Language Selection

பி.இரயாகரன் - சமர்

28.04.1987 என் சுதந்திரத்தை இழந்த, மறக்கமுடியாத ஒரு மாலைப் பொழுதாகிவிட்டது. அன்று கொலைகார புலிக் கும்பலின் கண்காணிப்பில் நான் இருந்ததை அறிந்திருக்கவில்லை. அன்று மாலை  எனது ஊரான வறுத்தலைவிளானில் இருந்து தெல்லிப்பழையை நோக்கி இராணுவம் முன்னேற முயன்றதால், புதிய மோதல் புலியுடன் தொடங்கியிருந்தது. துப்பாக்கி வேட்டுகளும், இடை இடையேயான செல்லுமாக சத்தம் இரைந்து கொண்டிருந்தது. நான் நிலைகொண்டிருந்த இடத்துக்கும் (மகாஜனாக் கல்லூரிக்கு அருகில்)  மோதல் நடைபெற்ற இடத்துக்கும் இடையில் ஒரு மைல் தூரமே இருந்தது.

என் மீது மிகத் தீவிரமான கண்காணிப்பு உடைய நாளாக 28.4.1987 அன்று இருந்தது. அன்று அமைப்பு சார்ந்த பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர் ஒருவரின் சில தன்னிச்சையான முடிவு ஒன்றைப் பற்றி அவருடன் கதைக்க வேண்டியிருந்தது. அதனால் காலை ஆறு மணிக்கே, நான் பாதுகாப்புக்காக இரவு தங்கியிருந்த ஒரு ஆதரவாளர் வீட்டில் இருந்து வெளியேறினேன். சைக்கிளில் ஏழு மைல்கள் கடந்து சென்று இருந்தேன். அதிஸ்டவசமாக அது கண்காணிக்கப்பட்டு இருக்கவில்லை. அதிகாலையாக இருந்தமையால், அவர்கள் கண்காணிப்பில் இருந்து தப்பி இருந்தேன். இதை நான் பின்பு அவர்களின் வதைமுகாமில் வைத்து உணரமுடிந்தது. ஏனெனில் என்னை பின் தொடர்ந்து இருந்தால், அந்த சம்பவம் பற்றி எனது விசாரணையில் வந்திருக்கும். அவரும் கைது செய்யப்பட்டு இருப்பார். இந்த தன்னிச்சையான அப் பெண்ணின் முடிவு பற்றியும் சற்று பார்ப்பது நல்லது.

புலி அல்லாத அனைவரும் துரோகிகள், சமூக விரோதிகள். இதைத் தான் மாத்தையா சொன்னான் என்றால், புலிகள் தங்கள் பாசிச வரலாற்றை இப்படித்தான் தேசியமாக்கினர். தாம் அல்லாத மற்றவர்கள் மாற்றுக் கருத்தை வைத்திருப்பது முதல் ஆயுதம் வைத்திருக்கும் உரிமை அனைத்தையும், சமூக விரோத செயலாகவும், சட்டவிரோத செயலாகவும் கூறிய புலிகள், சில ஆயிரம் பேரைக் கொன்று ஒழித்தனர். இப்படி மக்கள் விரோத அரசியலை பாதுகாக்கவும், இதற்கு தலைமை தாங்கிய "மேதகு"வின் சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் அடிப்படையில், ஆயிரம் ஆயிரம் படுகொலைகளை புலிகள் செய்தனர்.

கொலைகார புலிப் பாசிசம் நிலவிய அன்று, எனது உரையை பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து இருந்தன. இந்திய ஆக்கிரமிப்பு நிலவிய அன்று, எந்த மாற்றமும் நிகழவில்லை. மற்றொரு பாசிசம் வந்து குடியேறிய ஆரம்ப காலம். மிக விரைவிலேயே இந்த பத்திரிகைகளை தனக்கு சார்பாக இயங்கக் கோரி,  அச்சிடும் இயந்திரங்களையே இந்திய ஆக்கிரமிப்பாளன் குண்டு வைத்து தகர்த்தான். இப்படி பத்திரிகைகள் உண்மைகளை வெளியிடும் "சுதந்திர" அமைப்பாக இருக்கவில்லை.

எனது மறுப்பு உரையை, புலிப் பாசிசம் விதைத்த அச்சத்தின் கெடுபிடியால் பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஆனால் அன்று மாத்தையா மற்றும் எனது உரை ஒலிநாடாவில் (கசெட்டில்) பதிவாகியது. அந்த ஒலிநாடா (கசெட்) தற்போது என்னிடம் உள்ளது. இந்த ஒலிநாடாவில் (கசெட்டில்) இருந்து....

பேராசிரியர் வாரார் புரட்சி செய்ய,
வரிசையில் நில்லுங்கள் புரட்சி செய்ய
மார்க்சிய பிரமுகர் வாரார் புரட்சி செய்ய
இனியொருவிலும் வாரார் புரட்சி செய்ய

என்னைக் கடத்துவதற்கு முன், வேறு சில விடையங்கள் நடந்தன. ஐவரைக் கைது செய்திருந்தனர். அவர்கள் மீதான சித்திரவதையின் தொடர்ச்சியாகவே, ஆறாவது நபராக நான் கடத்தப்பட்டேன். மற்றவர்களைக் கைது செய்தவர்கள், என்னை உரிமை கோராது கடத்திச் சென்றனர். இந்த ஐவரும் என்னுடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வெவ்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களின் ஐந்தாவது நபருடன் மட்டுமே நேரடியாக தொடர்பு கொண்டிருந்தவன். அவர் வேறு யாருமல்ல, சரிநிகர் பத்திரிகை மூலம் அனைவருக்கும் தெரிந்த சிவகுமார் தான். இதற்கு முதல் நபரோ (நாலாவது நபர்) இன்று "உலக தமிழ் நியூஸ்" இணையம் நடாத்தும் குருபரன் தான். புலிகள் இது போன்ற கைது, கடத்தல் படுகொலைகளை, தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செய்தனர். இதன் மூலம் தான், தமிழ் மக்களின் சரியான போராட்டத்தை ஒடுக்கி அதை நசுக்கினர். அதுதான் என் கதையும்.

வழமையான நாட்கள் போன்றே 28.4.1987 அன்றும். மக்கள் தத்தம் வாழ்வு சார்ந்த இயற்கையான கடமை உணர்வுடன் விரைவாக நகர்கின்றனர். இப்படி அவர் அவர் தேவைக்கு அமைய விரைவாக நகருவோரும், மெதுவாக நகருவோரும் என்று, தெல்லிப்பளை வீதி எங்கும் துவிச்சக்கர வண்டிகள் நிறைந்து காணப்பட்டது. இடைக்கிடையே மோட்டார் வாகனங்கள் செல்லுகின்றன. பாதசாரிகள் அவரவர் இயக்கத்துக்கும், தேவைக்கும் ஏற்ப விரைகின்றனர். இயக்கங்களின் மோட்டார் சைக்கிள்கள் பெரும் சத்தத்துடன், வீதியையே அலற வைத்தபடி சீறிச் செல்லுகின்றன. பெரிய நீளமான சேட்டு அணிந்தவர்கள் தமது துப்பாக்கி சகிதம் புது ஏசியா சைக்கிளில், கோயில் தேர் போல் வீதியில் போகும் பெண்களை நோட்டமிட்டபடி, தமது துப்பாக்கி மூலம் பாசிச அதிகாரத்தை தொடர்ந்தும் பாதுகாக்கும் வேட்டையை நோட்டமிட்டபடி, வீதிகளில் பவனி வருகின்றனர்.

போராட்டம் என்பது தங்கள் நலன் சார்ந்த ஒன்றாக குறுகிப் போன காலகட்டம். இந்த மக்கள் விரோத ஜனநாயக படுகொலை வரலாற்றுப் போக்கில் இவற்றை எதிர்த்தே, நான் என் சொந்த மண்ணில் மக்களின் நலன் சார்ந்து போராடினேன். இந்த போராட்டம் என்பது பல தளத்தில், பல மட்டத்தில் நடத்த வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் 1980 இல் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் சாதாரண உறுப்பினராக இணைந்த நான், மிக தீவிரமாக மக்கள் மத்தியில் செயற்பட்டேன். 1983 இல் நான் வாழ்ந்த சுற்று வட்டாரம் மற்றும் மன்னார், வவுனியா, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட அமைப்பு செயல் வீரர்களை அணிதிரட்டியிருந்தேன். மக்கள் மத்தியில் வேலை செய்வது முதல், வீடு வீடாக விருப்பார்ந்த சிறு தொகை நிதி சேகரிப்பு என்று பல்வேறு துறை சார்ந்து, அரசியல் பணியில் ஈடுபடத் தொடங்கினேன்.

தன்னுடன் இல்லாத எவருக்கும் ஜனநாயகம் கிடையாது. இதுதான் இலங்கையின் சட்ட ஆட்சி சொல்லும் மிகத் தெளிவான செய்தி. யார் மகிந்தவை தொழ மறுக்கின்றனரோ, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்;. இதுதான் மகிந்தவின் சிந்தனை. இப்படித்தான் புத்தனின் சிந்தனைக்கு, மகிந்த சிந்தனை இன்று புது விளக்கம் கொடுக்கின்றது.

தமிழர் பிரச்சனை முதல் ஊடகவியல் சுதந்திரம் வரை, கொடுமையும் கொடூரமும் நிறைந்த தங்கள் சிந்தனைகள் மூலம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றனர்.     

புலிகளின் தேசியத்தின் முன், நான் செய்த குற்றம் என்ன? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரி போராடியது தான். இதனால் இந்த மக்களைக் கண்டு அஞ்சிய புலிக் கோழைகள், இனம் தெரியாத நபர்களாக மாறினர். இந்த கோழைகள் வேஷத்தில் தான், புலிகள் என்னைக் கடத்தினர். இரகசியமாக செய்த இந்த கடத்தலை உரிமை கோரததுடன், தாம் அதைச் செய்யவில்லை என்று உலகின் முன் சத்தியம் செய்தனர். தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்றனர். தாம் இது போன்ற நடவடிக்கைகளில், ஒரு நாளும் ஈடுபடுவதில்லை என்றனர்.

இயற்கையில் இருந்து நாம் நுகரும் பொருட்களை, மனிதனின் உழைப்பே உருவாக்கின்றது. உழைப்பு இயற்கை மீது நிகழ்கின்றது. இப்படி உழைத்து உருவாக்கிய பொருட்கள் மீது, மனிதன் ஆளுமை செலுத்த தவறிய ஒரு உலகில் நாம் வாழ்கின்றோம்;. மாறாக பொருட்கள் மனிதன் மேல் ஆளுமை செலுத்துகின்றது. தன் கையால் உருவாக்கிய பொருட்களின் அடிமையாகிய பரிதாபம், மனித சமுதாயத்தை மீள முடியாத அடிமைத்தனத்தில் தள்ளியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE