன்னேறி வருகின்றனர்.

“தன்னியல்பு வாதம் குறித்து” என்ற கட்டுரை 68 பக்கங்களை உள்ளடக்கி உள்ளது. இக்கட்டுரை ஒரே விடயத்தை மீள மீள சொல்லுவதுடன், அதன் குவிய மையம் தன்னியல்பு வாதமும், அது சார்ந்த கோட்பாட்டையும் முறியடிக்க ஒரு புரட்சிகர மாற்றைக் கோரி நிற்கின்றது.

மீண்டும் மார்க்சிய விரோதக் கருததுக்களைத் தாங்கியபடி உயிர்ப்பு – 5 வெளிவந்துள்ளது. அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக சரியான மார்க்சிஸத்தை உயர்த்திப் பிடிக்கும் நாம்,உயிர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கே ஒரு பெரும் முயற்சி தேவைப்படுகிறது. ஏனெனில் எதிர் விமர்சனத்தை முன் வைத்து வரும் எம் கைகளில் உயிர்ப்புக் கிடைதது விட்டால், அது த்கள் திணிப்பை எங்கே கேள்விக்கு உள்ளாக்கி வீடம் என்பதால், எதிர் விமர்சனத்தைத் தடுக்கும் நோக்கில் பத்திரிகையைக் கிடைக்காமல் செய்து விடுவதில் இவர்கள் மிகவும் கவனமாகவே இருந்து வருகின்றார்கள்.

யாழ் குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் இனவெறி இராணுவம் தனது காட்டுமிராண்டித் தார்ப்பாரை நடத்தும் இன்றைய நிலையில் இது எப்படி இராணுவ ரீதியில் சாத்தியமானது? புலிகளின் இராணுவக் கண்ணோட்டம் சுயமானதாக இருந்து இருப்பின் ஒருக்காலுமே உடனடியாக யாழ் குடாவைக் கைப்பற்றும் இராணுவ முயற்சி சிறிலங்காவக்கு வெற்றி அளித்திருக்க முடியாது.

கடந்த மே மாதம் மொஸ்கோவில் இரண்டாம் உலகப் போரின் 50ம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கைகளில் செங்கொடியை ஏந்திக் கொண்டு. “சோவியத் அதிகாரம்”, “சோவியத் ய+னியன்” என முழக்கமிட்டு பிரமாண்டமான பேரணியினை நடத்தினர். அதே நாளில் அதிபர் யெல்ட்சின் இதனைக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்ன், ஜெர்மனி அதிபர்களுடன் கைகோர்த்துத் திரிந்ததைக் கண்டித்தும் முழங்கினார்கள். இவர்கள் ஊர்வலத்தை வந்த இரண்டாம் உலகப் போர் வீரர்கள் யெல்சின் தங்களுக்கு அறித்த யுத்த நினைவுப் புத்தகங்களை கறற்றி வீசி எறிந்தனர். முன்னாள் சோவியத் ய+னியனில் அங்கம் வகித்த உக்ரேயன். தாஜிக்சிஸ்தான், பால்டிக் குடியரசுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் செங்கொடியுடன் மக்கள் இத்தமைகய ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.


நன்றி : புதிய ஜனநாயகம்

முகாராஷ்டிரா மாநிலத்தில் லட்டுர் பகுதியில் ப+கம்பம் தாக்கி இரண்டு வருடங்கள் ஒடி மறைந்து விட்டன. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு 1084 கோடிரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது. அரசின் நிதி உதவியோடு பல்வேறு சமூக நலன் அமைப்புக்களும். தனி மனிதர்களும் கூட நிவாரணப் பணிகளுக்காக அரசுக்குப் பண உதவி அளித்தனர். சமீபத்தில் மகாராஷ்ரா மாநில உயர் நிதி மன்றம் நிவாரணப் பணிகள் பற்றி ஆய்வு செய்ய கமிஷன் ஒன்றை நியமித்தது. இக் கமிஷன் தனது அறிக்கையில் “கடந்த ஒன்றரை வருடங்களில் பாதிப்புக்குள்ளான எந்தவொரு பகுதியிலும் அரசு ஒரு ஓலைக் குடிசையைக் கூட கட்டிக் கொடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது பல அமைப்புக்கள் நிவாரண உதவி குறித்து கொடுத்த மனுக்களை விசாரித்த பொழுது தான் இந்த அட்சியப் போக்கு அம்பலமாகியது.


நன்றி : புதிய ஜனநாயகம்

யாழ் குடாநாடு 83களில் 9 லட்சம் குடிமக்களைக் கொண்டிருந்தது. இது இன்று 4 லட்சங்களாகக் குறைந்த நிலையில் மிகுதிப் பேர் கொழும்பு, இந்தியா, மேற்கு நாடுகளென இடம்பெயர்ந்தும் உள்ளனர்.


இன்ற இனவெறி அரசின் தமிழ்ப் பிரதேசத்தை சாம்பல் மேடாக்கும் ‘சூரிய பிரகாச’ நடவடிக்கை வட தென்மராடசி தவிர்ந்த அனைத்து மக்களையும் இன்று யாழ் குடாநாட்டில் எஞ்சியுள்ள 4 இலட்சம் மக்களின் 50 விதத்திற்கு மேல் தாழ்த்தப்பட்ட மக்களும், மிகவும் அடிநிலையில் இருந்த நடுத்தர கீழ்ப் பிரிவுகளுமேயாகும்.

கடந்த 15 வருட யுத்தத்தில் மிக மோசமான ஓர் இன அழிப்பு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த சிறிலங்கா இனவெறி அரசு, புலிகளை யாழ்.குடாநட்டில் தோல்வியுற வைத்துள்ளது. இதைப் புலிகள் ‘பின்வாங்கல்’ என்பதற்குப் பதில் தோல்வியாவே மதிப்பிட வேண்டியுள்ளது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? இந்த சத்திய வசனங்கள்!

இனப்படு கொலை!
9 ஆடி 95 (நவாலி)
22 புரட்டாதி (நாகர்கோவில்)

இன்று தமிழ்த் தேசியம் அழிக்கப்படுகின்றது. தமிழ் கலாசாரம் கற்பழிக்கப்படுகின்றது. தமிழ் பொருளாதாரம் சாம்பலாக்கப்படுகின்றது. தமிழ் உயிர்கள் விளையாட்டுப் பொம்மைகளாக சுட்டு விளையாடப்படுகின்றது. ஆம்! இன்று ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காகப் போராடுவது என்ற ஒரு சாதாரண மனித உரிமை கூட பந்தாடப்படுகின்றது. ஒரு இனத்தின் அழிவில் தான், இனவெறி அரசு கொள்ளையடித்து சுகபோகம் அனுபவிக்க முடியும் என்பதை இன்றைய நிகழ்வுகள் மீளவும் பறைசாற்றி நிற்கிறது.

ஒருபுறம் மக்களை அணிதிரட்டும் அரசியல் மறுக்கப்படுகின்றது. மறுபுறம் மக்கள் அரசியலுக்கான அனைத்தையும் மறுக்கின்ற பாசிசம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக் கொண்டு இலங்கையிலும், புலத்திலும் இயங்குகின்றது.

புலிகள் இருந்த காலத்தில் புலிப் பாசிசம், தானல்லாத எதையும் அனுமதிக்கவில்லை. மறுபக்கத்தில் புலியல்லாத அரசியல் தளத்தில் மக்கள் அரசியலை துறந்ததுடன், மக்களை அணிதிரட்ட தாம் அணிதிரள்வதை மறுத்து மக்களின் முதுகில் குத்தினர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE