எதையும் மறுபரிசீலனை செய்யும் அறிவு, முடக்கப்பட்டு இருக்கின்றது. நடந்த போராட்டம் மீதான விமர்சனம், சுயவிமர்சனத்தை செய்வது, அரசியல் ரீதியாக தொடர்ந்து மறுக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே இடதுசாரியம் வரையான பொது அரசியலாக உள்ளது. புலியை விமர்சனம் செய்யாத அரசியல் மூலம், இலங்கை தமிழர்கள் மற்றொரு மாற்று அரசியலை ஒருநாளும் முன்னெடுக்க முடியாது. இந்த வகையில் இலங்கை, தமிழகம் புலம் என்று எங்கும் புலித்தேசிய அரசியல் முதல் அதன் தோல்விகள் வரை, விமர்சனம் செய்வது என்பது அரசியல் ரீதியாக தவறாக காட்டப்பட்டு அவை இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. இதை நாம் மட்டும் கோருவதால், எமது விமர்சனங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலித்தேசிய அரசியல் பார்வையே, தொடர்ந்தும் எங்கு ஆதிக்கம் பெற்ற ஒன்றாக நீடிக்கின்றது. இந்த அனைத்து தளுவிய உண்மை, அரசியல் ரீதியாக தொடர்ந்து புதைக்கப்படுகின்றது.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
தமிழ் மக்கள் தோற்றது என்? புலிகள் அழிக்கப்பட்டது ஏன்? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 06)
இதற்கான காரணத்தை எப்படி, அதை எந்த நோக்கில் இருந்து பார்க்கின்றார்கள் என்பது, அரசியல் ரீதியான அவர்களின் நேர்மைக்கு மற்றொரு எடுத்துக் காட்டாக மாறிவிடுகின்றது. நாங்கள் ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தோற்றது ஏன் என்றும், புலிகள் அழிக்கப்பட்டது ஏன் என்ற சுய விசாரணையை செய்ய முடிந்திருக்கின்றதா? சொல்லுங்கள். முதலில் நாங்கள் தான் தோற்கடிக்க காரணமாக இருந்திருக்கின்றோம், மற்றவர்கள் அல்ல. மற்றவர்கள் இதை தமக்கு சாதகமாக கொண்டு வென்றவர்கள்.
இனம் வர்க்கம் சார்ந்து குறுகிய வலதுசாரிய எதார்த்தம் தான் தீபச்செல்வனின் படைப்புகள் (தீபச்;செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 05)
எமது சமூகம், ஏன் இந்த அவலமான அரசியல் நிலையை அடைந்தது? அதை வெறும் பேரினவாதமாக மட்டும் கூறுவது, இந்தநிலை ஏற்பட காரணமாக இருந்த தமது தரப்பு தவறுகளை மூடிமறைப்பதாகும். இதைத்தான் இங்கு தீபச்செல்வன் செய்கின்றார். தனது இனம் சார்ந்தும், தனது வர்க்கம் சார்ந்தும், எதார்த்தத்தின் ஒருபக்கத்தைச் சார்ந்து நின்று எதார்த்தத்தின் முழுமையை மறுக்கின்றார். இதைத்தான் புலிகள் கடந்தகாலத்தில் செய்து வந்தனர்.
போர்க்குற்றத்தை மூடிமறைக்க கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது
மற்றொரு புலி சரணடைவு பற்றிய உண்மையையும், அவர்கள் எங்கே என்ற கேள்வியையும் மகிந்த பேரினவாத அரசின் முன் எழுப்பியுள்ளது. "இங்கு ஒரு சின்ன ஈ அசைந்தால் கூட அது அவருக்குத் (ஜனாதிபதிக்கு) தெரிந்திருக்கும்" என்று, தன் கணவன் எங்கே என்று கொலைகார மாண்பு மிகு ஜனாதிபதியிடம் ஆனந்தி சசிகரன் கேட்டிருக்கின்றார்.
மகிந்த அரசு தங்கள் போர்க்குற்றங்களை மூடிமறைக்கவும் சர்வதேசத்தை ஏய்க்கவும், ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. தாங்கள் சரணடைந்தவர்களைக் கொல்லவில்லை என்பதும், அவர்கள் யாரும் இந்த நாட்டில் காணாமல் போய் விடவில்லை என்று சொல்கின்ற புரட்டை நிலைநிறுத்தும் நாடகங்கள் தான் விசாரணைகள் முதல் ஆணையங்கள் வரையான கூத்துக்கள்.
அருள் சகோதரர்கள் செய்தது சரியா? சரி என்கின்றது இனியொரு. இதில் புதிய திசைகள் நிலை என்ன?
அரசியல் ரீதியாக நீர்த்து போகச் செய்ய பல தில்லுமுல்லுகள். திசை திருப்பல்கள். மக்களின் அவலத்தை பார் என்கின்றனர். குகநாதன் பற்றிக் கதை சொல்லுகின்றனர். முதலில் இதில் இரயாகரன் பற்றி சொன்னவர்கள் தான், இப்போது இப்படிக் கூறுகின்றனர்.
இதன் மூலம் புதிதாகச் சொல்லும் அரசியல் உள்ளடக்கம் என்ன? அருள் சகோதரர்கள் செய்தது சரி என்பதே. இதனால் நாவலன்-அசோக் ஈடுபட்டதும் சரியாகிவிடுகின்றது. இதை மூடிமறைக்க, முடிவற்ற திசைதிருப்பல்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் முதல் அரசியல் பச்சோந்திகள் வரை இந்த விடையத்தை அமுக்கிவிட முனைகின்றனர்.
தீபச்செல்வன் பற்றிய பொதுமதிப்பீடு மீதான அரசியல் திரிபு (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 04)
தீபச்செல்வனுக்கு முற்போக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தது எது?
1.அவரின் பின் வெளிப்படாது இருந்த புலிசார்பு அரசியல் நிலைப்பாடா!? அல்லது
2.அவர் பொதுமக்களின் அவலங்கள் சார்ந்த, அவரின் கவிதை மொழியா!? அல்லது
3.புலிகள் பற்றிய அவரின் கவிதையில் மறைமுகமாக வெளிபட்ட எதிர்மiறான மெல்லிய ஒரு சில விமர்சனங்களா!?
அரசியல் தகிடுதத்தங்களும், அரசியல் வக்கிரங்களும்
இரயாகரன் அனைவருக்கும் எதிராக "அவதூறு" எழுதுகின்றார், இரயாகரன் "தனிநபர்" தாக்குதல் நடத்துகின்றார், இரயாகரன் - நாவலன் "இடையேயான" விவகாரம் இது, இரயாகரன் என்.எல்.எவ்.ரியின் கற்றன் நாசனல் வங்கிப் பணத்தை "மோசடி" செய்தவர், இரயாகரன் ஒரு "மனநோயாளி", இரயாகரன் எழுத்தை நாம் "படிப்பதில்லை" என்று எத்தனையோ திசை திருப்பும் அரசியல் தகிடுதத்தங்கள், அரசியல் வக்கிரங்கள். முதலில் இதுவே ஒரு அரசியல். உண்மைகளை குழி தோண்டிப் புதைக்கும், சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாத அரசியல். இதன் மூலம் என்னதான் இவர்கள் சொல்ல வருகின்றனர். தங்கள் அரசியல் நடத்தைகள் சரியானவை என்பது தான். இதன் மூலம் உண்மைகளை மூடிமறைத்து, மக்களை ஏய்க்கும் அரசியலை தொடர்ந்து நடத்த முனைகின்றனர்.
சுய வாக்குமூலங்கள் மேலான குறுக்கு விசாரணையும், தீர்ப்பும்
இனியொரு நாவலன் வழக்கு போடப் போவதாக சலசலப்புக் காட்டி மிரட்டுகின்றார். நாமே குறுக்கு விசாரணையை நடத்தி, வழக்கை நடத்திவிட வேண்டியதுதான். அந்தக் குறுக்கு விசாரணையை எழுதிக்கொண்டிருந்த போது இனியொரு ஆசிரியரும், அருள் செழியனின் தம்பியுமான அருள் எழிலன் "நடந்தது என்ன" என்ற ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை எழுதி முடிந்த நிலையில் குகநாதன் பேட்டி தேசம் நெற்றில் வெளியாகியது. இதையடுத்து நாவலன் "ஜெயபாலன் – ரயா – குகநாதன்" கூட்டுபற்றி வேறு பேசியிருக்கின்றார். குகநாதன் சமன் மகிந்த ராஜபக்சா என்று சொல்லி, இதுதான் ரயா என்று சொல்லும் எல்லையில் நாவலன் அரசியல் விரைவில் தஞ்சமடையும். நாம் முதலில் அருள் செழியன் - அருள் எழிலன் விடையத்தை சுருக்கமாக பார்த்துவிட்டு குறுக்கு விசாரணைக்கு செல்வோம்.
கடந்தகால விமர்சனம், சுயவிமர்சனமற்ற சாக்கடையில் தான் அரசியல் மிதக்கின்றது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 03)
இனவொடுக்குமுறையினால் தொடரும் பொது அவலம், சுயநிர்ணயம் என்ற அரசியலற்ற பொதுக் கோசம், அரசுக்கு எதிராக முன்னிறுத்திய அடையாளங்கள் மூலம், அரசியல் இன்று தொடர்ந்து சாக்கடையாகின்றது. இதற்குள் வேறுபாடியில்லை என்று காட்டுவது தான், குறுந்தேசிய அரசியல் உள்ளடக்கமாகும்;. இங்கு வலது இடது வேறுபாடு இன்றி, அனைத்தும் சூக்குமமாக மக்களுக்கு எதிராகவே பயணிக்கின்றது. இதுதான் வலதுசாரிகளின் மைய அரசியல் அடிப்படையாகும். புலிகள் இருந்தவரை அனைத்தும் இதுவாக இருந்தது. இன்று அனைத்தும் பொது அவலம் மேல் ஏறி, மிக சூக்குமாக பயணிக்கின்றது. மக்களிடையேயான முரண்பாடுகளை இன முரண்பாட்டின் மூலம் பாதுகாத்தபடி, மக்கள் விரோத அரசியலை முன்தள்ளுகின்றனர். கடந்தகாலத்தில் இதைப் பாதுகாக்கவே, புலிகள் மக்கள் மேல் வன்முறையை எவி பாசிசத்தை நிறுவினர்.
வர்க்கம் கடந்து இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கான குரல்கள், வர்க்கம் கடந்ததா!? மக்கள் சார்பானதா!? (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 02)
ஆம் வர்க்கம் கடந்தது என்கின்றது வலதுசாரியம். இடதுசாரியமோ இதில் நீந்த முற்படுகின்றது. இது தான் இன்று தமிழ் தேசியம் தொடர்பான பொது அரசியல் உள்ளடக்கமாகும். தமிழ் இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க சக்திகள், இன்று சந்திக்கின்ற இடதுசாரிய அரசியல் திரிபுகள், அழுத்தங்கள் இது சார்ந்து தான் உருவாகின்றது. இன்று இலங்கையில் ஒரு வர்க்கக் கட்சி கிடையாது. கட்சி கருத்தைக் கூட பாதுகாக்கும் போராட்டம் என்பது, கடுமையான அரசியல் அழுத்தத்துக்கு உள்ளாகின்றது. இந்த நிலையில் மக்களின் வாழ்வு சார்ந்த எழுகின்ற அவலம் தொடர்ந்து முன்தள்ளும் கருத்துகள், அரசியலைக் கைவிடக் கோருகின்றது. குறுக்கு அரசியல் வழியை நடக் கோருகின்றது.
துருப்பிடித்த வாள்,கத்தி, கோடாலி மூலம், என்னைக் கடத்தியது புலிகளல்ல, என்.எல்.எவ்.ரி. என்று நிறுவிய புலிகள் (வதைமுகாமில் நான் : பாகம் - 36)
ஆயுதத்தை எடுக்க செல்ல முன், ஒரு சாரத்தை தந்தனர். சிறிது நேரத்தில் எனது கண் கட்டப்பட்டது. கை கட்டப்பட்ட நிலையில் வானில் ஏற்றினர். பின் காலைக் கட்டி, வாயைக் கட்டினர். என்னை வானின் பின்புறத் தரையில் படுக்கவிட்டனர். நான் படுத்த இடத்தில் பொலீத்தின் காணப்பட்டது. எனக்கு புதிய கேள்வியாக, ஏன் இந்த பொலீத்தின் என்ற சந்தேகம் எழுந்தது. நான் காட்டும் பொருளை எடுத்த பின்பு, என்னைச் சுட்டு உடலைக் கொண்டுவந்து புதைக்க இந்த பொலீத்தின் தேவைப்படுகின்றதோ என்று எண்ணினேன். எனது அசைவின் தொடு உணர்ச்சி மூலம், வானில் மண்வெட்டி மற்றும் பிக்கான் கூட இருப்பதை தெரிந்து கொண்டேன்.