Language Selection

பி.இரயாகரன் - சமர்

தமிழக மீனவர் படுகொலை என்பது, எல்லை தாண்டுவதாலான ஒரு படுகொலையல்ல. இந்தியா கடல் எல்லைக்குள்ளும், படுகொலைகள் நடந்திருக்கின்றது. ஏன் இது இரு நாட்டு மீனவர் சார்ந்த முரண்பாட்டுக்குள்ளான ஒரு படுகொலையுமல்ல. இதனால் மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் இல்லை என்று அர்த்தமல்ல.

இது போல் இன்று பேசப்படுவது, வெறும் மீனவர் படுகொலை பற்றியதல்ல. எல்லை கடந்த மீன்பிடி பற்றியும், எப்படி மீன்பிடிப்பது என்பது பற்றியும், யார் மீன்பிடிப்பது என்பது பற்றியதுமான பல தொடர் விடையங்கள்.

இதில் ஈழ தமிழினவாதம் முன்னிறுத்துகின்ற குறுகிய இனவாத அரசியல் முதல் அதன் திரிப்பு உள்ளடங்கிய வழியில், மார்க்சிய லெனினிய இயக்கங்கள் பின்பற்றுகின்ற கொள்கைகளும் கூட இங்கு விவாதத்துக்கு உள்ளாகின்றது. இலங்கை - இந்திய மீனவர்கள் நலன்கள் மறுக்கப்பட்டு, குறுகிய ஈழ அரசியல் இங்கு இதற்குள் புகுத்தப்படுகின்றது.

படுகொலைக்கான நோக்கங்கள், புலி இருந்த காலத்தில் இருந்து இன்று மாறுபட்ட காரணங்களை உள்ளடக்கியது. இப்படியான நிலையில், இதற்கு எதிரான போராட்டங்களும், விளக்கங்களும் கூட குறுகிய அரசியல் சார்ந்தது. ஈழ தமிழினவாத விளக்கங்கள், மீனவர் நலன் சார்ந்ததல்ல. அது குறுகியது. அனைத்தையும் அதற்குள் குறுக்கிக் காட்டுகின்றது.

 

 

அரபுலகில் தொடரும் மக்கள் கிளர்ச்சிகள், மக்களின் சொந்த அதிகாரத்தை நிறுவவில்லை. மறுபடியும் மக்களுக்கு எதிரான, ஏகாதிபத்திய தலைமையிலான சர்வாதிகாரத்தையே உருவாக்குகின்றது. இது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் தலைமையையோ, இஸ்லாமிய அடிப்படைவாத தலைமையையோ உருவாக்கவில்லை. ஏன் முரணற்ற முதலாளித்துவ தலைமையையும் உருவாக்கவில்லை. மறுபடியும் மக்களை தொடர்ந்து ஒடுக்கும், புதிய ஏகாதிபத்திய தலைமையைத்தான் உருவாக்கியுள்ளது. மக்களே தங்களைத் தாங்கள் தலைமை தாங்கும் வண்ணம், தமக்கான ஒரு தலைமையை கொண்டிருக்கவில்லை. இந்த வெற்றிடத்தில் தான், மக்களின் கிளர்ச்சிகள் தொடர்ந்து மேலெழுந்து வருகின்றது. அடக்குமுறையும், வாழ்விழந்த மக்களின் எதிhப்புகளும் தான் ஆட்சியாளரை தூக்கியெறியும் கிளர்ச்சியாக மாறியது.

"முதலில் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மீனவர்களின் பிரச்சனை என்னவென்பதை நாம் பார்த்து விடுவது நல்லது. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்குக் கொடுத்த போது அந்த ஒப்பந்தத்தின் சரத்துக்களில் இந்திய மீனவர்களின் நலன்கள் எங்குமே பாதுகாக்கப்படவில்லை" இப்படி இனியொருவில் இனவாதிகள் வாதிடுகின்றனர். ஈழம் (புலியிசம்) சார்ந்த தமிழினவாதிகள், மீனவர் பிரச்சனையை கச்சத்தீவு தொடர்பான ஒரு பிரச்சனையாக சுருக்கிக் காட்டுகின்றனர். தமிழக மீனவர் படுகொலைகளை மட்டும் குறிப்பாக எதிர்த்தல் என்பதற்கு அப்பால், பல பரிணாமங்களில் தமிழினவாதிகள் தமது இனவாதத்துக்கு ஏற்ப குறுகிய அரசியல் தளத்தில் அனைத்தையும் திரிக்கின்றனர். இலங்கை கடலில் மீன்பிடித்தலை நீர் ஓட்டம், எல்லை தெரியாது செல்லுதல் என்று, எல்லை கடந்த மீன்பிடித்தலாக திரித்துக் காட்டியவர்கள் (வினவு உட்பட) தான், இதை கச்சத்தீவு பற்றியதாகவும் கூட திரிக்கின்றனர். கச்சத்தீவு இன்று இலங்கையின் பிரதேசம் என்பதை, இனவாதிகள் மறுப்பதன் மூலம் அத்துமீறி மீன்பிடிப்பதை இதனூடாக குறிப்பாக நியாயப்படுத்துகின்றனர்.

"சரி, தவறு என்பதற்கெல்லாம் அப்பால் முடிந்து போன வரலாற்றில் ஈழப் போராட்டத்தின் பாதுகாப்புப் பின் தளமாக வங்கக்கடல் ஆர்ப்பரித்திருக்கிறது. தென்னகத்தின் தென்கோடிக்கரைகளுக்கும் ஈழப் போராட்டத்திற்கும் பிரிக்க முடியாத உறவு நிலவிவந்திருக்கிறது."என்ற உண்மை, இனவாதத்தை பேசுவதற்கும், அதனை பாதுகாப்பதற்குமான அரசியல் அரணல்ல. மக்களைச் சார்ந்து இருக்காத எல்லா நிலையிலும், இந்திய மற்றும் இலங்கை மக்களுக்கு எதிராகவே அது இருந்துள்ளது. "பிரிக்க முடியாத உறவு" மக்களின் வாழ்வை மேம்படுத்தி, அதை வாழவைக்கவில்லை. போராட்டத்தை வளர்க்கவில்லை. மாறாக அதை அழித்தது. "பிரிக்க முடியாத உறவு" வர்க்கம் கடந்ததல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் போராட்டம் நடந்து இருந்தால், பின்தளத்தை பயன்படுத்தல் என்பது வர்க்கம் சார்ந்து கேள்விக்குள்ளாகியேயிருக்கும். தமிழன் என்ற வர்க்கமற்ற நிலையில்தான் "பிரிக்க முடியாத உறவு" அரசியல் இனவாதத்தில் முகிழ்கின்றது.

எந்த ஒரு விடையத்தையும் தங்கள் குறுகிய அரசியலுக்கு ஏற்ப குறுக்கிக் காட்டக் கூடாது. அப்படிக் காட்டினால், உண்மை விடையம் திரிபடைந்துவிடும். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். "கேட்பதற்கு நாதியற்ற நிலையில் மக்களும் நவீன அடிமைச் சின்னமாக மாற்றப்பட்டு விட்டார்கள். ஈழ நிலவரம் இவ்வாறு இருக்க எஞ்சியிருப்பது இராமேஸ்வரம் மீனவர்கள்தான். நீண்டகால அரசியல் நோக்கில் ஈழப் போராட்டத்தின் மிகப் பெரிய உந்து சக்தியாகவும் உதவும் சக்திகளாகவும் இருக்கும் இராமேஸ்வரம் மீனவர்களையும் ஈழத் தமிழ் மீனவர்களையும் பிளவுபடுத்தும் நீண்டகால அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு." என்கின்றார் இனியொரு கட்டுரையாளர் அகில். இனியொரு சபா நாவலன் என்ன கூறுகின்றார் "தமிழ் நாட்டு மீனவர் கொலைகளின் பின்னணியிலும் இவ்வாறான பல்தேசிய நிறுவனங்களின் அரசியல் பொதிந்திருக்கிறது என்பது வெளிப்படையான ஒன்று." என்கின்றார்.

இவர்கள் தொடர்ந்து சொல்ல வருவது எல்லை கடந்த இந்திய மீனவர்களினால், இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதாகும்.

1. இது ஈழப் போராட்டத்துக்கு உதவிகரமானது.

2. எல்லை கடந்த தமிழக மீனவர்கள் என்ற வர்க்கமற்ற தங்கள் இனம் சார்ந்த இனவாதக் கொள்கை, பன்நாட்டு மீன்பிடிக்கு எதிரானது.

3. சிங்கள மீனவர்கள் இலங்கை தமிழர்களின் கடல்களில் மீன்பிடித்தல் என்பது, இலங்கை தமிழருக்கு எதிரானது. தங்கள் மீன்பிடித்தல் என்பது அப்படியல்ல. அப்படி இனவாத அளவுகோல்களை முன்னிறுத்திய தர்க்கங்கள்.

 

தமிழக மீனவர்கள் பிரச்சனையின் தனித்துவத்தை மறுப்பதுதான், தமிழக தமிழினவாத புலியிச அரசியல் உள்ளடக்கமாகும். இலங்கை இனப்பிரச்சனையை மீனவர் பிரச்சனைக்குள் உள்ளடக்கி, இலங்கை இனப்பிரச்சனையை முதன்மைப்படுத்திய தமிழினவாதம் தான் தமிழகத்து தமிழினவாதமாகும். குறிப்பாக தமிழக மீனவர்களின் (வர்க்க) அரசியல் மற்றும் சமூக பொருளாதார நலன் சார்ந்த, எந்த உள்நாட்டு அரசியலையும் கொண்டவாகள் அல்ல இவர்கள். மீனவர் படுகொலை அரசியலை முன்னிறுத்திய இனவாதம்தான், இலங்கை சார்ந்து அவர்கள் மூடிமறைத்து முன்தள்ளும் மக்கள் விரோத அரசியல். இப்படி ஒரு குறுகிய அரசியலையே, தமிழக தமிழினவாதம் முன்தள்ளுகின்றது. இது குறிப்பாக தமிழக தேசிய இன முரண்பாட்டை பேசாத, புலித்தேசிய தமிழினவாத அரசியலாகும். இந்திய மீனவர்களின் வர்க்க வேறுபாட்டையும், அவர்களின் குறிப்பான கோரிக்கையையும் மறுத்து முன்வைக்கும், குறுகிய இனவாத அரசியலாகும்.

 

"தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?" என்று தலைப்பிட்ட வினவு கட்டுரை, உள்ளடக்கத்தை குறுக்கிக் காட்டுகின்றது. இதே உள்ளடக்கத்தில் தமிழ் சிங்கள மீனவர்களின் மோதலா எனில் இல்லை. இலங்கை இனப்பிரச்சனையில் தமிழ் - சிங்கள மக்கள் மோதலா எனின் இல்லை.

மோதல் மக்களின் வாழ்வுக்கு வெளியில் நடக்கின்றது. அவர்களின் கோரிக்கை அல்லாத தளத்தில் நடக்கின்றது. மக்களின் கோரிக்கையை தமது வர்க்க மற்றும் அரசியல் தேவைக்கு ஏற்ப குறுக்கியும் திரித்தும் முன்னிறுத்துகின்றனர்.

தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யும் இலங்கை அரசும் சரி, அதைக் கண்டிக்கும் தமிழக தமிழ் தேசியமும் (புலித் தேசியமும்) சரி, சாராம்சத்தில் ஒன்றைத்தான் செய்கின்றனர். மீனவர்களின் நலனில் இருந்து இதை அணுகுவது கிடையாது. தங்கள் குறுகிய அரசியல் நோக்கில் இருந்து இதைத் திணிக்கின்றனர்.

 

ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் இவை. இலங்கை அரசு ஒரு பாசிச அரசு. அதற்கு பேரினவாதம் என்ற ஒரேயொரு இனவாதம் என்ற முகமூடி கிடையாது. ஆனால் எதிர்ப்பரசியல் ஒரேயொரு இனவாத முகமூடியைப் போட்டுக்காட்ட விரும்புகின்றது. ஆனால் உண்மை அப்படியல்ல.

இலங்கை பாசிச அரசுக்கு ஒரேயொரு மொழி தான் உண்டு. அது தமிழ் மக்களைக் கொல்லும், சிங்கள மக்களை கொல்லும், தமிழக மீனவர்களையும் கொல்லும்.

கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை முன்னிறுத்தி அரசியல் பித்தலாட்டங்கள், இலங்கையில் வடக்கு தமிழ் மீனவர்களின் உரிமைப் பறிப்பாக மாறிச்செலுகின்றது. இந்திய மீன்வளம் அழிந்துபோன நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வுக்கு வழிகாட்ட வக்கற்ற இந்திய அரசு, மீன்வளத்தை அழிக்கும் பெருமூலதனத்தைக் கொண்ட மீன்பிடியை இலங்கையின் கடல் எல்லைக்குள் திணிக்கின்றது. தமிழினவாதிகள் இதையே மறைமுக அரசியலாகக் கொண்டு, இலங்கை மக்களுக்கு (வடக்கு தமிழ்மக்களுக்கு) எதிரான குறுகிய தங்கள் சுயநல அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்திய மார்க்சிய லெனினிய குழுக்கள் தமிழினவாதிகளை கடந்து, இதை வழிகாட்ட முடியாது திக்குத் தடுமாறி அங்குமிங்குமாக தடுமாறுகின்றனர்.

 

ஆம், மிகச் சரியான உண்மை. தமக்கு இடையிலான மோதலிலும், பழிவாங்கலிலும் கக்குகின்ற சரியான வார்த்தை. இதுபோல் யார் பாதுகாப்பு செயலாளராக இருந்து இருந்தாலும், யுத்தத்தை வென்று இருப்பார்கள். யுத்தத்தை வெல்லுதல் என்பது, யாருடன் யுத்தம் செய்தனரோ அவர்கள் தான் அதை தீர்மானிக்கின்றனர். யுத்தத்தை இதற்கு வெளியில் எவர் இருந்தாலும் வெல்ல முடியாது. தோற்றவர்கள் தான் தீர்மானிக்கின்றனர் வென்றவர்கள் யார் என்பதை.

 

தோற்றவர்கள் யாரிடம் தோற்றனர்? பேரினவாத படையிடமல்ல, தமிழ் மக்களிடம் தான் அவர்கள் முதலில் தோற்றனர். ஆனால் தமிழ்மக்களை வெல்ல அனுமதிக்கவில்லை. மாறாக பாசிசத்தையும் மாபியாத்தனத்தையும் அவர்கள் மேல் ஏவினர். இதைத்தான் பேரினவாதம் வென்றது.

 

புலிகள் பீரங்கிகள், விமானங்கள் மட்டுமல்ல பலநூறு கோடி பணத்தை குவித்து வைத்துக் கொண்டு, சில பத்தாயிரம் படையை குவித்து வைத்துக்கொண்டு தோற்றுப்போனார்கள். யார் தளபதியாக இருந்தாலும் வெல்லுமளவுக்கு, யார் புலிகளின் தலைவராக இருந்தாலும் கூட தோற்றுப் போகுமளவுக்கு புலிகள் தமிழ்மக்களிடம் தோற்றுப் போய் இருந்தனர்.

 

தமிழ் - சிங்கள் கைதிகளின் ஒன்றுபட்ட போராட்டம், தமிழ் - சிங்கள இனவாதிகளுக்கு சவால் விடுகின்றது. எதிர்காலத்தில் தமிழ் - சிங்கள மக்கள் இணைந்த போராட்டம் தான், அரசை எதிர்கொண்டு போராடுவதற்கு இப்போராட்டம் அறைகூவுகின்றது.

சிலர் கொல்லப்படவும், பலர் காயமடையவும் காரணமாக இருந்த சிறைக்கைதிகளின் போராட்டம், அடிப்படை வசதிகளைக் கோரியது. உணவு, நீர் மற்றும் இருப்பிட வசதியை கோரிய போராட்டம், உண்ணாவிரதம் மற்றும் ஒத்துழையாமை போராட்டமாகவே நடந்தது. 500 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள் முன்னின்று போராட, தமிழ் கைதிகளும் அவர்களுடன் இணைந்து நடத்திய போராட்டம் இது. இனம் கடந்து, இனவாதம் கடந்து நடத்திய போராட்டம். தமிழ் இனவாதமோ கூனிக்குறுகி, இதை இனவாதமாக காட்ட முனைந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE