உங்கள் குடுப்பத்தில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு இது போன்று நடந்திருந்தால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? முஸ்லீம் சமூகத்திலிருந்து எந்த அறிவுத்துறையினரும் இந்த இஸ்லாமிய ஆணாதிக்க அடிப்படைவாத வக்கிரத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. இதை வெறும் கலாச்சாரப் பிரச்சினையாகக் காட்டி மூடிமறைக்கவே முனைகின்றனர்.
பி.இரயாகரன் - சமர்
பி.இரயாகரன் - சமர்
புலிகள் திருந்திவிட்டனராம்! புலியைப் பூனையாக்கும் இடதுசாரிய கோயபல்சுகள்
அண்மையில் இலண்டனில் புலிகள் வன்முறை ஓன்றை அரங்கேற்றினர். இந்த வன்முறை, புலி அரசியல் நடத்திய வன்முறையல்ல என்பது தான், புலியை நம்பி திடீர் இடதுசாரிய அரசியல் செய்யும் கூட்டத்தின் அரசியல் விளக்கமாகும். நடந்த வன்முறையை "காடையர்கள்" வன்முறையாக. "புலி ஆதாரவாளர்கள் செயல்பாட்டாளர்களின்" வன்முறையாக, "புலி வால்களின்" வன்முறையாக சித்தரித்தனர். இதை மேலும் நுட்பமாக திரித்து "மீண்டும் வன்முறை" என்று கோயபல்சுகள் பாணியில் புளுகுகின்றனர்.
புலிகள் செய்த குற்றங்கள் தற்காப்பு நிலையிலானதா!? கையறு நிலையிலானதா!?
அரசு செய்த குற்றங்களை அரசியல் ரீதியாக காட்டுபவர்கள், புலிகள் செய்த குற்றத்தை அதன் அரசியலுக்கு அப்பால் நிகழ்ந்த தற்காப்பு மற்றும் கையறு நிலை சார்ந்த ஒன்றாக திரித்துக் காட்ட முனைகின்றனர். இப்படி உண்மையைத் திரிப்பதன் மூலம், புலியை அண்டி பிழைக்கும் சந்தர்ப்பவாத அரசியலை முன்தள்ளுகின்றனர். கடந்த பத்தாண்டுகளாக புலியை விமர்ச்சிக்காத, நடந்த உண்மை நிகழ்வுகளை திரித்த இடதுசாரிய சந்தர்ப்பவாத அரசியல்தான், புலியை விமர்சனத்தில் இருந்து பாதுகாக்கின்ற அபாயகரமான அரசியல். இந்த இடதுசாரியம் புலிகளால் மக்கள் சந்தித்த துயரத்தை பேசாத இடதுசாரியமாகும். மக்கள் தங்கள் சொந்த அனுபவம் ஊடாக சுயாதீனமாக புலி அரசியலை இனங்கண்டு கொள்வதைக் கூட, தடுத்து நிறுத்துகின்ற அரசியல் இது.
பிரபாகரனையும், பிரபாகரன் குடும்பத்தையும் சித்திரவதை செய்து கொன்ற காட்சியை புலிகள் தயாரிப்பதாக அரசு கூறுகின்றது.
தனது தொடர்ச்சியான பாரிய குற்றங்களை மறைக்க முனையும் அரசு, உளறத் தொடங்கியுள்ளது. நடந்தவற்றை சுயாதீனமாக விசாரிக்க மறுக்கும் அரசு, உண்மையைப் புதைக்க புலம்புகின்றது. அனைத்தையும் பொய், புனைவு என்று இட்டுக்கட்டி மறுக்கும் அரசு, தன் குற்றத்தை மறைக்க தன்னைக் குறுக்கி வன்முறை கொண்ட இராணுவ வடிவமெடுத்து வருகின்றது.
நடந்ததை மறுக்க, மறைக்க முனைந்த நிலையில், புதிய இரண்டு சர்ச்சைக்குரிய தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது.
ஒடுக்குவதன் மூலம் தான், மகிந்த சிந்தனை வாழமுடியும்
"தீயசக்திகள்" தான் கூட்டணி மீதான வன்முறைகளை நடத்தின என்கின்றார், வடக்கு வன்முறைகளுக்கு தலைமை தாங்கும் இராணுவத் தளபதி. இலங்கையில் தாம் அல்லாத அனைத்தையும், அனுமதிக்கக் கூடாது என்பதுதான் மகிந்த சிந்தனை. வடக்கில் கூட்டமைப்பின் கூத்தாடும் குறுந்தேசியக் கூட்டமாக இருக்கட்டும், கட்டுநாயக்காவில் மக்கள் தம் உரிமைக்கான போராட்டமாக இருக்கட்டும், எதையும் அனுமதிக்கக் கூடாது. இதைத்தான் இராணுவம் மற்றும் பொலிசுக்கு மகிந்த குடும்பம் இட்டுள்ள கட்டளை.
பெண்கள் மேல் பேரினவாதம் நடத்திய பாலியல் யுத்தம்
பயங்கரவாதத்தின் பெயரில் அரசும் அதன் படையும் எதையும் செய்யலாம் என்ற விதிக்கமைய, பெண்கள் மேல் பாலியல் வன்முறை ஏவப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக கையாண்ட ஆயுதங்களில் ஒன்று ஆணாதிக்கம். ஆம் பெண்கள் மேலான பாலியல் வன்முறை. அச்சம் காரணமாக அல்லது நிர்ப்பந்தம் காரணமாக இணங்கும் பாலியல் வன்முறை முதல் பெண் பிணத்தை நிர்வாணமாக்கி புணரும் ஆணாதிக்க வன்மம் வரையான அனைத்தையும் பேரினவாதம் செய்தது. பேரினவாதத்தின் பின்னணியில், யுத்தத்தின் பின்னணியில் இவை அரங்கேறியது. இதற்கு நிகராக ஆணாதிக்க புனிதம், இதையெல்லாம் தன் பங்குக்கு மூடிமறைத்தது.
புலிகளின் வதையை அனுபவித்த மணியண்ணை, பேரினவாதத்துடன் நின்று அதை வரலாறாக்குகின்றார் - (மணியத்தின் அரசு ஆதாரவு அரசியல் - 01)
தனக்கு நடந்ததை உள்ளபடி எதையும் சாராது சொல்லுதல் அல்லது மக்களைச் சார்ந்து நின்று சொல்லுதல் வரலாற்றுக்கு அவசியமானது. இதுவல்லாத வரலாறு, மக்களுக்கு எதிரானதான, உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையில் இரண்டு வகையான வதை அனுபவத்தை பெற்றவர்கள் உள்ளனர். அரசு - இயக்கம் என்று இரண்டு தளத்தில் அல்லது இரண்டையும் அனுபவமாகக் கொண்டவர்கள் வாழ்கின்றனர். இங்கு இதை பொதுத்தளத்தில், மக்களைச் சார்ந்து சொல்லாத சார்புத்தனம், ஒருபக்க உண்மையை மூடிமறைத்து அதன் அரசியல் நோக்கத்துக்கு உதவுதலாகும்;. இதைத்தான் மணியம், அதாவது மணியண்ணை செய்கின்றார்.
போலியான தேர்தல் ஜனநாயக உரிமை கூட, வடக்கு கிழக்கில் மறுக்கப்படுகின்றது
போலி தேர்தல் ஜனநாயகம் மூலம், மக்களை தெரிவு செய்த உறுப்பினர்கள் கூட வடக்கு கிழக்கில் சுதந்திரமாக இயங்க முடியாதுள்ளது. மிரட்டப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர், அவர்களின் பொதுக்கூட்டங்கள் அடித்து நொருக்கப்படுகின்றது. மக்களின் கதியை எண்ணிப்பாருங்கள். வடக்கில் வசந்தமும், கிழக்கின் உதயமும் இதுதான். இப்படி ஒரு குடும்பத்தின் ஆட்சி, தன் சர்வாதிகாரத்தை மகிந்த சிந்தனை என்கின்றது.
சனல் 4 ஆவணத்தில் 5 நிமிடங்களை நீக்கியது யார்? நீக்கியது ஏன்? (முழுமையான வீடியோக் காட்சியை பார்க்க)
இதுவெல்லாம் யாரை முட்டாளாக்க!? பாவம் தமிழ்மக்கள். இலட்சக்கணக்கானவர்கள் பார்த்து இதுதான் முழுமையான காட்சி என்று நம்பிய காட்சிகளில் 5 நிமிடங்களில்லை.
இந்தப் போர்க்குற்ற ஆவணத்தினைத் தயாரிக்க இதன் பின்னணியில் இருந்தவர்கள், இந்தக் குற்றத்துக்கு எதிரான சிங்கள இனத்தைச் சேந்தவர்கள் தான். அவர்கள் இராணுவத்திடம் இருந்து சேகரித்த, யுத்தத்தின் பின்னணியில் அரங்கேறிய காட்சிகள் தான் இந்த ஆவணத்துக்கு வலுச்சேர்கின்றது.
தீபம், அதிர்வு, இனியொரு ஊடகங்கள், ஊடகம் பற்றி நடத்திய கேலிக்கூத்து
மக்களுக்கு உண்மைகளைச் சொல்லாத ஊடகம் மற்றும் ஊடகவியலாளனின் உரிமை பற்றி பேசும் அரசியல் மக்கள் விரோதமானது. இது மக்களுக்கான உரிமையை மறுப்பதை, ஊடகவியலாளனின் உரிமையாக சித்தரிப்பதாகும். இங்கு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலில் சிக்கும் ஊடகம் மற்றும் ஊடகவியலாளனின் சார்பு நிலைப்பாடு, மக்களைச் சார்ந்து நின்றதால் ஏற்பட்ட உரிமைப் பிரச்சனையல்ல. இதை அரசியல் ரீதியாக மதிப்பிடுவதன் மூலம் தான், இதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தவேண்டும்.
கச்சதீவு இந்தியாவிடம் இருந்திருந்தாலும், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு தான் இருப்பார்கள்
இது எங்கும் தளுவியதொரு உண்மை. இப்படியிருக்க கச்சதீவை மீளப்பெறுதல் பற்றி அம்மாவும், தமிழினவாதிகளும் மக்களை ஏய்க்க நாடகம் போடுகின்றனர். கச்சதீவு இருந்ததால், அதை மீட்டால் எல்லாம் சரியாக இருந்திருக்கும் என்று கூறி மக்களின் காதுக்கு பூ வைக்கின்றனர். மக்களை ஏய்த்து அரசியலில் மோசடி செய்து பிழைக்கின்ற கூட்டத்துக்கு கச்சதீவு ஒரு துடுப்பு.
சரி, இவர்கள் கோருவது போல் கச்சதீவு இந்தியாவிடம் இருந்திருந்தால், மீனவர் படுகொலை நடந்திருக்காதா!? நடந்திருக்காது என்று சொல்லுகின்ற தமிழக ஈழத் தமிழினவாத லூசுகளால், எப்படித் தமிழக மீனவர் பிரச்சனையை உண்மையாகவும் நேர்மையாகவும் அணுகிப் பார்க்க முடியும்!