Language Selection

பி.இரயாகரன் - சமர்

வன்னி மக்களிடம் எதுவும் எஞ்சக் கூடாது என்பது தான் அரசின் கொள்கை. அந்த மக்களிடம் எஞ்சி இருந்ததை சட்டப்படி பறிக்க முடியாது. அதை சட்டப்படி பறிக்கும் வண்ணம், மீள்குடியேற்றத்தை பன்நாட்டு கம்பனிகளுடன் இணைந்து மிக நுட்பமாக நடத்தி முடித்திருக்கின்றது. யுத்தத்தின் பின்னான மீள்குடியேற்றம் மூலம், அந்த மக்கள் தம்மிடம் எஞ்சியதையும் இழந்துள்ளனர். இது எப்படி திட்டமிட்டு அரங்கேற்றபட்டது என்பதைப் பார்ப்போம்.

 

மீண்டும் தமிழக சட்டசபையில் நடந்த கேலிக்கூத்து. மீண்டும் ஈழ மக்களின் அவலத்தை வைத்து பிழைப்புவாதிகள் அரசியல் கூத்து நடத்துகின்றனர். தமிழக மக்களையும், ஈழ மக்களையும் ஏமாற்றும், மற்றொரு வரலாற்றுத் துரோகம்.

இலங்கை மீதான பொருளாதாரத் தடைக்கான கோரிக்கை, அரசியல் மோசடியாகும். நடைமுறைச் சாத்தியமற்ற பூச்சாண்டித்தனமாகும். கண்கட்டுவித்தை மட்டுமின்றி, கானல் நீராகும்.

 

வன்னியின் இறுக்கமான கண்காணிப்பும் சமூக பொருளாதார நெருக்கடியும், பாலியலில் தளர்ச்சியை உருவாக்குகின்றது. ஆண்கள் குறைந்த சமூகத்தில், ஆணாதிக்கம் பெண்களின் இயல்பான சுயத்தை அழிக்கின்றது. இதனால் ஏற்படும் பாலியல் சீர்கேடுகள், விபச்சாரத்தை வன்னியின் விளைபொருளாக்கப் போகின்றது. இதை மாற்றி அமைக்க முனையாத வரை, வன்னி மீண்டும் ஒரு அழிவை நோக்கியே செல்லும். இதுவொரு முன்கூட்டிய எச்சரிக்கை.

 

நாடுகளுக்குள்ளான முரண்பாடுகள் ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் சரணடையும் போது, மக்களின் மேலான ஓடுக்குமுறை வெளிப்டையான வன்முறை வடிவத்தை எடுக்கின்றது. இந்த வகையில் தான், இலங்கையும் பயணிக்கின்றது. யுத்தத்தின் பின் தனிமைப்பட்டு, ஒட்டு மொத்த மக்கள் மேலான அடக்குமுறையை ஏவுகின்றது. பலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து தனதாக்கிய இஸ்ரேல் பாணியில், தமிழ் பிரதேசத்தின் அடையாளத்தை அழிக்கின்றது. தனக்கு எதிரான சர்வதேச நெருக்கடியிலிருந்து தப்ப, ஏகாதிபத்திய முரண்பாட்டை தனக்கு சாதகமாகக் கொண்டு தமிழ் பகுதியை இல்லாததாக்குகின்றது. இஸ்ரேல் எதைச் செய்ததோ, அதையே இலங்கை செய்கின்றது.

 

குறுகிய சிந்தனையும் நம்பிக்கைளும், அதைச் சார்ந்த இனவாத அரசியல் எல்லாம், மக்களின் சொந்த நடைமுறை மூலம் மறுப்புக்குள்ளாகின்றது. மக்கள் மேலான ஒடுக்குமுறை என்பது வெறும் இனம் சார்ந்ததல்ல. இதை மகிந்த குடும்ப சர்வாதிகாரம் தன் சொந்த நடைமுறை மூலம் எடுத்துக் காட்டுகின்றது.

இராணுவ ஆட்சியின்றி இலங்கையில் மகிந்த குடும்பத்தின் ஆட்சி இனி நீடிக்க முடியாது. இராணுவரீதியாக நாட்டை ஆளும் தயாரிப்புகள் ஆங்காங்கே அரங்கேறி வந்த நிலையில், தொழிலாளர் போராட்டத்தை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்கத் தொடங்கியுள்ளது.

 

அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் பூராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் அவர்கள் கொடுக்க முனைவது, பிச்சைக்காசுதான். இந்தப் பிச்சைக் காசைக் கொடுக்க, அரசு தன் நிதி எதையும் கொண்டு முன்னெடுக்கவில்லை. மாறாக ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை, அரசு தனதாக்கி அதைக்கொண்டு பிச்சை போடும் திட்டத்தைத்தான் ஓய்வூதியமாக அரசு அறிவிக்கின்றது. உலக வங்கியின் உத்தரவுக்கு அமைவாகத்தான், இதையும் கூட முன்னெடுக்கின்றது.

ஜ.நா அறிக்கையில் புலிகள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் வாதங்கள் ஊடாக, தம்மை முற்போக்குவாதிகளாகக் கட்டமைக்க முற்படுகின்றனர். சொந்த நாட்டில் முற்போக்காக போராட வக்கற்றவர்கள், ஈழ மக்களின் கண்ணீரைச் சொல்லி தொடர்ந்து பிழைப்பு நடத்துகின்றனர். இப்படி இந்திய தமிழினவாதிகளும், காசுக்கு எழுதும் யமுனா போன்ற பிழைப்புவாதிகளும் புலிகளைச் சொல்லிப் பிழைக்க, புலிகள் மீதான குற்றச்சாட்டை மறுக்கின்றனர். இதற்கு வெளியில் இதை மறுக்கும் நிலையில், இன்று புலத்துப் புலிகள் கூட காட்டமாக முனைவதில்லை. மக்கள் சந்தித்த கொடுமையும், அவலமும் எங்கும் நிறைந்ததாக இருப்பதால், புலத்துப் புலிகளால் கூட தர்க்கம் செய்ய முடியாதுள்ளது.

யுத்தத்தின் பெயரில் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், யுத்தத்தின் பின் அதை நிறுத்திவிடவில்லை. வடிவத்தை மாற்றியுள்ளனர். 1940 களில் எல்லையோரத்தில் திட்டமிட்டு நடத்திய இனவழிப்பு குடியேற்றம், யுத்தத்தின் பின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பேரினவாதம் தன் இனவழிப்புக்கு, இன்று பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி முன்னிறுத்துகின்றது. அரசு தன்னை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்தி, பேரினவாதத்தை முன்தள்ளுகின்றது. ஆயுதம் மூலமான இனவழிப்பு புலிகளின் அழிவுடன் முடிந்த நிலையில், பௌத்த மதத்தைக் கொண்டு அதைச் செய்கின்றது. யுத்தத்தின் பின்னான இனவழிப்பில் இன்று மதம் பயன்படுத்தப்படுகின்றது.

 

வடக்கு கிழக்கில் நிலவும் மகிந்த குடும்பத்தின் இராணுவ ஆட்சியை, இலங்கை முழுக்க திணிக்கும் ஒரு படிக்கல் தான் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சி. வடக்கு கிழக்கு உற்பத்திப் பொருட்களை தன் இராணுவ ஆட்சி மூலம் மலிவு விலையில் வாங்கி, அதை மலிவாக சிங்கள மக்களுக்கு விற்றதன் மூலம் இலங்கையில் இராணுவ ஆட்சியின் அவசியத்தை புரியவைக்க முனைந்த பேரினவாத அரசுதான், இன்று கட்டாய இராணுவப் பயிற்சியை மாணவர்களுக்கு திணித்துள்ளது. மகிந்த முன்தள்ளும் பாசிச சிந்தனையின் மகத்துவம் இதுதான்.

 

உலகளவில் தன மூலதனக் கொள்ளைக்கு தலைமை தாங்கிய மேட்டுக்குடிக் கும்பலைச் சேர்ந்த ஐ.எம்.எஃப் தலைவர் ஸ்ட்ரௌஸ் கான், திட்டமிட்டு பலியிடப்பட்டாரா! அல்லது கையும் மெய்யுமாக பிடிபட்ட ஆணாதிக்கப் பொறுக்கியா! இங்கு தான் பெண்ணியம், சட்டம் நீதி பற்றிய பிரiமைகள், பணம் சார்ந்த நடத்தை நெறிகள், மூலதனத்தின் கவிழ்ப்புகள், மேட்டுக்குடிக் குழிபறிப்புகள், ஏகாதிபத்திய சதிகள் என்று எல்லாம் பின்னிப்பிணைந்து ஒன்றையொன்று மூடிமறைத்தபடி அரங்குக்கு வருகின்றது.

மக்களை பலியிட்டு தங்களை காப்பாற்றிக் கொள்ள முயன்ற புலிகள், இறுதியில் மே 17 சரணடைந்தனர். இதைத்தான் எல்லா ஆவணங்களும், வெளிவரும் சாட்சியங்களும் உறுதி செய்கின்றது. இப்படியிருக்க மே 18 யை புலிகள் எதனடிப்படையில் முன்னிறுத்துகின்றனர்? தங்கள் சொந்த மக்கள் விரோதத்தை அடிப்படையாக கொண்டு தான், தங்கள் மக்கள் விரோத அரசியலை மூடிமறைக்கத்தான், புலிகளை மட்டும் முன்னிறுத்தி மே 18 ஜ புலிகள் தெரிவு செய்தனர்.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE