Language Selection

பி.இரயாகரன் - சமர்

இலவசமாக கோமணத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்குவதுதான் இலவசத்தின் மகிமை. ஈழத் தமிழனுக்கு இதைத் தருவோம், அதைப் பெற்று தருவோம் என்பது, ஈழத்தமிழனாக அவர்கள் தொடர்ந்து வாழும் உரிமையை இல்லாமலாக்குவது தான்.

1983 முதல் இவர்கள் செய்தது இதையே தான். இவர்கள் முதலில் செய்தது, ஈழ மக்களின் விடிவை குழிதோண்டிப் புதைத்ததுதான். எம்.ஜிஆர் கொடுத்த கோடிக்கணக்கான பணம் முதல் சீமானின் இன்றைய சினிமா வேசம் வரை, தமிழ்மக்களின் குரல்வளையைதான் அறுத்தது. அந்த மக்களின் சொந்த விடுதலை குழிதோண்டிப் புதைத்த அரசியல்தான், அன்று முதல் இன்று வரை இவர்கள் இட்ட நஞ்சு வித்தாகும்.

புலியிடம் இருந்து ஜனநாயகம் கேட்ட புலியெதிர்ப்பு மாமாக்கள் பேரினவாதத்தின் பின் வழிகாட்டினர். ஆயுதத்தை வழிபட்ட புலி மாமாக்கள் ஜனநாயகத்துக்கு திரும்பியதாக கூறிக்கொண்டு, தங்கள் சொத்தைப் பாதுகாக்க வழிகாட்டினர்.

ஆயுதம் ஏந்தாவிட்டால் அது ஜனநாயகம் என்று பொழிப்புரை எழுதிவைத்துக் கொண்டு, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் தான் புலத்துப் புலிகள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தியும், நாடு கடந்த தமிழீழத்தை முன்னிறுத்தியும், புலத்து மக்களை கொண்டு தமக்கு தாமே வாக்கு போட வைத்ததை ஜனநாயகம் என்று கூறி தேர்தல் நாடகத்தை நடத்தினர். இப்படி புலத்து புலிகளின் இரு கோஸ்டியும், அடுத்தடுத்து ஜனநாயகத்தின் பெயரில் ஆளுக்கொரு போலித் தேர்தலை நடத்தி முடித்தனர்.

அணுவுலகம் என்பது ஏகாதிபத்தியதனமாகும். அணுக்குண்டு மட்டும் உலகை ஆளவில்லை, அணு கூட ஏகாதிபத்திய மூலதனத்தை உற்பத்தி செய்யும் ஏகாதிபத்திய தொழில் நுட்பமாகிவிட்டது. இதனால் உலகம் கதிர்வீச்சின் எல்லைக்குள் மிக வேகமான சுருங்கி வருகின்றது. மனிதனை வெடிகுண்டு மேல் மட்டும் ஏகாதிபத்தியம் நிறுத்திவிடவில்லை, இலாப வெறிக்காக அணுவுலைக்கு முன்னால் மக்களைக் கைகட்டி நிற்கவும் கோருகின்றான்.

உலகை ஆள அணுக் குண்டை செய்தாலும், இலாபத்திற்காக ஆக்கத்தின் பெயரில் அணு மின்சாரத்தை தயாரித்தாலும், இவை அனைத்தும் உலகை அடிமை கொள்ளும் ஏகாதிபத்தியத்தனமாகும். அணு வெளியிடும் கதிரியியக்கம், உடைப்பெடுக்கும் போது அதை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஏகாதிபத்தியத்துக்கு கிடையாது. கதிரியக்கத்தின் அளவைப் பொறுத்து, அது சில கணங்களில் மரணத்தையும் சில தலைமுறைக்கு பக்கவிளைவையும் தரக் கூடியது.

மக்கள் தமக்காக தாம் போராடாத வரை, மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் மறுபடியும் புதிய அடக்குமுறையாளர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை வழங்குகின்றது. எகிப்திலும் துனிசியாவிலும் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் எழுச்சியும் கிளர்ச்சியும், ஆட்சி மாற்றத்தை உருவாக்கியதே ஒழிய அந்த மக்களை விடுவிக்கவில்லை. மீண்டும் அதே அரசு இயந்திரம் தான், அதற்கு தலைமைதாங்கிய சில பொம்மைகள் தான் மாறியது.

இதுபோல் லிபியாவில் அமையவில்லை. மாறாக வன்முறை, சிவில் யுத்தம், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஊடாக, ஒரு இரத்தக் களரியை அது எதிர்கொண்டுள்ளது. பல ஆயிரம் லிபியா மக்களின் உயிரை பலிகொள்ளும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாக மாறியுள்ளது.

லிபியாவில் கடாபி குடும்பம் நடத்தும் சர்வாதிகாரம், நாட்டை கொள்ளையிட்டும், மக்களை ஒடுக்கியும் தான் ஆண்டது. கொள்ளையிட்ட பணத்தை மேற்கத்தைய நாடுகளில் முதலிட்டும், லிபியா எண்ணை வயல்களை மேற்கத்தைய பன்னாட்டு எண்ணைக் கம்பனிகளிடம் தாரை வார்த்தபடி தான், தொடர்ந்து தானும் லிபியா கொள்ளையிட்டது. மக்களைச் சுரண்டியும், ஓடுக்கியும் மேற்கு சேவை செய்த அதேநேரம், தன்னை தக்கவைக்க அரபுலக மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பாதுகாவலனாக தன்னை கட்டிக் கொள்ள முனைந்தது.

அரசும், கட்சிகளும் இனரீதியாக மக்களை பிரித்துவைத்துக் கொண்டு, நடத்தும் இனரீதியான அரசியல்தான் இலங்கையில் ஜனநாயகமாகின்றது. இனரீதியாக மக்களின் வாக்களிப்பு, இதை எதிர்மறையில் தீர்க்கக் கோருகின்றது. இலங்கையில் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் கூறும் செய்திகள் என்ன?

1. இலங்கையில் இனரீதியான பிளவுகளும், முரண்பாடுகளும் நான்கு முனையில் காணப்படுகின்றது.

2. அனைத்து மக்களையும் பிரநிதித்துவப்படுத்தும் எந்தக் கட்சியும் இலங்கையில் கிடையாது. அதாவது இனவாதம் கடந்த எந்தக் கட்சியும், இலங்கையில் கிடையாது. மக்கள் சமூக பொருளாதார நலனை முன்னிறுத்திய எந்த கட்சிகளும் இலங்கையில் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

யப்பான் நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து வந்த சுனாமியும், இறுதியில் அணுவுலையில் வெடிப்புகளும் ஏற்படுத்தியுள்ள விளைவுகளுக்கும் மொத்தமாக இயற்கை மீது யாரும் குற்றஞ்சாட்டி விட முடியாது. அந்த உரிமை உனக்குக் கிடையாது. ஏனென்றால் நீ இயற்கையுடன் இ;ணங்கி, அதன் போக்கில் வாழ மறுப்பவன். செயற்கை அழிவுகள், இயற்கை அழிவை மீஞ்சியது. இயற்கை இயற்கையாகத்தான் இயங்குகின்றது. இதற்கு இணங்கி அதன் போக்கில்தான் மனிதன் வாழ முடியும். இதை மறுத்துத்தான், உன் உணர்வை ஆட்டிப்படைக்கும் மூலதனம் இயங்குகின்றது. இதற்கு ஏற்பவே மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். இயற்கையின் போக்கை மீறிய இயற்கை அழிப்பை, மனிதன் இயற்கை மேல் செய்கின்றான். ஒவ்வொரு இயற்கை அழிவிலும், மனிதன் ஒரு சமூக உயிரி என்ற அடிப்படையை, மூலதனம் மறுத்துத்தான் மனிதர்களின் வாழ்வை நரகமாக்குகின்றனர்.

உட்படுகொலை முதல் பலவிதமான மனிதவிரோத அராஜகத்தை செய்த குற்றவாளிகள் முதல், இதை எதிர்த்துப் போராடியவர்களை குற்றவாளியாக்குகின்ற இன்றைய வலதுசாரிய குப்பைகள் வரை, ஓரே அடிப்படையைக் கொண்டு அவர்கள் தம்மைத்தாம் நியாயப்படுத்துகின்றனர். இப்படி அவர்கள் தம்மை நியாயப்படுத்த, இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள் தாம் அல்லாத எஞ்சிய உறுப்பினர்கள் பற்றி அக்கறைப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் அதைச் சார்ந்து நின்றதாகவும், சார்ந்து நிற்பதாகவும் கூறிக்கொண்டு தான், தங்கள் அரசியல் வண்டவாளங்களை இன்றும் அரங்கேற்றுகின்றனர்.

ஏன் தாங்கள் கூட இயக்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுகொண்டது கிடையாது என்றும், எஞ்சிய உறுப்;பினர்களின் பாதுகாப்புக்காகத்தான் அங்கு தாம் தொடர்ந்து நீடித்ததாக கூறுகின்ற புரட்டுகளையும் கூட முன்வைக்கின்றனர். இப்படி இடதுசாரியத்தை எதிர்க்கின்ற வலதுசாரியக் கும்பல், எஞ்சிய உறுப்பினரைப் பற்றிய கவலையின்றி சென்றதாக இன்று குற்றஞ்சாட்டுகின்ற புரட்டுகளோடு, இங்கு ஒன்றாகக் கூடிக் கும்மியடிக்கின்றனர்.

விடுதலைப் போராட்டம் இதுவென நம்பிச்சென்ற ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், தங்கள் சொந்த அறியாமையில் இருந்து விடுபட்ட போது, அவர்கள் கண்டது தம்மீதான கோரமான கொடூரமான ஒடுக்குமுறையைத்தான். சிலர் இந்த ஒடுக்குமுறையைக் கண்ட போதுதான், தாம் போராடுவது விடுதலைப் போராட்டமல்ல என்பதைக் கண்டனர். இதனால் இதற்கு எதிராக போராட முற்பட்டபோது, சிலர் தம்மை பலிகொடுத்தனர். சிலர் தப்பியோடினர். சிலர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து ஒதுங்கினர். சிலர் மௌனமாக விலகினர். இதைத்தான் குற்றம் என்கின்றனர் ஜென்னி முதல் பல்லி வரை.

அன்று இதை எதிர்த்துத்தான் அமைப்புக்குள்ளான எதிர்ப்புப் போராட்டங்கள் உருவாகின. அவர்கள் கொடுமைகளையும், கொடூரங்களையும் எதிர்கொண்டு, தாங்களும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பில் இருந்து விலகினர், ஒதுங்கினர், எதிர்த்துப் போராடினர்.

 

தாங்கள் யார் என்பதை மூடிமறைக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் அரசியலை மூடிமறைக்க முடியாது. தாங்கள் யார் என்று தெரிந்தால், அவர்கள் நிஜவாழ்வு சார்ந்த அரசியல் முகம் அம்பலமாகிவிடும் என்று கருதுகின்றவர்கள் கூட, புனைபெயரில் தான் ஒளித்துக் கொள்கின்றனர். எதிர்ப்புரட்சி அரசியலின் ஒருபக்கம், இப்படி தன்னை ஓளித்து வைத்துக்கொண்டுதான், மக்களை மற்றொரு வடிவில் ஏய்க்க முடிகின்றது.

ஒரு கருத்தை முன்வைக்கும் நோக்கம் மக்கள் நலன் சாராத வரை, அதைச் சார்ந்து வெளிப்படையாக கருத்தை முன்வைக்;காத வரை, அவை அனைத்தும் மக்களைத் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழவைக்கின்ற அரசியல் பித்தலாட்டமாகும்.

இந்தவகையில் உலகம் தளுவிய அளவில், மக்கள் விரோதிகள் தங்களைப் பற்றி பிரச்சாரம் செய்ய கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ளவிடாது தடுக்க, அங்குமிங்குமாக அலையவைக்கும் வண்ணம் கருத்துக்களை உற்பத்திசெய்ய கூலிக்கு ஆட்களை அமர்த்துகின்றனர். இந்த வகையில் அரபுலக சர்வாதிகாரிகள், இலங்கை அரசு எல்லாம் வெளிப்படையாகவே கூலிக்கு பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களை கூலிக்கு அமர்த்தியிருக்கின்றனர். இந்த வகையில் கூலிக்கு பிரச்சாரம் செய்யும் நிறுவனங்கள் இன்றைய உலகில் உள்ளது. கட்டுரைகள், ஆய்வுகள், அவதூறுகள் முதல் மக்கள் விரோதிகளின் நல்ல பக்கங்கள் என்று எடுத்துக்காட்ட முனையும் பிரச்சாரங்களைக் கூட, கூலிக்கு மாரடிக்கும் ஒரு உலகத்தில் நாங்கள் வாழ்கின்றோம். இப்படி தொழில் ரீதியான பிரச்சாரங்கள் கூட, இன்று நல்ல வியாபாரமாகிவிட்டது. இங்கு பிரச்சாரம் தான் விளம்பரமாகின்றது. மக்கள் இதன்பால் மந்தையாக்கப்பட்டு தொடர்ந்து அடிமையாக வாழவைக்கப்படுகின்றனர்.

 

அன்று எந்த அரசியல் நோக்கில் சதிகார புளட் ஒரு பெண்ணை பாலியல் ரீதியான வக்கிரத்துடன், தனது சொந்த அசிங்கங்களுடன் அரங்கேற்றி நடத்திய கூத்தைத்தான், இன்று மீளவும் ஜென்னி அரங்கேற்றுகின்றார். சில பாத்திரங்களை மாற்றி, பல்லியின் பல்லவியுடன் அது அரங்கேறுகின்றது. இவர்கள் அரங்கேற்றும் கூத்தில் பாதிக்கப்பட்டது ஒரு பெண். அந்தப் பெண் இன்று ஒரு சாதாரண வாழ்வு வாழ்கின்ற ஒரு அப்பாவி அபலை. சமூகத்தின் பொது உளவியல் அரக்கத்தனத்துக்குள் வாழ்கின்ற ஒரு பெண்ணை, மறுபடியும் ஜென்னி தன் குறுகிய சுயநலனுக்கு ஏற்ப வன்முறைக்குள்ளாக்கியுள்ளார். இதற்கு ஏற்ப தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறும் தேசம்நெற் பல்லி, அதை நான் இப்ப சொல்லமாட்டேன் என்கின்றார். இப்படி பல்லியோ பொய் புரட்டுகள் மூலம் பல்லவி பாடி, ஒளித்திருந்து அரங்கேற்ற முனைவது வலதுசாரிய சதிதான். இதற்கு பலியாவது, மறுபடியும் அதே பெண்தான். வரலாற்றில் இரண்டாம் முறை, இவர்களால் அப்பெண் குதறப்படுகின்றாள்.

 

புலியைப் போல் தான் புளட்டும். புளட் உள்ளியக்கப் படுகொலையில் புகழ்பெற்றது. அதை அன்று முன்னின்று செய்த கூட்டம், இன்றும் அதை நியாயப்படுத்த களமிறங்குகின்றனர். 25 வருடங்களுக்கு முன் இதை எதிர்த்துப் போராடி வெளியேறியவர்களை மீண்டும் குற்றவாளியாக்கியபடி, 25 வருடங்களின் பின் அதே வக்கிரத்துடன் தம்மை மூடிமறைத்தும் நியாயப்படுத்தியும் வக்கிரமாகவே வாந்தியெடுக்கின்றனர்.

அன்றைய சதிகாரர்கள், கொலைகாரர்கள் பிரதிநிதியான ஜென்னி தேசம்நெற்றில், தாளம் போடுகின்றார். அன்றைய தங்கள் சதிகள் தான் உண்மையானவை நியாயமானவை என்று, மீளவும் கூறுகின்ற வரலாற்றுப் புரட்டை மூடிமறைத்தபடி முன்வைக்கின்றனர்.

தனிநபர்கள் தங்களை நியாயப்படுத்தியும், சிலரைப் பாதுகாத்தும் சொல்லுகின்ற கதைகளுக்கு அப்பால், புளட் என்னவாக இருந்தது? இது ஒரு மக்கள் இயக்கமா? இடதுசாரிய இயக்கமா? இல்லை. வலதுசாரிய பாசிச இயக்கம்;. புலிக்கு நிகரானது.  இதைத்தான் தனிநபர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இங்குதான் எதிரும் புதிருமான போராட்டங்கள் நடந்தன. இது தான் வரலாறு.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE