வன்னி மக்களிடம் எதுவும் எஞ்சக் கூடாது என்பது தான் அரசின் கொள்கை. அந்த மக்களிடம் எஞ்சி இருந்ததை சட்டப்படி பறிக்க முடியாது. அதை சட்டப்படி பறிக்கும் வண்ணம், மீள்குடியேற்றத்தை பன்நாட்டு கம்பனிகளுடன் இணைந்து மிக நுட்பமாக நடத்தி முடித்திருக்கின்றது. யுத்தத்தின் பின்னான மீள்குடியேற்றம் மூலம், அந்த மக்கள் தம்மிடம் எஞ்சியதையும் இழந்துள்ளனர். இது எப்படி திட்டமிட்டு அரங்கேற்றபட்டது என்பதைப் பார்ப்போம்.