உலகத்தை ஏமாற்றிய நவீன மோசடிக்காரர்களின், பணக்காரக் "கடவுள்" தான் சத்யசாய்பாபா. படித்த முட்டாள்களின், மனித உழைப்பிலான செல்வத்தை இந்த உலகில் திருடிய புத்திசாலிகளின் "கடவுள்" தான், இந்த சத்யசாய்பாபா. இதனால் இந்தக் "கடவுளும்", பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரனான்.
இப்படி இன்றைய பொருள் உலகின் புத்திசாலிகளாக கருதும் முட்டாள்களின் ஒழுக்க கேடான வாழ்வுக்கு ஏற்ற ஆன்மீகம் மூலம், சத்யசாய்பாபா நவீன பொருள் நுகர்வு உலகுக்கு ஏற்ப "கடவுள்" அவதாரமானான். இந்தக் கடவுள் ஒரு குற்றவாளி. ஏய்க்கும் மோசடிகள், பாலியல் வன்முறைகள், கொலைகள் ஈறாக, இந்த நவீன உலகில் முறைகேடாக பணம் சம்பாதிக்கும் பொறுக்கிகள் போல் அனைத்தையும் செய்துதான், தன்னைத்தான் கடவுளின் அவதாரமாக்கினான். இந்தக் குற்றங்களில் இருந்தும் தன்னை பாதுகாக்கும் வண்ணம் கோடி கோடியாக செல்வத்தை தனதாக்கி வைத்திருந்தான். சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனியம் உருவாக்கிய இந்து மதத்தைக் கொண்டு, தன்னை தற்காத்துக் கொண்டான்.