Language Selection

பி.இரயாகரன் - சமர்

தமிழ் மக்களின் பிணம் தான் புலி அரசியலாகியது. தமழ்மக்களின் அவலம் தான் தீபச் செல்வனின் கவிதையாகியது. இது தான் இவர்களின் அரசியல் சமன்பாடு. இதற்கு வெளியில் மக்கள் அரசியல் என எதுவும் கிடையாது. புலிகள் இருந்தவரை தீபச்செல்வன் புலியிசத்தைக் கவிதையாக்கியவர், அந்த  தவறான போராட்டத்தில் ஏற்பட்ட பொது மனித அவலத்தை, மீளவும் தன் கவிதையாக்கினார். இந்த பொது மனித அவலம் எல்லாம் பேரினவாதத்தின் செயலாக காட்டும் அதேநேரம் அதை விதி என்கின்றார். இது தங்களால் ஏற்பட்டதல்ல என்ற, புலியிசத்தை முன்தள்ளுகின்றார். பேரினவாதம் சார்ந்த பொது மனித அவலம் சார்ந்த உண்மையை ஆதாரமாகக் கொண்டு, தங்கள் வலதுசாரிய மனிதவிரோத அரசியல் நடத்தைகளை மூடிமறைக்கின்றார். இதை மிக நுட்பமாக தீபச்செல்வன், தன் கவிதைகள் மூலம் செய்கின்றார். நாம் உட்பட இந்த மூடிமறைத்த அரசியல் பித்தலாட்டத்தை, இனம் காண முடியாது போனது என்னவோ உண்மைதான். புலிகள் பிணத்தை உற்பத்தி செய்து அரசியல் நடத்திய போது, அந்த பிணத்தை வைத்து  நடத்திய அரசியலில் யார் போலிகள் யார் போலியல்ல என்பது தெரியாத ஒரு மயக்கத்தை எங்கும் உருவாக்கியது. இது போல் மனித அவலம் மீது இன்று கேபி, தீபச்செல்வன் முதல் யார் யாரோ எல்லாம் அரசியல் செய்கின்றனர்.

இலங்கையின் இன்றைய பிரச்சனைகள் தான் என்ன? அவை பற்றி நாட்டை ஆளும் கும்பல் அக்கறைப்படுகின்றதா? இல்லை. தேசிய இனப்பிரச்சனைக்கு அற்ப சலுகையைக் கூட அது கொடுக்க மறுக்கின்றது. இப்படி இனப்பிரச்சனையை தீர்க்க மறுக்கின்ற பேரினவாதிகள், தொடர்ந்து இலங்கையில் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக முன்தள்ளிய வண்ணம் உள்ளனர்.  

இது ஒன்றும் கற்பனையல்ல. நிஜம். அண்மையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்திய பொலிசார் பிடித்த குகநாதனை விடுவிக்க, சபா நாவலன் அவரிடம் இந்திய ரூபா 30 இலட்சத்தைக் கோரினார். நடந்த சம்பவம் உண்மை. கைது, பேரம், ஊழல், இலஞ்சம் … இதில் சபா நாவலன் சம்மந்தப்பட்டது எல்லாம் உண்மை. இதன் பின்னணியில் உலவும் தகவல்கள் பல. பொய், புரட்டு, உண்மை, மூடிமறைப்பு என்று அனைத்தும் கலந்த தகவல்கள் வெளிவருகின்றது. அதைத்தான் இங்கு நாம் தொகுத்துத் தர முனைகின்றோம்.

என் மீதான தொடர்ச்சியான விசாரணையில், எனது தயக்கமற்ற பதில், முன் கூட்டியே அவர்களுக்கு விடைதெரிந்த கேள்விகள் முடிவுக்கு வந்தது. விடைதெரிய வேண்டிய கேள்விகள் பல. ஆனால் அதை மீள மீளக் கேட்டனர். கேட்கும் போது கண்மூடித்தனமாகத் தாக்கி அடித்தனர். ஏற்பட்டிந்த காயங்களை மீளவும் இரத்தம் வரும் வண்ணம் மீளமீள சிதைத்தனர். 

புலிகள் தாம் தெரிந்து கொண்ட மார்க்சியத்தை, தங்கள் எதிர்ப்புரட்சிக்கு ஏற்ப பயன்படுத்தத் தொடங்கினர். மாத்தையா தொடர்ச்சியான கேள்விகளை, ஜனநாயக மத்தியத்துவத்தை அரசியல் ரீதியாக எடுத்துக்காட்டி தரவுகளைக் கோரினான். நான் அதீத ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து, அவர்களின் கேள்விகளை எதிர்கொண்டு வேகமாக சந்தேகப்படாத வகையில் பதிலளித்தேன். கற்பனைப் பெயர்களைக் கொண்டும், அவர்கள் நன்கு அறிந்த அவர்கள் தேடுகின்ற நபர்களைக் கொண்டும் பதிலளித்தேன். இதன் மூலம் எனக்குத் தெரியாது என அனைத்தையும் மறுத்தேன்;. நான் பகிரங்கமாக, மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர் என்றேன். அப்படித்தான் அன்று மக்கள் மத்தியில் மிகப் பகிரங்கமாக வேலைசெய்தேன். புலிகள் அறிய விரும்பிய, கைப்பற்ற விரும்பிய பணம், இராணுவ உபகரணங்கள் என் பொறுப்பில், என் கண்காணிப்;பில் தான் இருந்தது. நான் இராணுவக் குழு உள்ளிட்ட தளத்தின் நிதி மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு கூட பொறுப்பாக இருந்தேன். 

தேர்தல் "ஜனநாயகம்" எவ்வளவு கேலிக்குரியது என்பதை, இலங்கை சர்வாதிகார ஆட்சியாளர்கள் நிறுவி வருகின்றனர். மக்கள் வாக்களிப்பது என்பது, எவ்வளவு முட்டாள் தனம் என்பதையும், அரசியல்வாதிகளின் நடத்தைகள் எடுத்துக் காட்டுகின்றது. மகிந்த தொடர்ந்து தான்தான் அடுத்த ஆட்சியாளன் என்பதை முன்கூட்டியே முடிவெடுத்துக் கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றுகின்றான். இங்கு மக்கள், மக்களின் வாக்கு என்பதெல்லாம் வெறும் தூசு. பாராளுமன்ற ஜனநாயகத்தில், இது விபச்சாரம் செய்யத்தான் லாயக்கு.

மிருகபலி "மூடநம்பிக்கை" என்று சொன்னது ஆறுமுகநாவலர் வழிவந்த, யாழ் பார்ப்பனிய வெள்ளாள இந்துக்கள். மாட்டு இறைச்சியை தின்னாத, மூடநம்பிக்கையை கொண்ட இந்துக் கூட்டம். இன்று யாழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாட்டு இறைச்சியை உண்ணுகின்றனர். இதற்கு வெளியில் சாதியம் பேசி, மத கலாச்சாரம் பேசிய ஆறுமுகநாவலரின் வாரிசுகள் தான், மிருக வழிபாட்டு உரிமையை தடுக்க முனைகின்றது. சிலாபம் முன்னேஸ்வர கோயியில் நடந்த மிருக பலியிலான வழிபாட்டு உரிமையை தடுக்க முனைந்த கூட்டம், இதை மூட நம்பிக்கை என்றனர். மிருக வதை சட்டத்தையும் கையில் எடுக்க முனைந்தனர்.

மாத்தையா உறுமியபடி தொடர்ந்து தாக்கினான். புலிகள் விடை தேடிய பல தொடர் கேள்விகள் கேட்டனர். கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? என்றான். நானோ இதுபற்றிய விபரங்கள் எனக்கு எதுவும் தெரியாது என்றேன்.

புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.என்று ஆயுதத்தை கீழே வைத்து, புலிகள் சரணடைந்ததை இது தெளிவாக்குகின்றது. அவரின் மற்றைய பேட்டிகள் இதை உறுதி செய்கின்றது.

7ம் திகதி முதல் 10 திகதி வரை பல்வேறு தளத்தில் பல விடையங்களை பொதுவாக கேட்டார்கள். இடையில் விஐpதரன் தொடர்பாகவும், அப் போராட்டம் தொடர்பாகவும் கேட்டனர். அப்போது பல்கலைக்கழகம் எடுத்த படங்களை கொண்டு வந்து, அதை வைத்து விசாரித்தார்கள். இதை அவர்கள் பல்கலைகழக மாணவர் அமைப்புத் தலைவர் சோதிலிங்கத்தின் வீட்டில் இருந்து கைப்பற்றி இருந்தனர்.

யுத்தத்தின் பின்னான பேரினவாதம், மக்களை பிளக்கும் இனவரசியலை தொடர்ந்து முன்தள்ளுகின்றது. தமிழ்  குறுந்தேசியமோ, தொடர்ந்து தங்கள் இனவாதம் மூலம் இந்த இனப்பிளவை மேலும் ஆழமாக்குகின்றது. இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்வைத்து, இடதுசாரியம் செயற்படவில்லை. மாறாக சந்தர்ப்பவாதமாகவே வலதுசாரியத்துடன் கூட்டமைத்து, தானும் இனவாதத்தை முன்தள்ளுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE