Language Selection

பி.இரயாகரன் - சமர்

தனிமனிதன் விரும்பியவாறு வழிபடும் உரிமையை மறுத்து, இப்படித்தான் நீ வழிபட வேண்டும் என்பது பாசிசம். அதன் போது இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதும் கூட பாசிசம். இப்படி பாசிசத்துக்கு பல முகமுண்டு. பாசிசம் தன்னை மூடிமறைக்க இந்து தமிழ் கலாச்சாரம், அதன் ஒழுக்கம் என்று வேசம் போட்டுத்தான், தன்னை மக்கள் முன் இட்டுச்செல்லும். மகிந்த பாசிசமோ இன்று தன்னை தமிழ்மக்கள் மத்தியிலும் அரசியல் நிறுவனமாக்க, இந்துப் பாசிட்டுகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

மகிந்தவும் – ஈ.பி.டி.பி கும்பலும் தங்கள் அதிகாரம் மூலம் வென்ற யாழ் மாநகர சபையின் துணையுடன், யாழ் இந்து பாசிட்டுகளும் கூட்டாக இணைந்து மக்களுக்கு விதிகள் போடுகின்றனர். இப்படி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் உடை பற்றிய, புதிய நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புலிகள் முதல் கூட்டமைப்பு வரை உடன்பாடு கொண்ட, இந்து பாசிச தமிழ் ஒழுக்கவாதிகளின் வக்கிரத்தை, மகிந்தா தன் கையில் ஒரு ஆயுதமாக  எடுத்துள்ளார். சமூகத்தை மகிந்த சிந்தனை, இப்படியும் தன் பின்னால் பாசிசமயமாக்குகின்றது.  

மக்களை நேசித்தான் என்ற ஒரு காரணத்துக்காக, 22 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் புலிகள் மற்றொரு படுகொலையை நடத்தியிருந்தனர். எதற்காக? தங்களை “அரசியல் அனாதையாக்கும்” போராட்டம் என்று எதைப் புலிகள் கூறினரோ, அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய விமலேஸ்வரனை உரிமை கோராது, அரசியல் கோழைகளான புலிகள் படுகொலை செய்தனர்.

வேத-ஆரிய சடங்குகளை பின்பற்றிய ஒரு பிரிவினர், (ஆரிய) பூசாரிகள் வடிவில் தான் சிதைந்த சமூகத்தில் நீடிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் ஆரியராகவோ, ஆரிய வேத மொழியை பேசுபவராகவோ இருக்கமுடியவில்லை. அதன் பெயரால், அவர்கள் தம்மைத் தாம் அடையாளப்படுத்திக் காட்டவும் கூட முடியவில்லை.

தமிழ் மக்கள் பிச்சை கேட்பதாகவும், பிச்சை போடுவதுதான் தமிழ் மக்களின் அரசியல் என்கின்றனர். மகிந்த குடும்ப சர்வாதிகாரம் உருவாக்கியுள்ள பாசிசம், இன்று இதைத்தான் அரசியலாக வழிகாட்டுகின்றது. இதை உதவி, மனிதாபிமானம், தமிழரின் கடமை என்று எல்லாம் இதற்கு விதவிதமாக பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.

நீண்ட ஒரு அரசியல் வேலையூடாக தான், யாழ்பல்கலைக்கழக மாணவர் போராட்டம் அரசியல் மயமானது. இதற்கு மாறாக திடீரென்று அரசியல் அற்புதங்கள் நடப்பதில்லை. அன்று போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக் குழுவின் பெரும்பான்மை, அரசியலற்ற சாதாரண மாணவர்களைக் கொண்டதாகவே இருந்தது. இதைச் சுற்றி இயங்கியவர்கள், அரசியலில் முன்னேறிய பிரிவாகும். இவர்களின்றி, இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து இருக்க முடியாது. 

1930 களில் கிட்லரின் தலைமையிலான நாசிய ஜெர்மனி, யூதர்களுக்கு எதிரான பல இன, நிறத் தடைகளைக் கொண்டு வந்தது. அதுபோல்தான் இந்தத் தடையும். அன்று போல் இன்றும், சொந்த மக்களை ஏமாற்றும் தடைச் சட்டங்கள்.

சர்வதேச ஒழுங்கை உலகில் பேணிக் கொள்ளும் மேற்குநாடுகளோ, இஸ்லாமிய மத வன்முறையைக் காட்டித்தான் தன்னை நிலைநிறுத்துகின்றது. இதன் மூலம் ஈராக்கிய எண்ணை வயல், ஆப்கானிஸ்தானில் எரிவாயு முதல் கனிம வளங்கள் அனைத்தையும் மேற்கு கொள்ளையிடுகின்றது. தங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை, வெறும் மத வன்முறையாக மட்டும் காட்டுகின்றது. தங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரானதாக, அது காட்டுவது கிடையாது.

வர்க்க அரசியலை மூடிமறைக்க கடந்தகால போராட்டத்தினை "தன்னியல்பானது" என்று திரித்து காட்டுகின்ற "மே18" அரசியல். கடந்தகால போராட்டங்களை மறுப்பதுடன், நடந்தவைகளை தன்னியல்பானதாகவும் காட்ட முனைகின்றது. இந்த அரசியலின் எடுபிடியாக தன்னை மூடிமறைத்து இயங்கும் தேசம்நெற், தன்னை முனைப்பாக்கி காட்ட வரலாற்றை திரிக்கும் நாவலனின் துணையுடன், யாழ் பல்கலைக்கழகப் போராட்டத்தை "யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் தன்னெழுச்சியான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது." என்கின்றது.

சமூக மாற்றத்தை கோராமல், சமூகத்தை திரிப்பது ஏன்? சமூகத்தில் நடந்த மாற்றங்களை, இல்லையென்று மறுப்பது ஏன்? சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுப்பது ஏன்? இதுவோ இன்று முன்நகர்த்தும் ஒரு மக்கள் விரோத அரசியல். இன்று திடீர் அரசியல், திடீர் மார்க்சியம், திடீர் புரட்சி பேசும் அனைவரும், கடந்த போராட்டத்தை மறுக்கின்றனர். கடந்த கால போராட்டத்தை மறுப்பது, திரிப்பது, அத்தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது என்பது, இன்றைய எதிர்ப்புரட்சி அரசியலில் மையமான வெளிப்படையான அரசியல் கூறாகும். யாரொல்லாம் கடந்தகால போராட்டத்தை அங்கீகரித்து செல்லவில்லையோ, அவர்கள் தொடர்ந்தும் மக்கள் விரோதிகள்தான்.  

நீதி, சட்டம் முதல் ஜனநாயகம் வரையான அனைத்தும், ஆளும் வர்க்கத்துக்கு விபச்சாரம் செய்வது தான் அதன் தார்மீக ஒழுக்கமாகும். உண்மைக்கும், மக்களின் உரிமைக்கும், மக்களின் வாழ்வுக்கும் இடமில்லை என்பதைத்தான், ஆளும் வர்க்கங்கள் தங்கள் வரலாறாக மனிதகுலத்தின் முன் சொல்லி வந்துள்ளனர். மக்கள் போராடினால் தான் அவர்களுக்கு விடிவும், ஏதாவது கிடைக்கும் என்பதையும் மக்களின் வரலாறு புகட்டி வந்துள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி தனது 5 வது மாநாட்டில் தனது கட்சியின் பெயரை "புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி" என்று பெயரை மாற்றியுள்ளது. இப்படி தன் பெயரை மாற்றியுள்ள அக்கட்சி, இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தன் அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்குமா என்பதே எம்முன்னுள்ள அரசியல் கேள்வி. புரட்சிகர அரசியல் வெற்றிடத்தை, அக்கட்சி தன் வர்க்கப்போராட்டத்தின் மூலம் முன்னெடுக்குமா?

பெயர் மாற்றங்கள் மட்டும், புரட்சிகர கட்சியாக்கிவிடாது. மாறாக 70 க்கு பிந்தைய தனது 40 வருட இக்கட்சியின் புரட்சிகரமான நடைமுறையற்ற, பிரமுகர் கட்சி என்ற தனது இருப்பை மாற்றியமைக்க வேண்டும். இதை அரசியல் ரீதியாக, குறைந்தபட்சம் விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்க வேண்டும். ஆனால் வெளியாகிய அறிக்கையோ, இதை எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை.  

தேசம்நெற் தனது வலதுசாரிய அரசியல் பின்னணியுடன், போராட்டத்தை இழிவாகக் காட்டி அதைக் கொச்சைப்படுத்தியிருக்கின்றது. திரிபுகளையும் புரட்டுகளையும், தமது வலதுசாரிய அரசியல் காழ்ப்புடனும் தனிநபர் வெறுப்புடனும் புனைந்து, இதுதான் பல்கலைக்கழகப் போராட்டம் என்று வரலாற்றை திரித்துக் காட்டியது. இதற்கு நாவலனின் திடீர் அரசியல் வருகைக்கு ஏற்ப, அவர் தன்னை நிலைநிறுத்த முன்வைத்த கூற்றுகளின் துணையுடன், தேசம்நெற் தன் அரசியல் அவியலைச் செய்துள்ளது. இப்படி தேசம்நெற் கொச்சைப்படுத்திய இந்தப் போராட்டத்தில் பங்கு பற்றிய பலர், பின்னால் புலிகளால் உதிரிகளாகவே கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டம் எந்தக் கட்டத்தில், எந்தச் சூழலில், எப்படி யாரால் முன்னெடுக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.    

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE