Language Selection

பி.இரயாகரன் - சமர்

வெள்ளையினப் பயங்கரவாதம் நோர்வேயில் நடத்திய படுகொலை, மேற்கை அதிரவைத்திருக்கின்றது. இந்தப் பயங்கரவாதத்தை ஒருங்கிணைத்திருந்தது வெள்ளையினத் தேசியவாதமும், கிறிஸ்துவவாதமுமாகும். இஸ்லாமியப் பயங்கரவாதம் தான் இந்த நாகரிக உலகின் காட்டுமிராண்டித்தனம் என்று நம்பிய வெள்ளையினக் கற்பனைகளை எல்லாம் இது தூள் தூளாகத் தகர்த்திருக்கின்றது.

 

குறுந்தேசியம் - பேரினவாத தேசியம் இவ்விரண்டுக்கும் பின்னால் இடதுசாரியம் காணாமல் போனது. முரணற்ற தேசியத்தையும், அதனடிப்படையிலான சுயநிர்ணயத்தையும் உயர்த்தி மக்களை சார்ந்து நிற்கத் தவறியது. இந்த இடதுசாரியம் குறுகிய இனவாதிகளின் பின் மக்கள் நிற்பதாக கூறிக் கொண்டு, இனவாதிகளுக்கு ஏற்ற அரசியலை முன்னெடுத்துக்கொண்டு, மக்கள் போராட்டத்தை இல்லாதாக்கியது. இந்த அடிப்படையிலான இடதுசாரிய அரசியலே இன்னமும் தொடருகின்றது. இதன் விளைவாக இன்று வரை புலம் - தமிழகம் - இலங்கை என்று எங்கும், இனவாதிகள் தான் தீர்மானகரமான சக்திகளாக தொடர்ந்து நீடிக்கின்றனர்.

 

தேசியம் வர்க்கம் கடந்த அரசியல் கூறல்ல. வர்க்கம் சார்ந்ததாக தேசியம் உள்ள வரை புலி - கூட்டமைப்பு அரசியல் முன்வைக்கும் "தேசியமோ" தேசியமேயல்ல. தேசியம் பற்றிய வர்க்கக் கண்ணோட்டம் மிகத் தெளிவாக தேசியம் என்றால் என்ன என்பதை வரையறுக்கின்றது. இப்படியிருக்க, தான் அல்லாத வர்க்க அரசியலின் பின் தேசியமும் தேசிய சக்திகளும் இருக்கின்றது என்று கூறுவது மோசடியல்லவா? இது வர்க்கம் கடந்த ஒன்றாக தேசியத்தை புனைகின்ற, பொதுப்புத்தி சார்ந்து முன்தள்ளும் இடதுசாரிய அரசியல் புரட்டாகும். அரசியல் வெற்றிடத்தில் (புரட்சிகர சக்திகள் கையில் எடுக்காத அரசியல் வெற்றிடத்தில்) இது எதிர்புரட்சி அரசியலாகத் தொடருகின்றது.

மக்களை வகைதொகையின்றி கொன்று யுத்தத்தை வென்ற அரச பயங்கரவாதம், மக்களை மிரட்டி வெல்லமுனையும் தேர்தல் பயங்கரவாதத்தை மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. எங்கும் எதிலும் வடக்கின் "வசந்த"மாகி விட்ட அரச பயங்கரவாதமும், அது வழிகாட்டும் தேர்தல் "ஜனநாயக"த்தின் வெட்டுமுகமும் வன்முறைதான். மகிந்த வழங்கிய வடக்கின் "வசந்தமும்", தேர்தல் "ஜனநாயகமும்" எது என்பதை, தங்கள் சொந்த நடத்தைகள் மூலம் அவர்களே வெளிப்படுத்துகின்றனர்.

கணிதத்தில் இரண்டு எதிர்மறைகள் ஓன்றை ஒன்று பெருக்கி நேராவது போல்தான், சமூகத்தில் எதிர்மறைகள் ஒன்று சேர்ந்து தம்மை நேராக்குகின்றது. அரசியல் - இலக்கிய பச்சோந்தித்தனமும், சிவத்தம்பியின் அறிவும், எதிர்மறையானது மட்டுமல்ல, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவை ஓன்றையொன்று சார்ந்து, தம்மை நேர்மையானதாகவும், நாணயமானதாகவும் காட்ட முனைகின்றது. அண்மையில் மரணமான சிவத்தம்பியின் மரணம் தரும் இயல்பான துயரங்கள் ஒருபுறம், மறுபக்கத்தில் மரணத்தை முன்னிறுத்தி தம்மை அடையாளப்படுத்த முனையும் அரசியல் - இலக்கிய முயற்சிகள். வழமை போல் மரணம் மூலம் தம்மை முன்னிறுத்த முடியாது போன கவலைகளும், கோபங்களும் பலருக்கு. அரசியல் - இலக்கிய பிழைப்பை நடத்த முடியாத அளவுக்கு, அவரை நாம் அம்பலப்படுத்தியிருந்தோம். இருந்த போதும் அவரின் புலமையை முன்னிறுத்தி, அரசியல் சிணுங்கியபடி வெளிவந்தது. இது அவரின் புலமையற்ற நடைமுறை வாழ்வுசார் அரசியலுக்கு வெளியில் தான், அவரின் புலமைசார் தமிழ் - இலக்கியம் உள்ளதாக காட்ட முற்படுகின்றது.

சுயநிர்ணயத்தை வரையறுக்கும் அரசியல்ரீதியான உள்ளடக்கம், என்றும் பிற்போக்கானதல்ல, அடையமுடியாதல்ல. இந்த வகையில் தமிழீழம் இதற்கு உட்பட்டது. இங்கு எந்த வர்க்கம் இதைத் தன் கையில் எடுக்கின்றது என்பதுதான், புரட்சிகரமானதா எதிர் புரட்சிகரமானதா என்பதைத் தீர்மானிக்கின்றது. இதற்குரிய அரசியல் சாத்தியப்பாட்டையும், அதன் அரசியல் போக்கையும் கூட இதுதான் தீர்மானிக்கின்றது. இங்கு இதன் வர்க்க அரசியல் தான் இதை வரையறுக்கின்றது.

புலிகளின் வதைமுகாம் அனுபவத்தை, புலியெதிர்ப்பு அரசுசார்பு ஊடகமான தேனீயில் மணியண்ணை தொடர்ந்து எழுதி வருகின்றார். அதில் அவர் "தமிழ் ஈழ" கோசம் காரணமாகத் தான் "தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி"யில் இருந்து விலகினேன் என்று கூறுவது, அரசியல் ரீதியான புரட்டு. இதனால் தான் "நாம் அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டித்திருந்தோம்" என்று எழுதும் மணியண்ணை, அந்த "நாம்" யார்? அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் இப்போது எங்கே? அவர்கள் செய்த அரசியல் தான் என்ன? என்று கூறுவாரா? இங்கு "தமிழ் ஈழ" கோசத்தால் தான் தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியில் இருந்து விலகினேன் என்ற அரசியல் புரட்டும், அதனூடு சந்தர்ப்பவாத அரசியலையும் முன்வைக்கின்றார். "நான் எப்பொழுதும் மார்க்சிச – லெனினிச நிலைப்பாட்டிலிருந்தோ, கட்சி நிலைப்பாட்டிலிருந்தோ என்னை விலகாமல் பார்த்துக் கொண்டேன்." என்று எழுதும் அவர், இந்த கொள்கையின் அடிப்படையில் அவர் செயல்பட்ட அரசியல் நடைமுறைகளும், அவர் கொண்டிருந்த கருத்துகளும் தான் எவை எனக் கூறவேண்டும்.

 

நிகழ்வுகள் மேல் அந்தக் கணமே உணர்வுபூர்வமான உணர்ச்சியுடன் வழிகாட்ட முடியாத செயலற்ற தனம்தான், செயலுக்கு எதிரானது. சமூக மாற்றத்துக்குரிய அரசியலை இது இன்று இல்லாதாக்குகின்றது. இது எம்மைச் சுற்றிய அரசியலாக எங்கும் காணப்படுகின்றது. காலம்கடந்த பின்னான விமர்சன முறைமையே, அறிவுசார் உலகத்தின் பொதுப்பண்பாக மாறியுள்ளது. வலதுசாரியம் சமூகத்தில் இயங்குகின்ற வேகத்தில், அது கருத்துகளை உருவாக்கும் வேகத்திலும் இடதுசாரியமில்லை. இது இடதுசாரிய அரசியல் போக்கில், சந்தர்ப்பவாத அரசியலாக வெளிப்படுகின்றது.

 

இனியொருவும்-புதியதிசையும் தங்கள் திடீர் அரசியலுக்கு ஏற்ப, தாங்கள் புலியுடன் நடத்தும் புலி அரசியலுக்கு ஏற்ப, புலியைப் புரட்சிகரமானதாக காட்ட, புலியைத் திரிக்கின்றனர். அதே நேரம் புலி மூன்றாகப் பிரிந்து கிடப்பதாக படம் போட்டுக் காட்டுகின்றனர்.

"தமிழ்ப்பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நேர்மையாகப் பங்காற்ற விரும்புவோர்" என்ற அரசியல் உள்ளடக்கத்தில், புலிகள் எதார்த்தத்தில் பிரிந்து இருக்கின்றனரா? எனில் இல்லை. அரசியல் ரீதியாக, நடைமுறைரீதியாக "நேர்மையான" தேசியத்தை முன்னிறுத்தி, மற்றைய இரு போக்குகளையும் விமர்சிக்கின்ற புலித் தேசியவாதிகள் அணி என எதுவும் தன்னை எதார்த்தத்தில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. தங்கள் புலி அரசியலுக்கு ஏற்ப, கற்பனையில் புலிக்குள் இந்த அணியுடன் தான் தாங்கள் அரசியல் செய்வதாகக் கூறி அதற்கு படம் போட்டுக் காட்டுகின்றனர்.

மனித படுகொலைகளுக்கும், மக்கள் மேலான வன்முறைக்கும், புலிகளா இலங்கை அரசா வழிகாட்டி என்று கேட்டு பட்டிமன்றம் நடத்தலாம். ஒன்றையொன்று மிஞ்சிய, மிஞ்சுகின்ற மனிதவிரோதிகள்தான் இவர்கள். புலிகளின் வன்னித் தலைமையின் அழிவின்பின், புலத்துப் புலிகள் அதை நிறுத்திவிடவில்லை. வன்முறையை ஏவுகின்றனர். அதை நியாயப்படுத்தியும், வன்முறையை தொடரும்படியும் புலிகளின் "ஒரு பேப்பர்" எழுதுகின்றது. பார்க்க "ஒரு பேப்பர்"ரை.

 

உண்மையை மூடிமறைக்க, சர்ச்சைகளை உருவாக்கி காலத்தை நீடிக்க, அசல் வீடியோவின் பெயரில் போலி வீடியோ ஒன்றை அரசு தயாரித்துள்ளது. மொழிமாற்றம் மூலம் புலிகள் செய்ததாக புனைந்து காட்ட முனைகின்றது. இதனால் தான் முழுமையான வீடியோவை வெட்டி ஒரு பகுதியைக் காட்டுகின்றது. முழுமையான வீடியோ பெண்களை நிர்வாணமாக்கி ரசிக்கின்ற காட்சிகளை உள்ளடக்கியதுடன், அந்தப் பெண் உறுப்பினர் யார் என்று அடையாளம் காணவும் முடிகின்றது.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE