Language Selection

பி.இரயாகரன் - சமர்

அரசியல் ரீதியாக மக்களுக்கு எதிரான அரசியல் நிலையை இயக்கங்கள் உருவாக்கியதற்கு, இலங்கை இனவாத பாசிச அரசை நாம் நேரடியாக குற்றம் சாட்டமுடியாது. மாறாக போராடும் அமைப்புகளின் வர்க்கம் சார்ந்த, மக்கள் விரோதத் தன்மையே இதன் பிரதான அடிப்படையாகவும், மூல வேராகவும் இருந்துள்ளது. இன ஒடுக்குமுறையை பேரினவாத பாசிச அரசு தமிழ் மக்கள் மீது திணித்து அவர்களை அடக்கிய போது, அதற்கு எதிரான போராட்டம் இயல்பாகவும் இயற்கையாகவும் மனித உரிமைக்கானதாக எழுந்தது.

புலி ஒரு பாசிச இயக்கமாக, அதுவே ஒரு அரசியல் சக்தியாக இருந்ததை பலர் புரிந்து கொள்ள மறுக்கும் போதே, தொடர்ச்சியான தவறுகள் இழைக்கப்பட்டது. புலிகளை வெறும் குட்டிப+ர்சுவா வர்க்க இயக்கமாகவும், தேசிய பூர்சுவா வர்க்க நலனை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதினர். புலிப் பாசிசத்தின் அடிப்படையை காணத் தவறியதன் மூலம், சரியான அரசியல் வழி தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பாசிசத்துக்கு துணைபோனார்கள். உண்மையில் புலிகளின் பாசிசத்துக்கு எதிரான அணியை துல்லியமாக தனித் தனியாக ஆராய்ந்தால், பாசிசத்தை நிலை நாட்டுவதில் தோல்வி பெற்ற மற்றொரு பாசிச பண்பியலை அடிப்படையைக் கொண்ட உதிரி நபர்களும், குழுக்களும் காணப்படுகின்றனர். புலிப் பாசிசத்தை சரியாக அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள தவறியதன் விளைவு, எதிர் தரப்பையும் புரிந்து கொள்வதை நிராகரிப்பதன் மூலம் போராட்டமே அழிந்தது. அரசியல் ரீதியான தவறான மதிப்பீடு, அரசியல் ரீதியான பாசிச கண்ணோட்டத்தையே நட்பு சக்தியாக அனுசரிக்க கோரியது.

புலிகள் எப்படி ஒரு பாசிச இயக்கமாக உருவனார்கள் எனப் பார்ப்போம். முதலில் இதை நாம் வரலாற்று கூறில் இருந்து குறிப்பாக பார்ப்போம்;. சண் தலைமையிலான இடதுசாரி இயக்கம் முன்னிறுத்திய வர்க்கப் போராட்டமும், வடக்கில் நடத்திய சாதிப் போராட்டங்களும், தமிழ் வலது பிரிவின் பொது அரசியலை நெருக்கடியாகியது. தமிழ் தேசியத்தை முன்வைத்து வந்த வலது பிரிவுகளான நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு வர்க்க நலன்களுக்கு, இது பலத்த அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதே போன்று இலங்கை அளவில் தொடர்ச்சியாக பல குழுக்கள் சார்ந்த இடதுசாரி போராட்டங்கள், சுரண்டும் வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதை முறியடிக்கவே வலது பிரிவுகள் இனம் கடந்து, இன மோதலை உருவாக்கினர். இலங்கையில் 1960க்கு பிந்திய பத்தாண்டின் இறுதியில் நடந்த வர்க்கப் போராட்டங்கள், வலது பிரிவை ஒற்றுமைப்படுத்தியது. அமைதியான வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

புலிகள் தமது தேசியமாக, பாசிசத்தையே ஆணையில் வைத்தனர். பேரினவாதத்துடன் சண்டை செய்வதாக கூறிக்கொண்டு, மக்களை ஓடுக்கினர். மக்களையும், உலகத்தையும் எமாற்ற பொய்யும் புரட்டும் மூலதனமாகியது. எதிரியைப் பற்றி வாய் கிழிய கூறிக் கொள்வதன் மூலம், ஜனநாயகத்தை பறித்தெடுத்தனர். மாற்றுச் சிந்தனையை முன் வைத்து, தேசத்தின் அடிப்படையான தேசிய பொருளாதார நலன்களைப் பற்றி பேசும் போது, அவர்களை நாட்டுபற்றயற்ற துரோகி என முத்திரை குத்தினர். ஜெர்மனிய நாசிகளைப் போல், தாம் அல்லாத அனைவரையும் கொன்று அழித்தனர். புலித் தலைவர்கள் தாம் விரும்பியதை எல்லாம் செய்தார்கள் என்றால், கிட்டலர் போல் பாசிச கட்டமைப்பை தமிழ் மக்கள் மேல் நிறுவிய ஒரு சர்வாதிகார நிலையில் தான் அது சாத்தியமானது.

எனது மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற இந்தக் குறிப்பை 2001 இல் எழுதிய போது பின்வரும் குறிப்பை நான் எழுதியிருந்தேன். புலிகளின் பாசிசம் பற்றி எழுதியுள்ளது தொடர்பாக பலர் ஆச்சரியமடையாலாம். ஆரம்ப சமர் இதழ்களை படிக்காதவர்கள், மற்றும் என்னை மண்ணில் தெரியாதவர்களுக்கு இது புதிய விடையமாக இருப்பது தவிர்க்க முடியாது என்று குறிபிட்டு எழுதியிருந்தேன். ஆனால் பின்னால் மாறிய சூழலை கையில் எடுத்து, புலிப் பாசித்தை பற்றி விரிவாக எழுதினோம். இந்த நினைவுகள் எழுதிய காலத்தில், பாசிசம் பற்றி பெரிதாக எழுதுவது தவிர்க்கப்பட்டது. இந்த குறிப்பு, அன்றைய சூழலை எடுத்துக் காட்ட இன்று உதவுகின்றது.

1983 இனக்கலவரம் தான், இந்தியாவின் திட்டமிட்ட இனவழிப்பாக மாறியது. உடனடியாக பேரினவாதத்தால் இனம் சூறையாடப்பட்டது ஒருபுறம், நீண்டகால அடிப்படையில் இந்தியாவால் திட்டமிட்டு சூறையாடப்பட்டது மற்றது.

1983 யூலை இனப்படுகொலை என்பது, 1983ம் ஆண்டு மீண்டும் நடந்த ஒரு இனக்கலவரம். 1977, 1981 க்கு பின், பேரினவாதம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கும் இனக்கலவரத்தை, மீண்டும் தமிழ் மக்கள் மேல் அரசு ஏவியது. சிறைக்கைதிகள் முதல் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்ந்த தமிழ் மக்களை, தமிழன் என்ற ஓரே காரணத்தினால் பல தளத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். ஆம் ஒரு படுகொலை. எந்த நீதி விசாரணைக்கும் உள்ளாகாத படுகொலை.

புலிகளின் பாசிசமோ ஜனநாயக விரோதமான சமூகத்தை நிலைநாட்டியதால், துரோகம் சார்ந்த ஒரு சமூகப் பிரிவை அது இடைவிடாது உற்பத்தி செய்தது. ஒப்பிட்டு அளவில் அரசுக்கும் புலிக்கும் இடையில், பாசிசத்தை கையாளும் அளவிலும், பண்பிலும், புலிகள் மிகவும் வக்கிரமாக இருந்தனர். இறுதி யுத்தத்தின் போதும், அதன் பின்னும் அரசு புலியை மிஞ்சியது.  புலிபாசிசம் ஆட்டம் போட்ட காலத்தில், மக்களிள் பிரதான எதிரி அரசாக தொடர்ந்து நீடித்தது, இங்கு உள்ள ஒரு முரண்நிலையாக இருந்தது. புலிகளின் மேலான அழித்தொழிப்பு அரசியலுக்கு எற்ப, அரசுக்கு பின்னால் ஒரு பெரும் பிரிவு மக்களை புலிப்பாசிசம் அணிதிரட்டி கொடுத்தது. குறிப்பாக புலிப் பாசிசத்தின் நிலையால் ஆயுதம் எந்திய மற்றும் எந்தாத நிறுவனமயப்படுத்தப்பட்ட துரோகக் குழுக்கள் கூட, ஒரு சமூகப் பிரிவாக வளர்ச்சியுற்றது.

07.08.1986ம் ஆண்டு புலிகள் ராக்கிங் செய்ததாக கூறி, மூன்று மாணவர்கள் மேல் தாக்குதலை நடத்தினர். இதையடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு தன்னெழுச்சியான போராட்டம் தொடங்கியது. இது முன் வைத்த கோரிக்கை சமூகம் சார்ந்து நின்று போராடுவதற்கு பதில், உணர்ச்சிவசப்பட்டதாக எழுந்தது.

பேரினவாத பாசிச அரசும், மறுபுறம் எஞ்சிய புலிப் பாசிசத்தின் எச்சங்களும் ஆதிக்கம் பெற்ற அரசியல் கூறாக இன்னமும் உள்ளது. ஒரு பகுதி மக்கள் தாம் உருவாக்கி வைத்திருந்த அரசியல் மாயையைக் களைந்தாலும், மற்றொரு அரசியல் போக்கை முன்னெடுக்கவில்லை. வீங்கி வெம்பிக் கிடந்த பிரமைகளையே இழந்தனர்.

சென்ற தொடரில் புளட்டில் இருந்து விலகிய மாணவர்கள் தான், போராட்டத்தின் முன்னோடிகள் என்பதை கூறியிருந்தேன். அவர்கள் அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவினராக இருந்ததுடன், அரசியல் முன்முயற்சி கொண்டவராக இருந்தனர். விமலேஸ் அதில் குறிப்பிடத்தக்க ஒருவன். போராட்டத்தின் அரசியல் திசை வழியையும், மாணவர்களின் இயல்பான தன்னெழுச்சியான போராட்டத்துக்கு பதில், அதை அரசியல்ரீதியாக முன்னெடுக்கும் வண்ணம் முன்னேறிய பிரிவு பல்கலைக்கழத்தில் தொடர்ச்சியாக 1986 - 1987 இல் தீவிரமாக இயங்கியது. இயக்கங்களின் அராஜகங்களுக்கு எதிரான மக்கள் அரசியல், மிக உச்சக் கட்டத்தை எட்டிய காலம்.

வெளிப்படையற்ற தீர்வைக்காணல் என்பது ஒரு சதி. வடக்கு கிழக்கு இணைப்பாகட்டும் அல்லது எதுவாக இருக்கட்டும், அவை வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டு அணுகப்பட வேண்டும். தமிழ் மக்களையும், தமிழ் இனப் பிரிவுகளையும் இணைக்கும் வண்ணம், நேர்மையான வெளிப்படையான அரசில் அணுகுமுறை அவசியமானது. இதை மறுப்பதுதான் கூட்டமைப்பின் இன்றைய அசிங்கமான சதி அரசியல். இதைத் தான் கடந்தகாலத்தில் புலிகள் செய்து, அரசியல் ரீதியாகவே மடிந்து போனார்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE