Language Selection

பி.இரயாகரன் - சமர்

இன்று ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் எதை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கின்றதோ, அந்த சிந்தனைமுறையே இனவொடுக்குமுறையைக் காணமுடியாமல் செய்கின்றது. அந்த சிந்தனைமுறை என்ன என்பதை, எங்கள் நடத்தையில் இருந்து கண்டறிவோம்.

இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் போராட்டமே, ஆயுதப் போராட்டமாக மாறியதா எனின் இல்லை. இனவொடுக்குமுறைக்கு எதிரான மக்கள்திரள் போராட்டமே நடக்கவில்லை. தமிழ் இனவாதத்தை வாக்கு அரசியலுக்காக முன்வைக்க, இனவொடுக்குமுறை பயன்படுத்தப்பட்டதே வரலாறு.

இனவொடுக்குமுறையை விட்டுவிட்டு, தமிழனின் அதிகாரத்திற்கான போராட்டமாக இனவொடுக்குமுறையை குறுக்குவதும் - கோருவதுமே நடக்கின்றது. 1980 களில் தோன்றிய ஆயுதப் போராட்டமானது இறுதியில் புலியின் அதிகாரத்துக்கான போராட்டமாகவும் -  படிப்படியாக தனிநபர்களின் அதிகார போராட்டமாகவும் சீரழிந்தது தொடங்கி அதிகார பரவலைக் கோரும் முரண்பட்ட தேர்தல் அரசியல் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான ஒடுக்குமுறையை இனம் கண்டு அதற்கு எதிராக போராடுவதை மறுதளித்ததும் - மறுதளிப்பதுமே தொடர்ந்து நடந்தேறி வருகின்றது.

 

"நான் சாதி பார்ப்பதில்லை!", "எங்கே சாதி இருக்கின்றது!!?" "யார் சாதி பார்க்கின்றனர்!!!" என்று இலங்கையில் நவீன வெள்ளாளியம் எப்படி தன்னை தகவமைக்கின்றதோ, அதேபோல் தான் கமல் எங்கே மனுதர்ம நூல் நடைமுறையில் இருக்கின்றது என்று கேட்கின்றார். பார்ப்பனியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுவார்ப்புச் செய்வது தான், கமலின் பகுத்தறிவுவாதம்.

இலங்கையில் இன-மத ஒடுக்குமுறை எதார்த்தமாக இருக்க, அதை அரசியல்ரீதியாக முன்வைக்க முடியாது இருப்பது ஏன்? இன்று இதை அரசியல்ரீதியாக கேட்பது "துரோகமாக" கருதுமளவுக்கு, இனவொடுக்குமுறைக்கு மறைமுகமான ஆதரவை தமிழ் தேசியம் வழங்குகின்றது.

 

அமெரிக்கா இதுவரை காலமும் உலகுக்கு தன்னை முன்னிறுத்தி எதை ஜனநாயகம் என்று கூறிவந்ததோ, அது பொய்யானது, மோசடியானது, பித்தலாட்டமானது என்று - இன்னும் ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் கூறுகின்றார்.

பிரான்சில்; வெளியான முகமது நபி குறித்த கேலிச் சித்திரத்துக்கு எதிராக, இஸ்லாமிய அடிப்படைவாதமானது தொடர் பயங்கரவாதத்தை ஏவிவருகின்றது. இந்த பின்னணியில் துருக்கி உள்ளிட்ட நாடுகள், சுதந்திரமான கருத்துரிமைக்கு சவால் விடுத்திருக்கின்றன.

இலங்கைக்கு என்று இறையாண்மை கிடையாது. எந்த நாட்டு மூலதனம் இலங்கையை கட்டுப்படுத்துகின்றதோ, அந்த நாட்டுக்கு இலங்கை அடிமை. இது பொதுவான அரசியல் உண்மை. இது சீன மூலதனத்தின் விதியல்ல, உலக மூலதனத்தின் பொது விதி. இதுவரையான உலகம் மேற்கு மூலதனத்தினால் கட்டுப்படுத்தபட்ட சூழல், இன்று மாறி வருகின்றது.


வெள்ளாளிய புலித் தேசியத்தை முன்னிறுத்தும் தமிழகத்து சங்கிகளும் (ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களையல்ல – ஓடுக்கும் தமிழனை), புலிப் பணத்தை தமதாக்கிய புலத்துப் புலிகளும், பிரிட்டிஸ் நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அளவுக்கு, ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு எந்த வித நன்மையுமில்லை.


20வது திருத்தச் சட்ட மூலம் சட்டமாகிவிட்டது. இதன் மூலம் அதிக அதிகாரங்களைக்  கொண்ட ஒரு நபர் நாட்டை ஆளப்போகின்றார். இந்தச் சர்வாதிகாரம் மூலம் நாட்டில் ஜனநாயகமும், நீதியும் கொண்ட, மகிழ்ச்சியான ஒரு நாட்டை உருவாக்கப் போவதாக ஆட்சியாளர்கள் பிரகடனம் செய்கின்றனர்.


தில்லையில் ஒடுக்கப்பட்ட தமிழில் தேவாரம் பாடுவதை தடுத்து நிறுத்தும் பார்ப்பனிய சமஸ்கிருதம். கிளிநொச்சியில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவன் தமிழில் தேவாரம் பாடுவதை தடுத்து நிறுத்துகின்றது வெள்ளாளியம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE