Language Selection

பி.இரயாகரன் - சமர்

உலகத்தை ஏமாற்றிய நவீன மோசடிக்காரர்களின், பணக்காரக் "கடவுள்" தான் சத்யசாய்பாபா. படித்த முட்டாள்களின், மனித உழைப்பிலான செல்வத்தை இந்த உலகில் திருடிய புத்திசாலிகளின் "கடவுள்" தான், இந்த சத்யசாய்பாபா. இதனால் இந்தக் "கடவுளும்", பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரனான்.

இப்படி இன்றைய பொருள் உலகின் புத்திசாலிகளாக கருதும் முட்டாள்களின் ஒழுக்க கேடான வாழ்வுக்கு ஏற்ற ஆன்மீகம் மூலம், சத்யசாய்பாபா நவீன பொருள் நுகர்வு உலகுக்கு ஏற்ப "கடவுள்" அவதாரமானான். இந்தக் கடவுள் ஒரு குற்றவாளி. ஏய்க்கும் மோசடிகள், பாலியல் வன்முறைகள், கொலைகள் ஈறாக, இந்த நவீன உலகில் முறைகேடாக பணம் சம்பாதிக்கும் பொறுக்கிகள் போல் அனைத்தையும் செய்துதான், தன்னைத்தான் கடவுளின் அவதாரமாக்கினான். இந்தக் குற்றங்களில் இருந்தும் தன்னை பாதுகாக்கும் வண்ணம் கோடி கோடியாக செல்வத்தை தனதாக்கி வைத்திருந்தான். சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனியம் உருவாக்கிய இந்து மதத்தைக் கொண்டு, தன்னை தற்காத்துக் கொண்டான்.

 

தன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கியால், தன் அற்புதங்கள் மூலம் தன்னையே பாதுகாக்க முடியவில்லை. நவீன மருத்துவத்தை நாடி நிற்கின்றது. பணக்காரனுக்கே சேவை செய்யும் நவீன மருத்துவம், கடவுளின் அவதாரத்தை இந்த உலகில் மீளவும் படைக்க முனைகின்றது. என்ன அற்புதங்கள்? ஏழை மக்களுக்கு உதவாத நவீன மருத்துவம் முதல், உழைத்து உருவாக்கும் எந்தப் பொருளையும் உருவாக்கும் மனிதத்தகுதி கூட இல்லாத (படைப்பாற்றலற்ற) ஆன்மீகம் பேசும் பொறுக்கி லும்பன்கள் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றனர்.

கடவுளின் அவதாரம் என்று கூறிய மோசடி தான் மூலதனம்;. இது 40000 கோடியாகியுள்ளது. இந்த மோசடி அற்புதங்களானது. இப்படி அற்புதங்கள் பெயரால் ஏமாற்றி வழங்கிய எவையும், இன்றைய மனித உழைப்பு சார்ந்த உற்பத்திக்கு வெளியில் எதையும் கொடுக்கவும், புதிதாக எதையும் படைக்கவும் முடியவில்லை. ஏழைக்கு என்று கூறி வழங்கும் எந்தச் சேவையையும், ஏய்த்துப் பிழைத்த மோசடிப் பணத்தில் இருந்து தான் உருவாகின்றது. கடவுளின் அற்புதங்களில் இருந்தல்ல. கடவுளின் படைப்பாற்றலில் இருந்ததல்ல. எதையும் கடவுளின் அவதாரமான சாயிபாபாவால் உருவாக்க முடியவில்லை. மனித உழைப்பு உருவாக்கிய பணமும், மீளவும் மனித உழைப்பும் தான் அனைத்தையும் படைக்கின்றது. இதுவல்லாதவை எதையும் படைக்க முடிவதில்லை.

 

பாலியல் உணர்வை நலமடிக்க மறுத்தால், அவர்களை கொல் என்கின்றது. இதைத்தான் யுத்தத்திற்கு பிந்தைய இன்றைய தமிழ் சமூகத்தின் பொதுக் கண்ணோட்டமாகும். கடந்தகாலத்தில் இந்த மலட்டுச் சிந்தனை முறைதான் எம்மை அழித்தது என்றால், யுத்தத்தின் பின் மனித உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத வன்முறையாக மாறுகின்றது.

"தாயின் ஈனச் செயலால் கொலையாளியான தனயன்" என்று, வன்னியில் நடந்த ஒரு கொலை பற்றிய செய்தியை பல ஊடகங்கள் 22.04.2011 வெளியிட்டு இருந்தது. குறைந்தபட்சம் கொலையாக கூட இதை பார்த்து அணுகவில்லை. தாயின் குற்றமாக, மகனின் தியாகமாக காட்டுகின்றது. குறுந் தமிழ் தேசிய பாரம்பரியம் இப்படித்தான் சமூகத்தை அணுகி, வழிகாட்டுகின்றது. சமூகப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முனைந்த மகனும், அதை சீரழித்த தாயுமாக காட்சிகளை அரங்கேற்றினர்.

 

இலங்கை அரசு இனவழிப்பு யுத்தத்தை நடத்தியது மட்டுமின்றி, பல முனையில் பாரிய பல்வேறு போர்க்குற்றங்களை செய்ததும் உலகறிந்தது. புலிகளால் நலமடிக்கப்பட்ட தமிழ் மக்கள், தங்கள் சொந்த வாழ்வியல் அனுபவம் மூலம் இதை நன்கு அறிவார்கள். ஐ.நா மற்றும் மேற்கு அறிக்கைகள் தான், இதற்கு சான்று தர வேண்டும் என்று கனவு காண்பவர்கள் யார் என்றால், புலிதனத்தை அரசியலாகக் கொண்ட வலதுசாரிகள் தான். அரசு செய்தது போன்று பல போர்க்குற்றங்கள் செய்த கும்பல்தான், அதை ஆதரித்து நின்ற புலத்து புலிக் கும்பல் தான், தங்களை மூடிமறைத்து ஐ.நா அறிக்கை ஊடாக அரசியல் நடத்துகின்றனர்.

இறுதி யுத்தத்தில் மக்களை யுத்தப் பிரதேசத்தில் பணயம் வைத்தவர்கள் புலிகள். மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்காது மட்டுமின்றி, இதைக் காட்டி தம்மை பாதுகாக்க முனைந்தனர். உண்மையில் மக்களை கொல்வதை ஊக்குவித்ததன் மூலம், தாங்கள் தப்பிப் பிழைக்க முனைந்தனர். தம்மைத் தற்காத்துக்கொள்ள பிணத்தைக் காட்டி, புலிகள் அழுது புலம்பினர்.

 

இதைக் கோராத வரை, அதற்காக போராடாத வரை, ஜே.வி.பி.யும் மீண்டும் அது ஒரு இனவாதக் கட்சிதான் என்பதை நிரூபிக்கின்றது. தமிழ் மக்கள் இலங்கையில் இனப்படுகொலை செய்யபட்ட நிலையில், அதை எதிர்த்துப் போராடாத எவரும் இனவாதம் கடந்து சிந்திக்கவில்லை என்பது தான் அதன் அரசியல் அர்த்தம். நாங்கள் தமிழருக்கு எதிரான இனகலவரத்தில் பங்கு கொள்ளவில்லை என்று கூறுவதால் மட்டும், ஜே.வி.பி. இனவாதமற்ற கட்சியாகிவிடுவதில்லை. மாறாக இனவாதத்தை எதிர்த்து போராடுவதன் மூலம்தான், இனவாதமற்ற கட்சியாக அது இருக்க முடியும். அதை என்றும், அதன் வரலாற்றில் ஜே.வி.பி. செய்தது கிடையாது.

அரசு-புலி யுத்தத்தின் பின்னணியில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதும், போர்க்குற்றம் இழைக்கப்பட்டதும் உலகமறிந்தது. இதைக் குறுகிய இனவாதம் மூலம் பாதுகாக்கமுடியாது. ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து அரசுடன் சென்ற வீரவன்சா மாதிரித்தான், தொடர்ந்து ஜே.வி.பி. இனவாத அரசியல் செய்கின்றது. போர்க்குற்ற அடிப்படையில் உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தாத அரசியல் நிலை இனவாதம் சார்ந்தது. மறுதளத்தில் இந்தப் போக்குதான் சர்வதேச தலையீடுகளுக்கு வழி சமைக்கின்றது. இதைத்தான் தொடர்ந்து ஜே.வி.பி. இனவாத அரசியலும் வழிகாட்டுகின்றது.

 

சொந்த மக்களைக் கொன்றதை சரி என்று கூறி, மக்களை அதற்காக போராடக் கோருகின்றது இலங்கை அரசு. நாங்கள் கொன்றது தமிழ் மக்களைத்தான், ஆகவே சிங்கள மக்கள் இனரீதியாக எமக்கு ஆதரவு தர வேண்டும் என்கின்றது இந்த பேரினவாத அரசு. மேற்கு மற்றும் ஐ.நா முதலானவை, தங்கள் உலக ஒழுங்கிற்கு ஏற்ப தலையிட்டு ஆதிக்கம் செய்யும் பொதுப் போக்கை, அரசு எதிர்நிலையில் முன்னிறுத்தி தன்னை தற்காக்க முனைகின்றது.

இங்கு இலங்கை அரசின் போர்க்குற்றத்தை முன்வைத்து அதற்கான சுதந்திரமான விசாரணையை கோரியபடி மேற்கு தலையீட்டை எதிர்த்தும் எந்த (சிங்கள) எதிர்க்கட்சியும் போராடவில்லை. அதே போல் மேற்கு தலையீட்டை எதிர்த்தபடி சுதந்திரமான விசாரணையைக் கோரி எந்த தமிழ் தேசியமும் போராடவில்லை.

 

மகிந்தவின் குடும்ப சர்வாதிகாரம் மூலம் தன் குழந்தைகள், தன் சகோதரர்கள், தன் உற்றார் உறவினர்களை நாட்டின் முன் அடையாளப்படுத்தி, அவர்களை ஆட்சியாளராக்கியுள்ளார். மறுபக்கம் இவர்களால் அடையாளம் இழந்து காணாமல் போனவர்களைத் தேடி அலைகின்றது மக்கள் கூட்டம்.

மகிந்த குடும்ப சர்வாதிகாரத்தின் விளைவு இப்படித் தான் பிரதிபலிக்கின்றது. ஒருபுறம் தம்மை முன்னிலைப்படுத்திய குடும்பப் பின்னணி, மறுபக்கம் குடும்ப உறவுகளைத் தேடியலையும் பின்னணி. இப்படித்தான் இலங்கையின் எதார்த்தம் இருக்கின்றது. நேரெதிரான காட்சிகள். நாட்டை ஆள்பவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு துல்லியமானது, இணக்கம் காண முடியாதவை.

 

எமக்கு தெரியாது என்று கூறி, இலங்கை அரசு தப்பித்துக் கொள்ளமுடியாது. மன்னிக்க முடியாத குற்றங்களின் பின்னனியில் இது தொடருகின்றது. கொடூரங்களிலும் கொடூரம். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் உயிருடன் மீள வருவோமா என்ற கேள்வியுடன் தான், மீன்பிடிக்க செல்லுகின்றனர். அவர்களின் குடும்பங்கள் கடலை வெறித்து பார்த்து காத்து நிற்கின்றனர். இதுவே கடலில் உழைத்து வாழும் மீனவர்களின் அன்றாட வாழ்வாகிவிட்டது.

உழைத்து வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், எப்படியாவது கடலில் மீன்பிடிக்க வேண்டிய மனித அவலம்;. மக்களின் வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய அரசு, இயற்கை வளத்தை மேலும் அழித்து வாழ்வை நாசமாக்க வழிகாட்டுகின்றது. சுரண்டல், சூறையாடல் மட்டும் தான் அரசின் பொதுக் கொள்கை. இதற்குள்தான் மீனவர்கள் தொடர்ந்தும் பலிகொடுக்கப்படுகின்றனர்.

 

திடீர் இடதுசாரிகள் இப்படித்தான் திடீர் திடீரென புரட்சி செய்கின்றனர். அமெரிக்காவுடன் இந்தியாவுடன் நின்று அரசியல் செய்வதென்பதை நூறு கருத்துக்களாக காட்டி, இதன் மூலம் நூறு பூக்கள் மலர முடியும் என்கின்றனர். இப்படி 1983 களில் தொடங்கி 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிந்து போன தமிழ் தேசியத்தின் பின், இந்தியா முதல் அமெரிக்கா வரை வழிகாட்டி அழித்ததை நாம் மறக்கத்தான் முடியுமா? மீண்டும் அதையே இனியொருவும், புதியதிசையும் இடதுசாரியத்தின் பெயரில் புரட்டுத்தமாக முன்தள்ளுகின்றனர்.

தொடரும் புலத்து புலித் தேசியம், தமிழ் தேசியமாக புலத்தில் இவ்வாறு தொடர்ந்து முன்னேறுகின்றது. அன்று புலிகள் தாமல்லாத மாற்று இயக்கங்களை கொன்று குவித்து அதை தமிழ் மக்களின் தேசியமாக்கியது போல், புலத்துப் புலிக் கோஸ்டிகள் தமக்குள் மோதுகின்றன. ஆக மோதலை நியாயப்படுத்தி இதை சுற்றிக் கட்டமைக்கின்ற சுத்துமாத்து அரசியல் புலத்து தமிழ்தேசியமாக மாறுகின்றது.

இப்படி புலித்து புலிக் கோஸ்டிகள் வெளிப்படையான வன்முறையில் இறங்கியுள்ளது. இதன் மூலம் புலத்து தமிழ் மக்களை ஒடுக்கும் அதிகாரத்தையும், புலிச் சொத்தை தனதாக்கி அதன் மேல் தமது நாட்டாமையையும் கோருகின்றனர். வன்னியில் புலிகள் ஆயுதத்தை கீழே போட்டு சரணடைந்த போது, அதைத்தான் ஜனநாயக வழிக்கு வருதல் என்றனர். இப்படி தம்மை மட்டும் காப்பற்றிக்கொள்ள மே 15 2009 இரவு போட்ட ஜனநாயக வேசம் தான், ஆயுதத்தை கீழே வைத்தலாகும். இப்படி ஆயுதத்தை சார்ந்து கட்டமைத்து அதிகாரத்தை இழந்து வக்கற்றுப் போன புலத்துப் புலிகள், புலிச் சொத்தைக் கைப்பற்றும் முரண்பாடுதான் இரு பெரும் கோஸ்டியாக மாறியது.

 

இப்படியும் அப்படியும் கூறுகின்ற புரட்டுகள், நடந்த உண்மைகளைப் புதைப்பதில்லை. ரமேஸ் உள்ளிட்ட புலித்தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த உண்மையையும், இலங்கை அரசு அவர்களைக் கொன்றதையும் இந்த வீடியோ அம்பலம் செய்கின்றது.

பேரினவாத அரசு மீண்டும் மீண்டும் பொய்யை உரைக்கின்றது. விடுதலை புலிகளின் தலைவர்கள் எம்மிடம் சரணடையவில்லை. நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை. நாங்கள் யாரையும் கொல்லவில்லை. இதையே தான் இந்தக் கொலைகார அரசு தொடர்ந்தும் சொல்லுகின்றது. காட்சிகள், படங்கள், ஆதாரங்கள் அனைத்தும் பொய்யானது, அவை அனைத்தும் திட்டமிட்ட புனைவுகள் என்கின்றது அரசு

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE