காலாகாலமாக கொலைகளை செய்தவர்கள், அதை மறுத்து வந்தவர்கள், அதற்கு இன்று ஆதாரம் கேட்கின்றனர். இதுவே கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை, இலங்கையின் பொது அரசியலாகிவிட்டது. இதுவே அவர்கள் தொழிலாகிவிட்ட பின், மறுப்பும் - மறுப்பறிக்கைகளும் அரசியலாகி விடுகின்றது.
தொடரும் இந்த இனப்படுகொலைக்கு பின்னால், இரண்டு பிரதான விடையங்கள் உள்ளடங்கியுள்ளது.
1. எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்களைக் கொல்லும் இனப்படுகொலை சார்ந்த முறைமை
2. எல்லை தாண்டி, இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளைக் கொண்டு மீன்பிடித்தல்