யாழ் தெல்லிப்பழையில் வைத்து 28.4.1987 மாலை 6.30 மணியளவில் உரிமை கோரப்படாத ஒரு நிலையில் கடத்தப்பட்டேன். வெளி உலகின் முன்போ, நான் காணாமல் போனேன். இப்படி இனந்தெரியாத நபர்களால், இரகசியமாக, மம்மல் இருட்டில் வைத்து கடத்தப்பட்டேன். பின்புறம் கை கட்டப்பட்டு, கண்கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்டேன். இதன் பின் இருண்ட அழுக்கடைந்த புலிகளின் வதைமுகாமில் இருந்து, 16.7.1987 மாலை 6.30 மணியளவில் நான் தப்பிச் சென்றேன். இதன் பின்பாக 14 ஆண்டுகள் கடந்த ஒரு நிலையில் தான், 1.5.2001 இல் இதை எழுதத் தொடங்கினேன். இதை விரைவாகத் தொகுக்க பல்வேறு தொடர் எழுத்து வேலைகள் ஊடாக இரண்டு வருடம் சென்றது.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
ஐ.நா அமைத்த ஆலோசனைக் குழுவும், ஐரோப்பிய யூனியன் விதித்த நிபந்தனைகளும்
இலங்கையில் அன்னிய நாடுகளின் யுத்தம் மெதுவாக, ஆனால் மிக நுட்பமாகவே தீவிரமடைகின்றது. உலக நாடுகளின் முரண்பட்ட நலன்கள், இந்த மோதலின் அரசியல் அடைப்படையாகும். இலங்கை ஆளும் குடும்பத்தின் குறுகிய நலனும், மேற்கின் நலனும் முரண்பட்டு அவை எதிராக பயணிக்கின்றது. இந்த இடத்தில் மகிந்த குடும்பமல்லாத எந்த ஆட்சி அமையினும், இந்த தீவிரமான முரண்பாடு பொதுத்தளத்தில் அற்றுவிடும். மகிந்த குடும்ப ஆட்சி நீடித்து நிலைக்கும் ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்பதை, மேற்குநலன் மிகத்தெளிவாக இனம் கண்டுள்ளது. தனது போட்டி நாடுகளை சார்ந்து, ஜனநாயகத்தை பாசிசமாக்கி நீடித்து நிற்க முடியும் என்பதையும் இனம் கண்டுள்ளது. இதை முறியடிக்கும் காய் நகர்த்தல் தான், இன்றைய சர்வதேச அழுத்தங்கள். மேற்கின் நலன் இலங்கையில் நிறுவப்படும் வரை, முரண்பாடு தீவிரமடையும். இதற்கு சார்பான ஒரு அரசியல் நிகழ்ச்சிக் போக்கும் வளர்ச்சியுறும்.
போலி "ஊடகவியலாளர்" கேட்க, போலி "மார்க்சிய" பேராசிரியர் சொன்னதுதான் என்ன?
அறிவு, நாணயம், உண்மை என அனைத்தையும் அடகுவைத்த பின், இருவர் பேசிக்கொண்டது தான் தேசம்நெற்றில் வெளிவந்துள்ளது. என்னவோ தெரியவில்லை, தேசம்நெற் எமக்குள் பரிமாறிய ஈமெயிலை எப்படி பெற்று வெளியிட்டதோ, அதே வழியில் இப் பேட்டியும் வெளிவந்துள்ளது ஆச்சரியமானதல்ல. அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடியாது தேசம்நெற் என் பெயரில் கூட ஈமெயில் தயாரித்து, அதை வெளியிட்டு அம்பலமானது பழைய கதை.
இந்த வகையில் பேராசிரியர், "ஊடகவியலாளர்" என இருவர் சேர்ந்து, எம்மை எதிர் கொள்ளுகின்றனர். சம்பவத்தை திரித்து புரட்டுவதன் மூலம், கதை சொல்லுகின்றனர். கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் இணைந்து நேராவது போல், இங்கு கேள்விகள் பதில்கள் மூலம் தங்களை நேராக்கிக் காட்ட முனைகின்றனர்.
உயிரற்ற ஆரிய சடங்கு மந்திரமாக, அதுவே சமஸ்கிருத மொழியானது : சாதியம் குறித்து பாகம் - 06
ஆரியர் முற்றாக தமது முந்தைய சமுதாயத் தொடர்ச்சியையும் வாழ்வையும் இழந்தே சிதைந்தனர். இதனால் அந்த சடங்குமுறை கொண்டிருந்த வாழ்வுமுறையை இழந்ததால், உயிரற்றதாகியது. அது உயிர் உள்ள சமூகத்தில், வெறும் சடங்கு மந்திரமாக மாறியது. சிலரின் பிழைப்புக்கான சடங்காகியது.
ஜனநாய அமெரிக்கா ஒரு குற்றவாளி நாடு!
இன்று அமெரிக்காவில் 50 லட்சம் சிறைக் கைதிகளை சிறைகளில் அடைத்து வைத்துள்ளது. ஜனநாயக அமெரிக்க அரசு, ஆயுதக் கலாசாரமும், வெள்ளை கறுப்பு நிற வெறியும், ஏழை – பணக்கார இடைவெளியின் கோர முகமும் அமெரிக்காவை ஒரு குற்றவாளிகள் கொண்ட தேசமாக மாற்றியுள்ளது. 50 லட்சத்தை விட இன்று அமெரிக்க ஆதிகத்தில் உள்ள குற்றவாளிகள் ஜனநாயக வேடமிட்டு பல லட்சமாகத் திரிகின்றனர். பல லட்சம் பேர் கொண்ட பல CIA பல லட்சம் கொண்ட இராணுவமென பல்வேறு வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கா பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபடுகின்றது. இவர்கள் உண்மையில் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பாரிய குற்றவாளிகளும் ஆவர். ஆனால் இவர்களே இன்று ஜனநாயகக் காவலரென்று கூச்சலிடுகின்றனர் ஒரு சொட்டு வெட்கம் இல்லாமல்.
பீக்கில் பெண்கள் மாநாடு
பெண் விடுதலை என்ற உலகலாவிய பெண்கள் கோரிக்கையை இன்று அரசுகளும் அதன் அடிவருடிப் பெண்களும், அதன் மீட்பாளர்களாக மாறியதே சீனாவின் இரு பெண்கள் மாநாட்டுக் கூத்தடிப்புகளாகும்.
ஜக்கிய நாடுகள் சபையின் 50வது கொண்டாட்டங்கள் தொடர்பாக
ஐக்கிய நாடுகள் சபை உருவாக 50ஆவது வருட ப+ர்த்திக் கொண்டாட்டங்களில் உலகத் தலைவர்களான எல்லாக் கொள்ளைக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கூடிக் குலாவினர். ஐ.நா என்பது அதன் வரலாறு நெடுகிலும் உலகிலுள்ள மக்களுக்கு சமாதானத்திற்குப் பதில் ஒடுக்குமுறையே பரிசாகக் கொடுத்து வந்துள்ளது. வல்லமைமிக்கவன் பொருளாதாரதப் பலம் உள்ளவன் ஐ.நாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உலகில் தமக்குக் கட்டுப்படாதவர்கள் மீது ஆக்கிரமிப்புக்களையும், அடாவடித்தனங்களையும் கட்டவிழ்த்து விட்டு எல்லா வகையான மிரட்டல்களின் ஆயுதமாக ஐ.நா செயற்படுகின்றது. ஐ.நா 2ஆம், 3ஆம் உலக நாடுகளின் உள்நாட்டில் தலையிடுவதும், சர்வதேச பொருளாதார புதிய உலக ஒழுங்கை உருவாக்க பல்வேறு மக்கள் விரோத ஒப்பந்தங்களை மூன்றாம் உலக நாடுகிளன் விருப்பங்களை மீறி அவர்கள் மீது திணித்தது. இவற்றைச் செய்து விட மிரட்டல் என எல்லாவித போக்கிரி நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. ஐ.நா என்பது இன்று அமெரிக்காவின் இராணுவ மையமே. இந்த ஐ.நாவிடம் மூன்றாம் உலக நாடுகள் எந்த அற்ப சலுகைகளைக் கூட அமெரிக்க நலனை மீறி பெற்றுவிட முடியாது.
கொங்கொங்கில் வீதிக்கு வரவுள்ள தொழிலாளர்கள்
புதிய உலக அமைப்பின் கீழ் ,டங்கல் ஒப்பந்தித்தின் மூலம் கொங்கொங்கில் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2000ம் ஆண்டளவில் 270 மில்லியன் தொழிலாளர்கள் வேலை நீக்கப்பட்டு வீதிக்குத் துரத்தப்படுவர்.
புதிய உலக அமைப்பில் ,டங்கல் ஒப்பந்தத்தில் உலகம் சொர்க்க புரியாக மாறுமென்ற ஜனநாயகத்தின் காவலன் அமெரிக்காவின் கொக்கரிப்புக்கள் மக்களைப் பட்டினிக்குள்ளும்,அவர்களை வீதிகளுக்குத் துரத்தி கொன்று குவித்தும் தனது புதிய உலக அமைப்பை நகர்த்திச் செல்லவுள்ளது.
உலக ஒழுங்கமைப்புக்கு உட்பட்ட உலகமானது மீண்டும் ஏகாதிபத்திய காலனியாக….
அமெரிக்க, ருசிய மேல்நிலை வல்ல ரசுகளின் வலிமை
அமெரிக்க மூலதனக் குவிப்புகள் ப+தாகரமாக மாறத் தொடங்கின. 17,500 கோடி ரூபாய்களுக்கு மேல் வர்த்தகம் செய்த 12 ப+தாகரமான தொழில் கழகங்கள் அமெரிக்காவிலுள்ள 500 பெரிய தொழில் கழகங்களின் மொத்த சொத்துக்களின் மதிப்பில் 27 வீதத்தையும், வர்த்தகத்தில் சுமார் 29 வீதத்தையும் 1970 ஆம் ஆண்டே பிடித்து வைத்திருந்தன. நாட்டிலுள்ள 50 பெரும் வர்த்தக வங்கிகளின் சொத்து, மற்றும் வைப்புத் தொகையில் 61 வீதத்தை பத்து பென்னம பெரிய வங்கிகள் கைப்பற்றின.
வெளிநாடுகளில் அமெரிக்காவின் நேரடி மூலதனம் இடல் 1950 களில் 20,550 கோடி ரூபாய்களாக இருந்தது. இது சுமார் 25 வருடங்களின் பின் அதாவது 1976ம் ஆண்டு 2,40,100 கோடியாக உயர்ந்தது. ஏகாதிபத்திய நாடுகளின் மொத்த மூலதன ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கோ 52 வீதமாகும். 76ல் இருந்த உலகிலுள்ள மிகப் பெரிய முதுலாளித்துவ தொழில் கழகங்கள் 500 இல் 260 அமெரிக்காவின் கைவசம் வந்துவிட்டது.
பிரான்சின் அணுகுண்டு சோதனையும் அதற்கு எதிரான போராட்டங்களும்
பிரான்சில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அணுகுண்டு பரிசோதனை முயற்சி மீளத் தொடங்கியதைத் தொடர்ந்து பல பாகங்களிலும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியது. ஆரம்பத்தில் இப் போராட்டத்தை ‘பச்சைக் கட்சி’ (Green peace) இனரால் முன்னெடுக்கப்பட்டது. பின்னர இது சாதாரண மக்களின் போர்க்குணமுள்ள போராட்டமாக வளர்ச்சி அடைந்தது.
எண்ணெக் குத எரிப்பும் அதில் எழும் சந்தேகங்களும்
கொல்லானவை, உருகொடவத்தை மற்றும் மட்டக்களப்பு எண்ணெக் குதங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்து வருகின்றது. இத் தாக்குதல்களை அரசை பொருளாதார ரீதியில் நெருக்கடிக்க உள்ளாக்கும் என்ற அடிப்படை பலமாக எல்லாப் பாகத்திலும் எதிரொலித்தது. இந்த நோக்கில் தான் புலிகளும் இதைச் செய்திருப்பர் என அனைவரும் அபிப்பிராயப்பட்டனர்.