பகிஸ்கரிப்பு இலங்கையில் மக்கள் வாழ்கின்றனர் என்பதை மறுதலிக்கின்றது. அரசுக்கு எதிரான போராட்டத்தையே மறுதலிக்கின்றது. இலங்கையில் சுயாதீனமான அரசியல் செயல் தளங்களை மறுதலிக்கின்றது. தாம் அல்லாத அனைத்தையும், அரசு சார்பானதாக முத்திரை குத்துகின்றது. இதைத்தான் புலம் மற்றும் தமிழ்நாட்;டு, புலித் தமிழ்தேசியம் முன்தள்ளுகின்றது. இதற்குள் இடதுசாரியம் நீந்துகின்றது.
இந்த மாநாட்டுக்கான எதிரான எதிர்ப்பு அரசியல், புலி பாசிசத்தினால் கட்டமைக்கப்பட்டது. அதன் சாதக பாதக அம்சங்கள் அனைத்தையும் மறுதலிக்கின்றது. இலங்கை பாசிசத்தை இலங்கை மக்கள் தான் முறியடிக்கவேண்டும். இந்த அரசியல் அடிப்படையைக் கூட, தொடர்ந்து இன்று புலி அரசியல் மறுதலிக்கின்றது. அங்கு வாழும் தமிழ்மக்கள் சுயாதீனமாக கூடுவதைக் கூட, இவர்கள் அனுமதிக்கத் தயாராகவில்லை. புலிகள் கடந்த காலத்தில் எதைச்செய்தனரோ, அதையே இன்று செய்கின்றனர். புலியைப் போல் தான் அரசும், தான் அல்லாத எதையும் சுயாதீனமாக செய்வதை விரும்பவில்லை. அதை தன் ஜனநாயக வே~ம் மூலம் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. இன்று புலம் மற்றும் தமிழ் நாட்டு புலித் தமிழ்தேசிய பினாமிகள், இந்த வகையில் அரசுக்கு தாராளமாகவே உதவுகின்றனர். அரசுக்கு பதில் புலியே அதைச்செய்து முடிக்கின்றது.