புலிகள் இருந்த காலத்தில் கொழும்பை மையமாக கொண்டு இயங்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் பலர், புலிகளுக்கு ஏற்ற செய்திகளை தமிழ் மக்களின் தலையில் வைத்து அரைத்தனர். பேரினவாதம் புலிகள் போல் அனைத்தையும் வேட்டையாடத் தொடங்கியவுடன், ஊடகவியலாளர்கள் கூறித் திரிந்த இந்த புலி ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். தங்கள் அறிவுசார் மேலாண்மை மற்றும் முன்னைய மற்றைய இயக்க தொடர்புகள் மற்றும் அடையாளங்கள் மூலம், தாம் முற்போக்காக மக்களுக்கு ஊடகவியலை செய்ததாக இன்று காட்டிக்கொள்ளுகின்றனர். இன்று வரை புலியை விமர்சனம் செய்யாத சூக்குமத்தின் பின் நின்று கொண்டு தான், ஊடக அடையாளம் மூலமான பிழைப்பை இன்று நடத்த முடிகின்றது.